6.3.11

ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதின் அவசியம்.


இன்றைக்கு இஸ்லாமியர்கள் பலஅமைப்பினராகவும்பல்வேறுகொள்கையினராகவும் பிரிந்து கிடக்கின்றனர்.ஒவ்வொரு அமைப்பினரும்கொள்கையினரும்தாங்கள் செல்லும் வழியே மேலானது எனவும்போதிக்கின்றனர்ஆனால் குர்ஆனும்நபிவழியும் எதனை மேலானது என்றும்எதுஇம்மையிலும்மறுமையிலும் நமக்கு பலன்தரக்கூடியது என்று வலியுறுத்துகிறதோஅதற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லைஒவ்வொரு முஸ்லிமும் எதனைமுதன் முதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதை திருக்குர்ஆன் மூலம் நாம்காண்போம்இதோ அல்லாஹ் கூறுகிறான்.
(முஹம்மதே!) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக!
 (அல்குர்ஆன் 47 : 19)

ஒவ்வொருவரும் முதன் முதலில் ஓரிறைக் கொள்கையைத்தான் அறிந்து கொள்ளவேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் வலியுறுத்துகிறதுஆனால் பெரும்பாலானமுஸ்லிம்கள் இந்த விஷயத்தில் கவனமற்றவர்களாகவே உள்ளனர்.
                
ஒவ்வொருவரும் முதன் முதலில் ஓரிறைக் கொள்கையைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறும் போது நாங்கள் ஓரிறைவனைத் தானேவணங்குகிறோம் என்று பெரும் பாலான முஸ்லிம்கள் கூறுகின்றனர்இதுஅவர்களின் அறியாமையையே காட்டுகிறதுஅல்லாஹ் மட்டுமே ஒரு இறைவன்என்று கூறுவதால் ஒருவன் ஏகத்துவக் கொள்கையை ஏற்றவனாககருதப்படமாட்டான்மாறாக இறைவனுக்குரிய ஒரு பண்பைஅவனல்லாதவர்களுக்கு இருப்பதாகக் கருதினாலோ அல்லது அல்லாஹ் அல்லாதஒரு பொருளுக்கு இறைத்தன்மை இருப்பதாக நம்பினாலோ அவன்  இஸ்லாத்தைவிட்டும் வெளியேறி விடுவான்மறுமையில் நிரந்தர நரகத்திற்குச் சொந்தக்காரனாகிவிடுவான்இதன் காரணமாகத்தான் இறைவன் இதனைக் கற்றுக் கொள்ளுமாறுகட்டளையிடுகிறான்.

அல்லாஹ் நம்மை படைத்ததின் நோக்கம்
நபி(ஸல்அவர்கள் கூறினார்கள் :  அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை,அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை வணங்குவதாகும்அல்லாஹ்அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு எதையும் இணை கற்பிக்காதவரைவேதனை செய்யாமல் இருப்பதாகும்.
அறிவிப்பவர் :  முஆத்(ரலி)   நூல்புகாரீ (2856)
                
நபி(ஸல்அவர்கள் கூறினார்கள் : யார் அல்லாஹ்வுக்கு எதையும்இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார்யார் இணைகற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.
நூல் : ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி)             நூல் : புகாரீ (1238)

இஸ்லாத்தின் முதல் தூண் ஏகத்துவக் கொள்கை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்இஸ்லாம் ஐந்து(தூண்கள்)மீது நிறுவப்பட்டுள்ளது. (அவை:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன்இல்லை என்றும்முஹம்மத் (ஸல்அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும்அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழி அளிப்பதுதொழுகையைக்கடைப்பிடிப்பதுஸகாத் வழங்குவதுஇறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது;ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.  
 அறிவிப்பவர் :  அப்துல்லாஹ் பின் உமர் (ரலிரி)   நூல் : முஸ்லிம்.

இறை நம்பிக்கையின் முதல் நிலை ஏகத்துவக் கொள்கை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்இறைநம்பிக்கை என்பது'எழுபதுக்கும் அதிகமானஅல்லது 'அறுபதுக்கும் அதிகமானகிளைகள்கொண்டதாகும்அவற்றில் உயர்ந்தது 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன்இல்லைஎன்று கூறுவதாகும்அவற்றில் தாழ்ந்ததுதொல்லை தரும் பொருளைப்பாதையிரிருந்து அகற்றுவதாகும்நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான். 
அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலிநூல் : முஸ்லிம் (58)
                
ஓரிறைக் கொள்கைக்கு நேர் எதிரானது இணைவைப்புக் காரியங்களாகும்.இந்த இணைவைப்புக் காரியங்களின் பேராபத்தை ஒருவன் உணர்ந்து கொண்டால்எல்லாவற்றிற்கும் மேலாக இதைக் கற்றுக் கொள்வதற்குத்தான் முக்கியத்துவம்தருவான்இதை அறியாதவர்களாக இருப்பதினால்தான் இதனை ஒரு பொருட்டாகக்கருதாமல் மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்இவை ஒருமனிதனுக்கு எவ்வளவு பேராபத் தானவை என்பதை பின்வரும் சான்றுகள் நமக்குதெளிவு படுத்துகின்றன.

ஓரிறைக் கொள்கையின் மகிமை
இறைவனுக்கு இணைகற்பிக்காதவர்கள் எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும்என்றாவது ஒருநாள் சுவர்க்கம் சென்றுவிடுவார்கள்இதிலிருந்தே நாம் ஓரிறைக்கொள்கையின் மகிமையை விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள், ''அல்லாஹ்வின் திருப்தியை நாடி 'லாயிலாஹஇல்லல்லாஹ்என்று எவரேனும் சொன்னால் அல்லாஹ் நரகத்தை அவர் மீது தடைசெய்துவிடுகிறான்'' என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர் : இத்பான் பின் மாலிக் (ரலி)  (புகாரி 4250

'அபூதர் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்நபி (ஸல்அவர்கள் வெள்ளை ஆடைஅணிந்தபடி உறங்கிக்கொண்டிருந்தபோது நான் அவர்கüடம் சென்றேன்பிறகுஅவர்கள் விழித்துக்கொண்டபோது (மீண்டும்அவர்கüடம் சென்றேன்அப்போது, ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிரவேறெவரும் இல்லைஎன்று சொல்லிபிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும்மனிதர் எவராயினும்அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்'' என்று நபி (ஸல்அவர்கள்சொன்னார்கள்நான், ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?'' என்று கேட்டேன்.நபி (ஸல்அவர்கள், ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம்புகுந்தே தீருவார்)'' என்று சொன்னார்கள்நான் (மீண்டும்''அவர் விபசாரம் புரிந்தாலும்திருடினாலுமா?'' என்று கேட்டேன்நபி (ஸல்அவர்கள், ''அவர் விபசாரம் புரிந்தாலும்திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்று சொன்னார்கள்நான்(மூன்றாவது முறையாக''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?'' என்றுகேட்டேன்நபி (ஸல்அவர்கள், ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி(சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர்இதை விரும்பாவிட்டாலும் சரியே)'' என்று கூறினார்கள்.
 புகாரி 5827)
                
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறெவருமில்லைஎன்றும் 'முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும்அவனுடைய தூதரும் ஆவார்என்றும் 'ஈசா (அலைஅவர்கள் அல்லாஹ்வின்அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச்சொன்ன ('ஆகுக!என்னும்ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்)என்றும், 'அவனிடமிருந்து (ஊதப்பட்டஓர் உயிர்என்றும், 'சொர்க்கம் (இருப்பதுஉண்மைதான்என்றும், 'நரகம் (இருப்பதுஉண்மை தான்என்றும்எவர் (சொல்லால் உரைத்து,உள்ளத்தால் நம்பிஉறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவரதுசெயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்.
அறிவிப்பவர் உபாதா (ரலி)  நூல் : புகாரி (3435)

அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள் : கிராமவாசி ஒருவர் நபி (ஸல்)அவர்களிடம் வந்து,  '' நான் சொர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு (நற்செயலை எனக்குக்கூறுங்கள்!'' என்றார்அதற்கு நபி (ஸல்அவர்கள், ''நீர் அல்லாஹ்வை வணங்கவேண்டும்அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாதுகடமையானதொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்ரமளானில்நோன்பு நோற்க வேண்டும்'' என்றார்கள்அதற்கவர், ''என் உயிர் எவன் கையில்உள்ளதோ அவன் மேல் ஆணையாகஇதைவிட அதிகமாக வேறெதைதையும் செய்யமாட்டேன்'' என்றார்அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்அவர்கள், ''சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்!''என்றார்கள்.
(புகாரி 1396)

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற் கோதுமையின்அளவு நன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லைஎன்று சொன்னாரோ அவர் நரகத்திரிருந்துவெளியேறிவிடுவார்எவர் தமது இதயத்தில் ஒரு மணிக்கோதுமையின் அளவுநன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்சொன்னாரோ அவரும்நரகத்திரிருந்து வெளியேறிவிடுவார்எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மைஇருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்சொன்னாரோ அவரும்நரகத்திரிருந்து வெளியேறிவிடுவார்.
அறிவிப்பவர் :  அனஸ் (ரலிநூல் : புகாரி (44)

அனஸ் பின் மாலிக் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள் :ஒரு பயணத்தில்வாகனமொன்றில்நபி (ஸல்அவர்களுக்குப் பின்னால் முஆத் (ரலிஅவர்கள்அமர்ந்திருக்கும்போதுநபி(ஸல்அவர்கள் ''முஆத் பின் ஜபலே!'' என்றுஅழைத்தார்கள்''அல்லாஹ்வின் தூதரேஇதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)'' என்று முஆத் (ரலிஅவர்கள் பதிலளித்தார்கள்'முஆதே!என மீண்டும்நபி (ஸல்அவர்கள் அழைத் தார்கள்''அல்லாஹ்வின் தூதரேஇதோ கீழ்ப்படியக்காத்திருக்கிறேன் (கூறுங்கள்)'' என மீண்டும் முஆத் (ரலிஅவர்கள் பதிலளித்தார்கள்.இவ்வாறு மூன்று முறை (அழைப்பும் பதிலும்நடந்ததுபிறகு நபி (ஸல்அவர்கள்''அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும்முஹம்மத் (ஸல்அவர்கள்அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உளப்பூர்வமாக உறுதிகூறும்  எவருக்கும்அல்லாஹ் நரகத்தைத் தடைசெய்து விட்டான்'' என்று கூறினார்கள்உடனே முஆத்(ரலிஅவர்கள் ''அல்லாஹ்வின் தூதரேஇந்தச் செய்தியை நான் மக்களுக்குஅறிவித்துவிடட்டுமா? (இதை கேட்டுஅவர்கள் புளகாங்கிதம் அடைவார்களே!''என்று கேட்டார்கள்அதற்கு நபி (ஸல்அவர்கள் ''(இல்லைவேண்டாம்இவ்வாறு நீர்அறிவித்தால் (அதைக் கேட்டுவிட்டுஅவர்கள் (இது மட்டும் போதுமே என்றுநல்லறங்களில் ஈடுபடாமல்அசட்டையாக இருந்து விடுவார்கள்'' என்றுகூறினார்கள்.
(கல்வியை மறைத்தகுற்றத்திரிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தறுவாயில்இந்த ஹதீஸை முஆத் (ரலிஅவர்கள் (மக்களுக்குஅறிவித்தார்கள்.
(புகாரி 99)
                
அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள் :நாங்கள் (ஒரு நாள்)அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம்எங்களுடன்அமர்ந்திருந்த சிலரில் அபூபக்ர் (ரலி)உமர் (ரலிஆகியோரும் இருந்தனர்அப்போதுஎங்களிடையேயிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் எழுந்து சென்றார்கள்.நெடு நேரமாகியும் அவர்கள் எங்களிடம் (திரும்பிவரவில்லைஅவர்களுக்கு(எதிரிகளால்ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்;நாங்கள் பீதி அடைந்தவர்களாக (அங்கிருந்துஎழுந்தோம்பீதியுற்றவர்களில் நானேமுதல் ஆளாக இருந்தேன்எனவேநான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களைத்தேடிக்கொண்டு புறப்பட்டேன்பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த அன்சாரிகளுக்குச்சொந்தமான ஒரு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன்அத்தோட்டத்தின் வாசல் எங்கேஎன்று (தேடியவனாகஅதைச் சுற்றி வந்தேன்ஆனால் (அதன் வாசலைநான்காணவில்லைஅத்தோட்டத்திற்கு வெளியே இன்னொரு தோட்டத்திரிருந்துவாய்க்கால் ஒன்று அதனுள் சென்று கொண்டிருந்ததுஉடனே நான் குள்ளநரிஉடலைக் குறுக்குவதைப் போன்று (என் உடலைக்குறுக்கிக் கொண்டு (அந்தவாய்க்கால் வழியே தோட்டத்திற்குள்நுழைந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களிடம் சென்றேன்அப்போது அவர்கள், ''அபூஹுரைராவா?'' என்றுகேட்டார்கள்நான், ''ஆம்அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன்''என்ன விஷயம்?'' என்றுகேட்டார்கள்''நீங்கள் எங்களிடையே இருந்து கொண்டிருந்தீர்கள். (திடீரெனஎழுந்துசென்றீர்கள்நெடு நேரமாகியும் நீங்கள் எங்களிடம் திரும்பவில்லைஎனவே, (எதிரிகளால்ஏதேனும் உங்களுக்கு ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று நாங்கள்அஞ்சினோம்பீதியுற்றோம்நான்தான் பீதியுற்றவர்களில் முதல் ஆளாவேன்.எனவேதான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று உடலைக்குறுக்கிக்கொண்டு இந்தத் தோட்டத்திற்கு வந்தேன்இதோ மக்கள் என் பின்னால்வந்துகொண்டிருக்கிறார்கள்'' என்று சொன்னேன்அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்அவர்கள், 'அபூஹுரைரா!' (என்று என்னை அழைத்துதம் காலணிகள்இரண்டையும் என்னிடம் கொடுத்து, ''இவ்விரு காலணி களையும் கொண்டு செல்!அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால்உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீசந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!''என்று கூறினார்கள்.
நான் உமர் (ரலிஅவர்களையே முதலில் சந்தித்தேன்அப்போது உமர் (ரலிஅவர்கள், ''இவை என்ன காலணிகள்அபூஹுரைரா?'' என்று கேட்டார்கள்அதற்கு நான் ''இவைஅல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களுடைய காலணிகள்அல்லாஹ்வைத் தவிரவேறு இறைவன் இல்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம்கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்றநற்செய்தி கூறுமாறு சொல்லி இக்காலணிகளை (ஆதாரமாக)க் கொடுத்து என்னைஅல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் அனுப்பிவைத்தார்கள்'' என்று சொன்னேன்.உடனே உமர் (ரலிஅவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள்நான்மல்லாந்து விழுந்தேன்''திரும்பிச் செல்லுங்கள்அபூஹுரைரா!'' என்றுசொன்னார்கள்உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களிடம் சென்றேன்.எனக்கு அழுகை அழுகையாக வந்ததுஎன்னைப் பின்தொடர்ந்து வந்த உமரும்அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார்என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள், ''அபூஹுரைராஉமக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள்.
நான், ''உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தைஅவரிடம் தெரிவித்தேன்அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார்நான் மல்லாந்துவிழுந்துவிட்டேன்பிறகு, 'திரும்பிச் செல்லுங்கள்என்று கூறினார்'' என்றேன்.அப்போது உமர் (ரலிஅவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள், ''உமரே!ஏன் இவ்வாறு செய்தீர்?'' என்று கேட்டார்கள்உமர் (ரலிஅவர்கள், ''அல்லாஹ்வின்தூதரேஎன் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில்சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம்கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக்கொடுத்து நீங்கள்தாம் அபூஹுரைராவை அனுப்பிவைத்தீர்களா?'' என்று கேட்டார்கள்.அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள், 'ஆம்என்றார்கள்உமர் (ரலிஅவர்கள், ''அவ்வாறு செய்யாதீர்கள்ஏனெனில்மக்கள் அதையே நம்பி (நற்செயல்களில்ஈடுபடாமல்இருந்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன்அவர்கள் (நற்)செயல்புரிய விட்டுவிடுங்கள்'' என்று கூறினார்கள்அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள், ''அவ்வாறே அவர்களை விட்டுவிடுங்கள் (அவர்கள் நற்செயல் புரியட்டும்)''என்று சொன்னார்கள்.
 (முஸ்லிம் 52)

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப்படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனினைதனியாக நிறுத்துவான்அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவஏடுகள்விரிக்கப்படும்அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின்அளவிற்கு இருக்கும்.  பிறகு அல்லாஹ் அவனிடம் இதிலிருந்து நீ எதையாவதுமறுக்கின்றாயா? (அல்லதுபாதுகாவலர்களாகிய  என்னுடைய எழுத்தாளர்கள்,உனக்கு அநீதி இழைத்து விட்டார்களாஎன்று கேட்பான்''என்னுடைய இரட்சகனேஇல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள்தான்என்று அவன் கூறுவான். (நீவேதனையிலிருந்து தப்பிக்கஉனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதாஎன்றுஅல்லாஹ் கேட்பான்அதற்கு அவன் ''என் இரடசகனே ஏதுமில்லை'' என்று கூறுவான். அப்போது அல்லாஹ் கூறுவான்அவ்வாறில்லை உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மைஇருக்கிறதுஇன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்றுகூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும் அதில் ''அஷ்ஹது அல்லாயிலாஹஇல்லல்லாஹ்  அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு  ரஸுலுஹு'' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான்சாட்சி கூறுகிறேன்மேலும் நிச்சயமாக முஹம்மது நபி (ஸல்அவர்கள்அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்று சாட்சி கூறுகிறேன்)என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும்.
நீ உன்னுடைய (நன்மைதீமைகளின்எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான்.''என்னுடைய இரட்சகனே (இந்த பாவஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?)''என்று அவன் கேட்பான்அதற்கு அல்லாஹ் ''நிச்சயமாக நீ அநீதி இழைக்கப்படமாட்டாய்'' என்று கூறுவான்அந்த பாவ ஏடுகள் ஒரு தட்டிலும்அந்த சிற்றேடு ஒருதட்டிலும் வைக்கப்படும்.  அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடிவிடும்அந்தச் சிற்றேடுகனத்து விடும்.  அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது.
அறிவிப்பவர்அம்ருப்னு ஆஸ் (ரலி)  நூல்திர்மிதி (2563)

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்அல்லாஹ் (தனக்கு இணைவைக்காத ஒரு அடியானைப் பார்த்து''ஆதமுடைய மகனே நீ பூமி நிறையபாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்நீ எனக்கு எந்த ஒன்றையும்இணை கற்பிக்கவில்லைஎனவே நான் உனக்கு பூமி நிறைய பாவமன்னிப்பைவழங்குகின்றேன்'' என்று கூறுவான்.
அறிவிப்பவர்அபூதர்(ரலி)   நூல்:  அஹ்மத் 20349

நம்மை மறுமையில் காப்பாற்றக் கூடியது இந்த ஏகத்துவம் மட்டும் தான்நாம் அதில்தவறிழைத்து விட்டோம் என்றால் அதை விடப் பேரிழப்பு வேறோன்றுமில்லைநாம்மக்களுக்கு செய்கின்ற சேவைகளிலேயே மிகச் சிறந்த சேவை அவர்களுக்குசத்தியத்தை எடுத்துரைப்பது தான்.
இன்றைக்கு இதைத் தவிர மற்ற அனைத்துப் பணிகளுக்கும் பெரும் கூட்டம்இருக்கிறார்கள்இந்த சத்தியப் பிரச்சாரத்தை எடுத்துரைப்பதற்குத் தான் அனைவரும்தயங்குகிறார்கள்.
ஏனென்றால் இதனை எடுத்துரைக்கும் போது அவனுக்குப் பல விதமான சோதனைகள்பல விதங்களிலும் வந்து கொண்டிருக்கும்அப்படி சோதனைகள் வரவில்லையென்றால் நாம் சத்தியத்தைக் கூறவில்லை என்று தான் பொருள்.
சமுதாயம் எவ்வளவு எதிர்த்தாலும்அனைவருமே இந்த சத்தியப் பிரச்சாரத்திற்குஎதிராகக் களமிறங்கினாலும்எவ்வளவு பின்னடைவுகளைச் சந்தித்தாலும் இந்தசத்தியப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டோம் என்பதில் உண்மையான தவ்ஹீத்வாதிகள் உறுதியாக இருக்க வேண்டும்.

செய்திகள்