30.12.11

மதம் பிடித்த மதனியின் வெறி பிடித்த விமர்சினம்

அபூ ஸஹ்த் - கொழும்பு.

(உ. உதயம் மாத இதழில் M.J.M. ரிஸ்வான் மதனியினால் எழுதப்பட்ட, "பிறர் குறைகளை மறைப்பீர்" என்ற ஹதீஸ் தெளிவுரைக்கு மறுப்பாக இக்கட்டுரை இடம்பெறுகிறது)

எவர் ஒருவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ, அவரது குறையை அல்லாஹ் மறுமையில் மறைப்பான் என நபி   அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)

ஒரு முஸ்லிம்ன மானம், மரியாதை என்பன எந்தளவு பெறுமானம் மிக்கதென்பதையும், இம்மையில் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பது, மறுமையில் எவ்வளவு மகத்தான நற்கூலியை பெற்றுத் தரும் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

28.12.11

இலங்கை முழு சுதந்திர நாடாக மாற தவ்ஹீத் ஜமாஅத் பொதுக் குழுவில் 10 தீர்மானங்கள்


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் கடந்த 24-12-2011 சனிக்கிழமை அன்று கொழும்பு வாழைத் தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஜமாத்தின் தேசிய தலைவர் ஆர்.எம். ரியால் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜமாத்தின் தேசிய நிர்வாகக் குழு உருப்பினரும் “அழைப்பு” மாத இதழின் துணை ஆசிரியருமான சகோதரர் ரஸ்மின் தீர்மானங்களை வாசிக்க பொதுக் குழு உறுப்பினர்கள் தக்பீர் கூறி அவற்றை ஆமோதித்தார்கள்.

25.12.11

மனித வாழ்வும், பெருந்தன்மையின் முக்கியத்துவமும்.(தொடர் - 03)

அன்பின் சகோதரர்களே! மனித வாழ்வும் பெருந்தன்மையின் முக்கியத்துவமும். என்ற இந்தத் தொடர் ஆக்கம் எனது நண்பர் சகோதரர் மனாஸ் அவர்களினால் எழுதப்படுகிறது. பெருந்தன்மை தொடர்பாக இஸ்லாம் சொல்லும் செய்திகள் என்ன? பெருந்தன்மையினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றிய செய்திகளையெல்லாம் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் மூலம் கட்டுரையாளர் அழகாகத் தெளிவுபடுத்துகிறார். தொடர்ந்து படியுங்கள் உங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பதியுங்கள்.

                                                         அன்ஸாரிகளின் பெருந்தன்மை.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று என்றைக்கு அந்த மக்கள் அறிந்து ஏற்றுக் கொண்டார்களோ அன்றிலிருந்து ஆரம்பமானது உன்னத சத்திய சீலர்களின் வாழ்க்கையில் விட்டுக் கொடுப்பும் பெருந்தன்மையும்.

23.12.11

இலங்கையில் வஹாபி ஆயுதக் குழுக்கள்(?)

நிரூபிப்பாரா அலவி மவ்லானா?
        RASMIN M.I.Sc

இலங்கையின் கிழக்குப் பகுதியில்வஹாபி ஆயுதக் குழுக்கள் இயங்குவதாகவும், அவர்கள் மூலம் சூபித்துவ வாதிகளுக்கு அச்சுறுத்தல்இருப்பதாகவும் மேல் மாகாண ஆளுனர் அலவி மவ்லானா தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றை ஆதாரம் காட்டி ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் வஹாபி ஆயுதக் குழுக்களுக்கு உதவி செய்வதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதியிடம் தாம் முறையிட இருப்பதாகவும் அலவி மவ்லானா மேலும் தெரிவித்துள்ளார்.

அலவியின் கருத்து உண்மையானதா?

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் இருந்த ஆயுதக் கலாசாரத்தை இல்லாமலாக்கி சுதந்திரமான இலங்கையை தற்போதைய அரசு கட்டியெழுப்பியிருக்கும் இவ்வேலையில் அலவி போன்றவர்கள் தெரிவிக்கும் இது போன்ற பொய்யான குற்றச் சாட்டுக்களுக்கு எவ்வித அடிப்படையும் இல்லை.

இதற்கு அலவியே சாட்சியாக இருக்கிறார்.

20.12.11

மலைக்க வைக்கும் மண்டபத் திருமணங்கள்

அண்மைக் காலத்தில் நமது தலைமையை நோக்கி திருமணம் தொடர்பான புகார்கள், விமர்சனங்கள் படையெடுக்க ஆரம்பித்தன.
தவ்ஹீது மணமகன் பெண் வீட்டாரிடம் ஏதேனும் மறைமுகமாக வரதட்சணை வாங்கிய விவகாரமா? அல்லது பெண் வீட்டில் விருந்தா? இது தொடர்பான புகார் எதுவும் வரவில்லை. விமர்சனம் எதுவும் வரவில்லை.
வந்த புகார், விமர்சனம் அனைத்தும் மண்டபத்தில் நடக்கும் திருமணம் குறித்துத் தான். மண்டபத்தில் திருமணம் மார்க்க அடிப்படையில் கூடாது என்பதாலா? அதுவும் இல்லை. மாறாக, மண்டபத் திருமணங்களில் செய்யப்படும் செலவினங்கள் பற்றியே விமர்சனம் எழுகின்றது.

பிற மேடைகளில் பிரச்சாரம் செய்வது குறித்து தவ்ஹீத் ஜமாஆத் நிலைப்பாடு


ஆர். ரஹ்மத்துல்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கெதிராக வைக்கப்படும் குற்றசாட்டுக்களில் பிரதான குற்றசாட்டாகப் பேசப்படுவது, இந்த அமைப்பினர் பிற இயக்கத்தின் மேடைகளில் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்வதில்லை என்பதாகும். இதற்கான விளக்கத்தை ஒவ்வொரு ஏகத்துவவாதியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம்.
ஏனெனில் ஷைத்தான் மனிதனை ஒரே வடிவத்தில் தான் வழிகெடுப்பான் என நினைக்கக்கூடாது. மாறாக ஒருவனை வழிகெடுக்க ஷைத்தான் எத்தகைய யுக்தியையும் செய்யத் தயங்க மாட்டான்.
உதாரணத்திற்கு, வரதட்சணை வாங்கக்கூடாது என்பதில் நாம் உறுதியோடு இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். இந்தத் தருணத்தில் நம்மை வழிகெடுக்க ஷைத்தான் வேறு வகையான ஆசை வார்த்தைகளைக் கூறுவான்.
நாமாகக் கேட்டால் தானே தவறு, அவர்கள் விரும்பிக் கொடுத்தால் தவறா? நாம் எதையும் பெண் வீட்டாரிடம் கேட்க வேண்டாம்; அவர்கள் தமது பெண் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பாசத்தினால் தானே தருகிறார்கள்; இதில் என்ன தவறு? என பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி வரதட்சணை வாங்கத் தூண்டிவிடுவான்.
அதுபோன்று தான் நம்மை சத்தியப் பிரச்சாரம் செய்ய விடாமல் பல வகையில் எதிர்த்தவர்கள், நமது பிரச்சாரத்தை முடக்க நினைத்தவர்களின் பல்வேறு சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டதால் ஷைத்தான் தற்போது நமது பிரச்சாரத்தின் வீரியத்தைக் குறைக்க புதியதொரு யுக்தியாக அசத்தியவாதிகள் வழியாகத் தூண்டிவிட்ட ஒரு வாதம் தான் "பிற மேடைகளில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை'' என்பது.
இந்த வாதத்திற்குத் தெளிவான விளக்கத்தை நாம் அறிந்து கொண்டால் ஷைத்தானின் இந்தச் சூழ்ச்சியில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.
பொதுவாக பிற இயக்கத்தினர் மேடையில் பிரச்சாரம் செய்வதால் சொற்பொழிவு நிகழ்த்துவோருக்கும் அதைக் கேட்கும் மக்களுக்கும் ஏற்படும் அவலங்களையும் ஒவ்வொன்றாகக் காணலாம்.
தீமையைத் தடுக்க இயலாத நிலை!
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
திருக்குர்ஆன் 3:110
நன்மையை ஏவி தீமையை தடுப்பதால் தான் நம்மைச் சிறந்த சமுதாயம் என அல்லாஹ் கூறுகிறான். ஆனால் பிற இயக்கத்தினருடன் பிரச்சாரம் செய்யும் பொழுது நம்மால் அவர்களின் தீமையைத் தடுக்க முடியாத அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.
உதாரணத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் நடைபெற்ற பீஸ் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தவிர அனைத்து கொள்கையுடையவருடன் இனைந்து  இஸ்லாத்தை நிலைநாட்ட (?) சொற்பொழிவு நிகழ்ச்சிகளை பீஸ் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் இஸ்லாமியக் கண்காட்சி என்ற போர்வையில் வர்த்தக உலகத்தைக் காட்டும் அந்த நிகழ்ச்சியில், பொருளாதார மோகத்தின் உச்சக்கட்டமாக அக்கண்காட்சியின் வாசலில் ஒரு காரை வைத்து 6% வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஒரு கொடுமை நடந்தேறியது.
சமூகக் கொடுமை என அனைத்து தரப்பு முஸ்லிம்களாலும் அறியப்பட்ட, நிரந்தர நரகம் என்று மார்க்கம் கூறுகின்ற இந்த வட்டி என்கிற வன்கொடுமையை யாராலும் கண்டிக்க முடியவில்லை.
வட்டி ஹராம் என்பது அங்கு சென்றிருந்த ஜாக் அமைப்பினருக்குத் தெரியவில்லையா? அல்லது தனக்கு மட்டும் இறையச்சம் உள்ளது போன்று அவ்லியா வேஷம் போடும் முஃப்தி காஸிமிகளுக்குப் புரியவில்லையா? ஏன் இந்த அவல நிலை? பல கொள்கையுடைவர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தி  சமரசத்திற்காக சன்மார்க்கத்தைத் தூக்கி எறியும் அவல நிலைக்கு ஆளானார்கள்.
இது ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் யூசுப் எஸ்.டி.எஸ் என்பவர் அந்த பீஸ் நிகழ்ச்சியில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது சொற்பொழிவில் இந்தச் சமுதாயம் 73 கூட்டமாகப் பிரியும்; அதில் 72 கூட்டம் நரகத்திலும் ஒரு கூட்டம் சொர்க்கத்திலும் இருப்பதாகக் கூறி, அந்த ஒரு கூட்டம் என்பது ஷாஃபி, ஹனஃபி, மாலிகி, ஹன்பலி, தவ்ஹீத், அஹ்லே ஹதீஸ் அனைவரும் தான் சுவனம் செல்லும் அந்த ஒரு கூட்டம் என்று விளக்கம் தருகிறார்.
மத்ஹபுகள் கூடாது என்று பல ஆண்டுகளாக முழக்கமிட்ட ஜாக் அமைப்பினர் கலந்து கொண்ட அந்தச் சபையில் தனது கொள்கைக்கெதிராகப் பேசிய இவரைக் கண்டிக்க இயலவில்லை. கண்டிக்கத் தான் இயலவில்லை என்றால் தவறான கொள்கைகள் அரங்கேறிய அந்த மேடையைப் புறக்கணிக்க மனமும் இல்லை. மேடை மோகம் இவர்களை சத்திய பிரச்சாரத்திலிருந்து சமரசம் செய்ய வைத்துவிட்டது.
பல தரப்பட்ட கொள்கையுடையோராலும் இணைந்து நடத்தப்பட்ட இந்த பீஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தமது கொள்கையில் சமரசம் செய்ததினால் அவர்களின் கொள்கை உறுதி பீஸ் பீஸாகிப் போய்விட்டது.
இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல தரப்பட்ட கொள்கை உடையவர்களால் தீமையைத் தடுக்க முடியவில்லை என்றாலும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜாகிர் நாயக் அவர்களால் கூட இந்த தீமைகளைத் தடுக்க முடியவில்லை.
மத்ஹப், அனாச்சாரங்கள் எனப்படும் பித்அத் ஆகியவற்றை எதிர்த்தால் தானே இந்த ஜாகிர் நாயக்கால் தீமையை எதிர்க்க முடியும். இவரே அதன் ஆதரவாளராக இருந்தால் எப்படித் தடுக்க முடியும்! இந்த ஜாகிர் நாயக் வெறும் மத்ஹப் ஆதரவாளர் மட்டும் கிடையாது; கடவுள் கொள்கையில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கு ஒப்பானவர்.
ஜாகிர் நாயக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும்
இறைவனுக்கு உருவம் இல்லை எனக் கூறி, இறைவன் எங்கும் இருக்கிறான் என்கிற அத்வைதக் கொள்கையை ஷேக் அப்துல்லாஹ் ஜ(கோ)மாலி வாதிட்ட போது, இறைவனுக்கு உருவம் உண்டு எனவும் இறைவன் அர்ஷில் இருக்கிறான் எனவும் இறைவனின் தனித்தன்மையை நிலைநாட்டி அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் மவ்லவி பி.ஜெ அவர்களால் எடுத்துரைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம்.
ஜமாலி போன்ற கோமாளித்தனமான வாதங்களைப் போன்றே தான் ஜாகீர் நாயக்கும் ரவிசங்கர் என்பவருடன் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவர் தனது உரையில், இறைவனுக்குப் பிள்ளை இல்லை, பெற்றோர் இல்லை என கூறிவிட்டு, இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை திருக்குர்ஆனும் பகவத் கீதையும் ஒரே மாதிரி தான் கூறுகிறது என இஸ்லாத்திற்கு எதிரான கருத்தைப் பதிவு செய்தார்.
எந்த அளவிற்கென்றால் அவர், இறைவனுக்கு உருவம் இருக்கிறது எனக் கூறினால் நீள வாக்கிலா அகல வாக்கிலா எனக் குழப்பம் வந்து விடும் எனக் கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் இது குறித்து ஒரு கேள்வியை முன் வைத்தார்.
இதோ அந்தப் பெண் கேட்ட கேள்வி:
நபி (ஸல்) அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? என்று கேட்டார்கள். அப்பெண், அல்லாஹ் வானத்திலிருக்கிறான் என்று கூறினாள். நான் யார்? எனக் கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள். நபி (ஸல்) அவர்கள் அவளது எஜமானனிடம் இவள் முஃமினான பெண்மணியாவாள். இவளை உரிமை விட்டுவிடு என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹகம் (ரலி)
நூல்: முஸ்லிம் (836)
 இந்த ஹதீஸை மேற்கோள் காட்டி அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் எனத் தெளிவாக உள்ளதே இதன் விளக்கம் என்ன? எனக் கேட்கிறார்.
இதற்கு ஜாகீர் நாயக் பதில் கூறும் போது, இந்த ஹதீஸ் குறித்து நாம் அதிகம் சிந்திக்கக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறி விட்டார்கள் எனக் கூறி, இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற அப்துல்லாஹ் ஜமாலியின் கொள்கைக்கு ஆதரவாக மலுப்பலான பதிலைத் தருகிறார்.
இப்படிப்பட்ட கொள்கையுடையவர்களின் மேடைகளை நாம் பகிர்ந்தால் தீமையைத் தடுக்க முடியாமல் சமரசம் செய்த இவர்களின் நிலையைப் போன்று தான் நமக்கும் ஏற்படும். இந்த அவல நிலையை நாமும் ஒரு காலத்தில் சந்தித்து சங்கடத்திற்கு உள்ளாகியிருந்தோம்.
கடந்த 2004ல் நாம் தமுமுகவுடன் சேர்ந்து இருந்த கால கட்டத்தில் நெல்லை மாவட்டம் மேலப்பாளயத்தில் தமுமுக சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்திற்கு, தவ்ஹீத்வாதிகளால் பிரச்சாரம் செய்யப்படும் அந்த மேடைக்கு, தர்கா வழிபாட்டில் மூழ்கித் திளைக்கும் எஸ்.எஸ். ஹைதர் அலி என்பவர், அழைக்கப்பட்டார். அந்த மேடையில் ஏறிய அவர் தனது சொற்பொழிவின் இறுதியில் "நபிகளாரை கனவிலும் நனவிலும் கண்டு களிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்குத் தந்தளுள்வானாக'' எனப் பிரார்த்தனை செய்து அசத்தியக் கொள்கையை அள்ளித் தெளித்தார்.
அதைக் கண்டிக்கவோ அதற்கு மறுப்பு சொல்லவோ யாருக்கும் திராணி இல்லாமல் போன அவல நிலையை ஒருவரும் மறக்க இயலாது. ஆனால் ஒரு விஷயம், இந்த மேடையில் ஹைதர் அலீ என்ற முஷ்ரிக் ஏறினால் நாங்கள் ஒரு போதும் மேடையில் ஏற மாட்டோம் என மறுத்து ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்களும் எம்.எஸ்.சுலைமான் அவர்களும் ஒதுங்கிக் கொண்டார்கள். இதைத் தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய இயலவில்லை.
இதனால் தான் பிறர் மேடையில் ஏறி நாம் பிரச்சாரம் செய்வதில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
இதுமட்டுமின்றி பிறர் மேடைகளைப் பகிர்வதால் பேச்சாளர்களுக்கு ஏற்படும் மற்றொரு அவலநிலை இதை விடப் படுமோசமானதாகும்.
இரட்டை வேட நாடகம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும் செல்கிறான்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)
நூல்: புகாரி 7179
இரட்டை வேடம் போடுபவன் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் என்று நபிகளாரால் மிகவும் கண்டிக்கப்பட்ட ஒரு செயலை எந்த ஒரு முஸ்லிமும் செய்யக் கூடாது. குறிப்பாக சத்தியப் பிரச்சாரத்தைப் பிற மக்களுக்கு எடுத்துரைப்பவர் ஒருக்காலும் செய்யக்கூடாது. ஆனால் பிற கொள்கையுடையவர்களின் மேடைகளைப் பகிர்வதால் இரட்டை வேடம் போடும் நயவஞ்சகனாக மாறும் அவல நிலை ஏற்படும்.
நம்மோடு மேடையில் அமர்ந்திருப்பவரின் மனம் புண்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் அவரை திருப்திப்படுத்துவதற்காகவும் அல்லாஹ்வின் மார்க்கத்தை மறைக்க வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.
பிற அமைப்பினரின் வழிகெட்ட கொள்கைகளையும் தவறுகளையும் அவர்கள் சமுதாயத்திற்குச் செய்த துரோகங்களையும் அம்பலப்படுத்தும் போது நம்மிடம் இருந்த வேகமும் வீரியமும் அந்த அமைப்பினரோடு சேர்ந்து மேடை ஏறும் போது, அவர்களோடு பழகி பல்லிளித்து, அவர்களின் குற்றங்களை நாம் ஒன்றும் அறியாதவர்கள் போன்று நடித்து மக்களை மடையர்களாக்கும் நிலை ஏற்படும்.
சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம் என்று கூறிவிட்டு லட்சக்கணக்கில் வசூலித்து மோசடி செய்து, இன்று வரை ஒழுங்காகக் கணக்குக் காட்டாத த.மு.மு.க.வுடன் சேர்ந்து நாம் பிரச்சாரம் செய்தால் இவர்களைக் கண்ணியவான்களாக்க நேரிடும்.
வட்டி இல்லா கடனுதவி பெற வந்த ஓர் அபலைப் பெண்ணின் வாழ்வில் விளையாடிய ஒழுக்கங்கெட்ட பாக்கருடன் பிரச்சாரம் செய்தால் அந்த அயோக்கியர்களை ஒழுக்க சீலராக்க நேரிடும்.
உதட்டில் தேனும் உள்ளத்தில் தேளும் கொண்ட அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் இந்தத் தன்மை பொருந்திப் போகுமே தவிர, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி பிரச்சாரம் செய்யும் நமக்கு ஒருக்காலும் பொருந்தாது.
பிற அமைப்பினரோடு பிரச்சாரம் செய்யும் பேச்சாளர்களுக்கு ஏற்படும் அவலங்களைப்போல அதைப் பார்க்கும் மக்களும் பல அவலங்களை சந்திக்க நேரிடும்.
அவற்றை அடுத்த தொடரில் அறிவோம், இன்ஷாஅல்லாஹ்.....

17.12.11

ஹராத்தை ஹலாலாக்கும் ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!




அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது…
ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!

ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் மார்க்க வல்லுனர்களிள் சபை தொடர்பாக பல சர்ச்சைகள் சமூகத்தில் எழுந்து வருகின்றன. அண்மைக்காலமாக அது வழங்கி வரும் மார்க்கத் தீர்ப்பு ஹராத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக ஹராத்தை இலகுவாக்கக் கூடிய, ஹராத்தை நெருங்கக் கூடிய ஒரு சூழ்நிலையை தோற்றுவித்திருக்கிறது.

இது வழங்கும் ஹலால் பத்வா ஹராம் பற்றிய அச்சத்தை சமூகத்தில் குறைத்து வருகிறது.

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற இந்தப் பிரச்சினைப்பற்றி பேசுவதற்கு முன் சமகால உலக அரசியல் பற்றியும், அதன் பாதிப்பாய் உருவெடுத்திருக்கும் ஜம்இய்யதுல் உலமா சபையின் பத்வா வழங்கல் நிலைப்பாடு பற்றியும் தெளிவு பெறுவது அவசியமாகும்.

உலக மயமாக்கல் உலமா சபையை எப்படி மாற்றியிருக்கிறது பாதித்திருக்கிறது என்று பார்ப்பது அவசியமாகும்.

அமெரிக்கா ஏகாதிபத்தியம் அபாயகரமாக உலகமயமாக்களோடு எல்லா நாடுகளையும், எல்லா சமூகங்களையும் கலாசார, அரசியல் ரீதியாக அழித்து வருகின்றது

அமெரிக்கா பலம் பொருந்திய தனது இராணுவ கட்டமைப்பின் மூலம் தனக்கு தேவையான நாடுகளை ஆக்கிரமிக்கிறது. அறிவியலில் தன்னோடு போட்டிபோடும் நாடுகளை அது அச்சுறுத்துகின்றது.

மனிதநேயமற்ற அதன் இராணுவ ஆக்கிரமிப்பு மிகவும் பயங்கரமானது. அதன் கலாசார ரீதியிலான ஆக்கிரமிப்பு மிகவும் பலமானது. ஏனைய நாடுகள் மீதான இந்த கலாசார ஆக்கிரமிப்பு நாகரீகம் என்ற போர்வையில் புகுந்து நாசத்தை விளைவிக்கிறது.
அது நாடுகளின் சமூக, கலாசாசார ரீதியிலான அடையாளங்களுக்கு கல்லறை சமைக்கிறது.

பூகோள ரீதியில் ஈரம் காயாத இரத்த வரலாறொன்றை அதன் ஈராணுவ கலாசார பலம் பதித்து வருகிறது.

அமெரிக்காவின் இராணுவ, மற்றும் கலாசார ரீதியிலான இரண்டு ஆக்கிரமிப்புகளும் சுரண்டல் சூறையாடல் என்ற முதலாளித்துவத்தின் தாரக மந்திரத்தில் தடம் பதித்தவையே!

அமெரிக்காவிற்கு அதிக இலாபத்தை இந்த இரண்டு ஆக்கிரமிப்புகளும் ஈட்டிக் கொடுக்கின்றன. மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளை அடிமைப்படுத்தி எண்ணெய் வளங்களை அது கொள்ளையடிக்கின்றது.

அரபு நாடுகளில் வேகமாய் பரவும் அமெரிக்க கலாசாரம் அந்த நாட்டை இஸ்லாத்தின் உயிரோட்டத்திலிருந்து துரத்தி தூரமாக்கி வருகிறது.

அமெரிக்க கலாசாரத்தின் ஆரம்ப அடையாளமே யூத தயாரிப்பான ‘‘கொக்கா கோலா”, ‘‘பெப்ஸி கோலா”. அவை அரபுகளின் அன்றாட உணவில் முக்கிய பாத்திரங்கள்.

‘‘கோலா’’க்கள் குடிக்காமல் அரபுகளின் குரல்வளைக்குக் கீழ் உணவே இறங்காது. நாசகாரர்களின் தயாரிப்போடு அரபுகளுக்கு நேசம் அதிகம்!

மேற்குலகின் கலாசாரம் முழு உலகும் பரவ வேண்டும். அசிங்கமான கலாசாரத்தில் முழு உலகையும் திணிக்கவேண்டும் ஏன்ற தந்திரத்தால் தனது கலாசாரத்தை வர்த்தக மயமாக்கி உலகை ஆக்கிரமித்து வருகிறது அந்த ஏகாதிபத்தியம்.

இன்று வாழ்க்கையின் சகல துறைகளிலும் பாதிப்பு செலுத்தும் ஒரு பயங்கரமாக அதன் ஆக்கிரமிப்பு உள்ளது. உலமா சபையின் செயற்பாடுகளுக்கும் உலகை ஆக்கிரமிக்கும் இந்த கலாசார ஆதிக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் இப்போது யோசிக்கலாம்.

இது மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் போடும் ஒரு முடிச்சா என்று கூட நீங்கள் முணுமுணுக்கலாம்.
எதிர்காலத்தை இருள்மயமாக மாற்றும் ஒரு சர்வதேச சதியை, அச்சாணியாய் வைத்து இந்த முஸ்லிம் உம்மத் சுழன்றுக்கொண்டிருக்கிறது என்பதை சொல்லி வைக்கத்தான் அப்படி ஒரு சுற்று சுற்றி வந்தேன்.
தேசம், சர்வதேசம் என்ற எல்லைகளைத் தாண்டி முழு முஸ்லிம் உம்மத்தும் அமெரிக்க சதியின் வட்டத்தை வலம் வந்துக்கொண்டிருக்கின்றது.
காட்டாறு போல வரும் கலாசார அக்கிரமிப்பை கண்மூடித்தனமாய் பின்பற்றிவரும் இந்த உம்மத்தின் நிலையும், அந்தக் கலாசாரத்திற்கு பச்சைக் கொடி காட்டி பத்வா வழங்கும் இந்த உலமா சபையின் செயற்பாடும் மோசமான எதிர்காலமொன்றுக்கான முன்னுதாரணமாகும்.
அமெரிக்கக் கலாசாரத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் உம்மத்துள் உருவாகியிருக்கும் எதிர்விளைவுகளையும் இனிபார்ப்போம்…
பெற்றோல் பாலைவன பூமியில் உற்பத்தியாகி உலகையே இயக்கி, உயிரை வழங்கிக்கொண்டிருக்கிறது . அந்த உயரிய வளத்தை மிக குறைந்த விலைக்கு அமெரிக்காவிற்கு விற்று விட்டு, அமெரிக்க தயாரிப்பான கோலாவை அதிக விலைக்கு அரபு நாடுகள் வாங்குகின்றன.
அமெரிக்காவிற்கு விற்பனையாகும் ஒரு லீற்றர் பெற்றொலின் விலை வெறுமனே 24 (இருபத்து நான்கு) ரூபாய். அமெரிக்க தயாரிப்பான (இரசாயண தண்ணீர்க் கலவையான) ஒரு லீற்றர் கொக்கா, பெப்ஸி கோலாவை அரபு நாடுகள் நூற்று முப்பது ரூபாயை கொடுத்து வாங்குகிறது. குடித்து மகிழ்கிறது.

தன்னிடமுள்ள வளத்தின் பெறுமதியை அளவிட தெரியாத அளவிற்கு உலக மாயையில் மயங்கி மந்தப் புத்தியில் மடிந்து கிடக்கிறது இந்த அரபு சமூகம். அரபு சமூகம் அறிவியல் ரீதியாக வங்குரோத்து நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு எப்படி ஒரு நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கின்றதோ அதே போல அதன் கலாசார ஆக்கிரமிப்பு முழு உலகையும் கொள்ளையடிக்கின்றது.
இதனை தெளிவு படுத்தத்தான் இந்த உதாரணத்தை இங்கு முன்வைத்தேன். நான் வைத்த கோலா, பெற்றோல் விலையில் சிலவேளை சின்ன மாற்றங்கள் இருக்கலாம்.
இன்று அமெரிக்க கலாசாரத்திற்கு அடிமைப்பட்ட அரபுகளை விட, ஈமானிய உணர்வுகளை பாதுகாத்து வாழ்கின்ற மக்கள் அரபு அல்லாத ஏனைய நாடுகளில்தான் அதிகம் வாழ்கின்றார்கள்.
அந்த நாடுகளை இந்த அமெரிக்க கலாசாரம் எப்படி ஆதிக்கம் செலுத்தப் போகிறது. ஆதற்கான ஒரு புதிய வழிதான் அமெரிக்க பொருட்களுக்கு ஷரீஆ அங்கீகாரம்.
அதாவது ஹலால் அங்கீகாரம்.
ஆந்த அங்கீகாரத்தைப் பெற உலமா சபைக்கு இப்போது பல லட்சம் ரூபாய்களை அள்ளி வழங்க பார்த்துக்கொண்டிருக்கின்றன பல்தேசிய நிறுவனங்கள்.
பத்வா என்ற போர்வையில் அசிங்கமான அமெரிக்க கலாசாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
உலமாசபை கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்க உணவு நிறுவனங்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பத்வா வழங்குகிறது.
மனிதனுக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகளை உருவாக்கும் அமெரிக்க பாஸ்ட் பூட் உணவு முறை அந்த நாட்டிலேயே பல சமூகவியல் பிரச்சினைகளை தோற்றுவித் திருக்கிறது.
(அமெரிக்க சனத்தொகையில் மூன்றில் ஒரு வீதத்தினர் அவர;களின் உணவு பழக்கங்களால் உடல் எடை அதிகரிப்பு போன்ற உடலியல் ரீதியிலான நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.)
அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் இந்த அமெரிக்க உணவு விடுதிகளை நோக்கி படையெடுப்பது அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக உலமா சபையின் ஹலால் பத்வாவை குறிப்பிடலாம். உலமா சபையின் பத்வாவை பெற்றுக்கொண்ட இந்த நிறுவனங்கள் ஊடகங்களில் உலமா சபையின் ஹலாலை முன்னிலைப்படுத்தி விளம்பரங்கள் செய்கின்றன.
முஸ்லிம்களை அமெரிக்க உணவுப் பழக்கத்திற்கு திசை திருப்ப உலமா சபையின் பத்வா(?) இன்று பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவே திட்டமிட்டு வடிவமைத்த செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக களமிறங்கிய அது இஸ்லாத்திற்கெதிராக வெளிப்படையாகவே செயலாற்றியது.
இதனால் உலக முஸ்லிம்களின் மனங்களில் அமெரிக்க எதிர்ப்பு வளர்ந்தது.
அப்படி எழுந்த அமெரிக்க எதிர்ப்பு அலைகளும், ஆப்கானில், பலஸ்தீனில், ஈராக்கில், லெபனானில் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் கொலைகளும், அநியாயங்களும் உலகளாவிய ரீதியில் எதிர்நிலையைத் தொற்றுவித்தது.
அமெரிக்க பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றது. சர்வதேச ரீதியாக முஸ்லிம் அறிஞர்கள் அமெரிக்க, இஸ்ரேலிய பொருட்களை பாவிப்பது ஹராம் என்று கூட பத்வா வெளியிட்டார்கள்.
அதனால் அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டது. இலங்கையில் கூட அமெரிக்க, இஸ்ரேலிய பொருட்கள் பகிஷ்கரிக்கப்பட்டன. இன்றும் பகிஷ்கரிக்கப்படுகின்றன.

அமெரிக்க பொருட்களுக்கு சந்தையில் ஏற்பட்ட பின்னடைவை சரி செய்யவே ஹலால் பத்வா சூழ்ச்சி சந்திக்கு வந்தது.
இலங்கையில் ஜம்இய்யதுல் உலமா சபை இதனை ஒழுங்காக நிறைவேற்றும் ஊழியனுக்குரிய கதாபாத்திரத்தைப் பெற்றும் கொண்டது.
அமெரிக்க பொருளாதாரத்தோடு உயிராக இருக்கும் வட்டி தொடர்பான முஸ்லிம்களுக்குள்ள முரண்பாட்டை முடக்க வேண்டிய தேவையை உணர்ந்த இந்த இஸ்லாத்தின் எதிர்சக்திகள், போலி இஸ்லாமிய வங்கிகளின் உருவாக்கத்திற்கு முஸ்லிம்களை உட்சாகப்படுத்த சதித் திட்டம் போட்டன.
இந்த சதியின் செயல் வடிவத்திற்கு உயிரூட்டியது உலமா சபை.

வட்டியை விட்டு தூரமாகியிருந்த முஸ்லிம்களை வேட்டையாட அதே வட்டி நிறுவனங்கள் ஒரு புதிய திட்டம் வகுத்தன. உலமா சபையின் ஹலால் பத்வா, இஸ்லாமிய வங்கி என்ற ஒரு புதிய சொல்லை அறிமுகம் செய்தது. வட்டியில் வாழ்ந்த வங்கிகள் திடீரென்று ஹலால் வங்கிகளை குட்டிகளாய் இட்டன.
காலகாலமாய் வட்டியில் குட்டி போட்ட இந்த வங்கிகள் இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் போட்ட புதிய குட்டிக்கு உலமா சபையே “இஸ்லாமிய ஹலால் வங்கி ” என்று பெயர் சூட்டியது. பத்வாவின் மூலம் அங்கீகாரம் வழங்கியது.
ஏகாதிபத்தியத்தின் தேவைக்காக ஹராத்தை ஹலாலாக மாற்றும் இந்த வேலைத்திட்டம்; முஸ்லிம்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது.

சிலிங்கோ புரொபிட் செயாரிங் என்ற நிதி நிறுவனத்திற்கு உலமா சபை ஹலால் பத்வாவை வழங்கியது. உலமா சபையின் பத்வாவை நம்பி பணத்தை வைப்பிலிட்ட பதினாறாயிரம் முஸ்லிம்களின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது.
முஸ்லிம்களின் பணம் 1400 கோடி ரூபாய்களை இந்த நிதிநிறுவனம் மோசடி செய்துள்ளது. இவர்கள் பணத்தை இழந்து இன்று நிர்க்கதியற்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள். உலமா சபையின் கண்மூடித்தனமான பத்வா முஸ்லிம்களை கஷ்டத்தில் வீழ்த்தியிருக்கிறது.

அது மட்டுமில்லாமல் இந்த இஸ்லாமிய(?) வங்கியில் பல ஆயிரம் ரூபாய்களை “ஆலோசனை வழங்குகிறோம்” என்ற போர்வையில் ஆலோசகர;களாக சேவையாற்றிய உலமா சபை அங்கத்தவர்கள் மாதாந்த ஊதியமாக பெற்றிருக்கின்றார்கள். உலமா சபை அங்கத்தவர்கள் பலர் அந்த வங்கியிடமிருந்து பல லட்சம் ரூபாய்களைக் கடனாக பெற்றும் இருக்கின்றார்கள். பெற்ற கடனை இன்று வரை அடைக்காமல் இருப்பதாக அந்த நிறுவனம் குற்றம் சாடடி இருக்கின்றது. இந்த செய்தி பல தேசிய பத்திரிகைகளிலும்; வெளிவந்திருக் கின்றன..

உலமா சபையின் பத்வா அங்கீகாரத்தை ஏற்றே முஸ்லிம்கள் 1400 கோடி ரூபாய்களை இந்த வங்கியில் வைப்பிலிட்டனர். இப்போது முஸ்லிம்களின் இந்த பணத்தை வங்கி ஏப்பமிட்டுவிட்டது.
உலமா சபை அதற்கு பொறுப்பு நிற்காமல் இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்காமல் தூர நழுவி வருகின்றது.
“நாங்கள் பத்வா வழங்கியது உண்மை. ஆனால் இப்போது நாங்கள் அந்த வங்கியிலிருந்து விலகி விட்டோம் அதற்கும் எங்களுக்கும் இப்போது எந்த தொடர்புமில்லை ”
என்று சிறுபிள்ளைத்தனமாக சொல்கிறது இந்த உலமா சபை. அறிவீனமாக அறிக்கை விட்டு முஸ்லிம்கள் மத்தியில் அவமானப்பட்டு நிற்கின்றது.


உலமா சபையால் ஹலால் பத்வா வழங்கி ஆசிர்வதிக்கப்பட்ட சிலிங்கோ புரொபிட் செயாரிங் நிறுவனம் முஸ்லிம்களிடம் இருந்து பெற்ற பணத்தை இரவு கேளிக்கை விடுதிகளுக்கும் முதலீடு செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இஸ்லாத்திற்கு முரணான வியாபாரங்களுக்கும் முதலீடு செய்திருக்கின்றது. இதை ஜம்இய்யதுல் உலமா கண்டு கொள்ளாமல் இரந்திருக்கிறது.
இந்த இரகசியத்தை அறிந்த பணத்தை வைப்பிலிட்ட முஸ்லிம்கள் இன்று வேதனையடைகின்றனர். அவர்கள் பணம் இழந்தது மட்டுமல்லாமல் அவர்களின் பணம் இஸ்லாம் தடை செய்த வியாபாரங்களுக்கு மூலதனமாகியிருக்கிறது.

இந்தப் பாவத்திற்கும் உலமா சபையே பதில் சொல்ல வேண்டும்.
சமூகத்தில் தலைமைத்துவம் வகித்து செய்ய வேண்டிய கடமைகள் அனேகம் உலமா சபைக்கு இருக்கின்றன.
கல்வி, பொருளாதார ரிதியில் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றனர்.. பாடசாலை தொடர்பான, வளப்பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றன.
அவற்றையெல்லாம் மறந்து விட்டு பணத்தை மையப்படுத்திய வங்கி, வர்த்தகம் தொடர்பான பணம் சம்பாதிக்கும் ஹலால் பத்வா செயற்திட்டங்களுக்கே அது முன்னுரிமை வழங்கியது.

அது மட்டுமல்லாமல் இந்த மோசமான கலாசார ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் கட்டுண்டு போன உலமா சபை, அமெரிக்க, யூத பல்தேசிய நிறுவனங்களுக்கும் இஸ்லாம் தடை செய்த ஹராமான இறைச்சி உணவுவகைகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் ஹலால் பத்வாவை வழங்கி பெரும் தொகையான பணத்தை பகரமாக பெற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்க, மாற்று மத வட்டி, உணவு நிறுவனங்களுக்கு பத்வா வழங்க அவசரமும், அவசியமும் உலமா சபைக்கு ஏன் ஏற்பட்டது? இந்த புதிய உணவு கலாசாரத்தை முஸ்லிம்கள் மீது திணிக்க காரணம் என்ன? முஸ்லிம்களுக்கு உண்பதற்கு இவற்றை தவிர வேறு உணவேயில்லை என்றிருந்தால் உலமா சபை உடனே முன் வந்து இந்த உணவை உண்ணுங்கள் என்று ஹலால் பத்வாவை வழங்குவதில் பிழையே இல்லை.
மேற்படி யூத, கிறிஸ்தவ கம்பனிகளிடமிருந்து பணம் அறவிட்டு பத்வா வழங்கியதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்திற்கு மிக மோசமான வழிகாட்டலை உலமா சபை வழங்கியிருக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டு உலமா சபைக்கு எதிராக சமூகத்தில் பரவலாக எழுந்தும் வருகிறது.
கண்ட கண்ட பொருட்களுக்கெல்லாம் பணத்தை வாங்கிக்கொண்டு பத்வா வழங்கும் வியாபாரத் தனத்தில் இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை இயங்கி வந்ததன் விபரீதத்தை இன்று சமூகம் நன்றாக அனுபவித்துக்கொண்டிருகின்றது.
அமெரிக்க கலாசார, அரசியல் சதி ஒன்றுக்கு உலமா சபை துணை போனதால் அவர்களுக்கல்ல மக்களுக்குத்தான் தண்டனை கிடைத்தது.
கடந்த ரமழான் மாதம் பிஸ்ஸா உணவு நிறுவனம் ஒன்று கொக்கா கோலா பெரிய போத்தல் ஒன்றுடன் பிஸ்ஸா ஒன்றுக்கான விளம்பரத்தை செய்திருந்தது. கொக்கா கோலா போத்தலோடு உலமா சபையின் இலட்சினை பொறிக்கப்பட்ட பிரசுரத்தை கொழும்பில் வீடு வீடாக அந்த நிறுவனம் பகிர்ந்து அளித்தது. பிஸ்ஸாவிற்கு கொடுத்த ஹலால் பத்வா மறைமுகமாக கோலாவிற்கும் பயன்படுத்தப்பட்டது.

யூத சக்திகளின் கோலாவை குடிப்பதுவும், பலஸ்தீன, ஈராக்கிய முஸ்லிம்களின் இரத்தத்தைக் குடிப்பதுவும் சமமான செயல் என்பதை உலமா சபை நன்கு உணர்ந்திருக்கிறது. என்றாலும் பணத்தை மையமாக வைத்து செயற்படுவதால் அதன் சாதக, பாதகங்களை சரியாக இனம் காண முடியாமல் இப்போது திண்டாடி நிற்கிறது.

திறந்த பொருளாதாரம் பணத்திற்கு பின்னால் ஓடக்கூடிய ஒரு சமுதாயத்தை தோற்றுவித்தது உண்மைதான்.
உலமா சபை அப்படி ஓடுவதை முஸ்லிம்களால் அங்கிகரிக்க முடியாது. பணத்திற்கு முன்னால் அல்லாஹ்வின் தீனை பகடைக் காய் ஆக்க அனுமதிக்க முடியாது. பத்வாவை விற்று பணம் சம்பாதிக்க இஸ்லாத்தில் இடமே கிடையாது.

பத்வா ஒரு வியாபார பண்டமல்லவே.
அது அல்லாஹ்வின் தீன் வழங்குகின்ற ஒரு தீர்ப்பு.
இந்தத் தீர்ப்பை பல லட்ச ரூபாய்களுக்கு வழங்கும் அதிகாரத்தை இவர்கள் எப்படி பெற்றார்கள்?
பத்வாவை பல லட்ச ரூபாய்களுக்கு விற்க இஸ்லாம் இவர்களுக்கு அனுமதி அளிக்கின்றதா?
பணத்திற்கு விற்ற பத்வாவினால் ஏற்பட்ட விளைவு என்ன?
ஹராமான நிறுவனங்களை மேலோட்டமாக அவதானித்து பத்வா வழங்கி பணத்தை வாங்கி பெட்டியை நிறைப்பதால் யாருக்கு லாபம்?
விளைவு என்ன.....?
சுப்பர் மார்கட்களில் பன்றி இறைச்சிக்கு பக்கத்தில் கூட உலமா சபையின் பத்வா நோட்டீஸ் தொங்கிக் கொண்டிருக்கிறது.
பன்றி இறைச்சிக்கு பக்கத்தில் குந்தியிருக்கும் உலமா சபையின் ஹலால் பத்வாக்களைப் பார்த்து.... இப்போது பன்றி இறைச்சி மீதிருந்த வெறுப்பு முஸ்லிம்கள் மத்தியில் குன்றி வருகிறது.
பன்றி என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட தயங்கிய, கூச்சப்பட்ட, அருவறுப்பு பட்ட சமூகம் இன்று பன்றி இறைச்சிக்குப் பக்கத்தில் உள்ள கோழி இறைச்சியை எவ்வித சஞ்சலமும் படாமல் பிரச்சினை இல்லாமல் பலர்வாங்கிச் செல்வதை காணக் கூடியதாய் இருக்கிறது.
இந்த பாதகத்திற்கு காரணம் என்ன? பன்றி இறைச்சி விற்பனைக்கு பெயர் போன வெளிநாட்டு கம்பனிகளுக்கு உலமாசபை ஹலால் பத்வா வழங்கியதே.
ஊள்ளுர் கோழி இறைச்சி நிறுவனங்களுக்கும் பல்தேசிய நிறுவனங்களுக்கிடையில் இடையில் ஒரு போட்டியைக் கூட இது ஏற்படுத்தியது.
முஸ்லிம்களிடம் மாத்திரம் கோழி இறைச்சி வாங்கியவர்களை பல்தேசிய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மாற்றுமத நிறுவனங்களை நாட உலமா சபை உதவி செய்தது. தேசிய ரீதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கோழி இறைச்சி வர்த்தக நிறுவனங்களுக்கு கூட இதனால் பெரிய அடி விழுந்தது.
முஸ்லிம்களின் கடையில் இறைச்சி வாங்கி உண்டவர்களுக்கு, இல்லை இல்லை அந்நிய மத நிறுவனங்களிலும் இறைச்சி வாங்கி உண்ண முடியும் பிரச்சினையே இல்லை...என்ற ஒரு புதிய வழியை உலமா சபை காட்டிக் கொடுத்தது.
ஹராம் தொடர்பாக இறுக்கமாக இருந்த சமூகத்தின் மனநிலையை உலமா சபை இப்போது தளர்த்தியிருக்கிறது. இலகுவாக்கியிருக்கிறது.இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தேவையாய் இருந்த ஒன்றை உலமா சபை ஒழுங்காக நிறைவேற்றியிருக்கிறது.
உலமா சபை அவசரப்பட்டு ஹலால் பத்வா வழங்குவது பணத்தை அடிப்படைகாக் கொண்ட செயற்பாடு என்பதை அதன் நடவடிக்கைகள் நிரூபித்தக்கொண்டிருக்கின்றன.
சமூகத்தில் எத்தனையோ ஹராமான செயற்பாடுகள் மலிந்து கிடக்கின்றன. ஏன் அவற்றிற்கு உலமா சபையால் ஹராம் பத்வா வழங்க முடியாமல் இருக்கிறது.
மார்க்கத் தீர்ப்பு என்ற அடிப்படையில் பார்த்தால் அவர்கள் ஹராத்தையும், ஹலாலையும் மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பாக முன்வைக்க வேண்டும்?
உலமா சபையென்றால் ஹலால் பத்வா மட்டும் தானா வழங்க முடியும்?
ஏன் ஹராம் பத்வா வழங்க முடியாதா?
ஹலால் ஹராம் இரண்டைப்பற்றிய கட்டளையும் சமூகத்திற்கு சொல்லத்தானே வேண்டும்?
சூதாட்டம் ஹராம் தானே? எத்தனை முஸ்லிம்கள் போதிய அறிவோ கரிசனையோ இல்லாமல் பாதை நெடுகிலும் “சுவீப் ” டிக்கட்டுகளை வாங்கி சுரண்டிக்கொண்டிருக்கின்றார்கள்? எத்தனைப் பேர் புகைபிடிக்கின்றார்கள்? எத்தனைபேர் மதுபானம் அருந்துகின்றார்கள்?
சீதனம் பெண் இனத்திற்கே கொடுமை புரிகிறதே! சமுதாயம் மஹரை கொச்சைப்படுத்துகிறதே! ஏன் உலமா சபை இவற்றிற்கு ஒரு பத்வாவை வெளியிட்டு பள்ளிவாசல்களில் தொங்க விடக் கூடாது?
சமூகம் எத்தனை ஹராமான விடயங்களை செய்துகொண்டிருக்கிறது? ஒரு முஸ்லிம் எத்தனை ஹராமான விடயங்களோடு பின்னிப்பிணைந்திருக்கிறான். அவற்றை உலமா சபையால் பத்வாவாக வெளியிட முடியாதிருப்பதற்கு காரணம் ஹராம் பத்வாவிற்கு பணம் வழங்க இந்த சமூகத்தில் யாருமே இல்லாமல் இருப்பதுதானே!
மற்றும் ஹலால் பத்வா போன்றல்ல ஹராம் பத்வா பல நிறுவனங்களுக்கு நஷ்டத்தை உருவாக்கும். உலமாசபைக்கு அச்சுறுத்தல்கள் வரும் அதனால்தான் உலமா சபை ஹராம் விடயத்தில் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறது
உலமா சபை ஹராமுக்கும் பத்வா வழங்கவேண்டும்.
அந்த பத்வாவிற்குரிய பணத்தை பள்ளிவாசல் பள்ளிவாசலாய் பிச்சை எடுத்தாவது கொடுக்க முஸ்லிம் சமூகம் முன்வரவேண்டும்.
.
ஹலால் தீர்ப்பிற்கு பணம் கிடைக்கிறது. ஹராம் தீர்ப்பிற்கு பணம் கிடைப்பதில்லை. ஹலால் பத்வா வியாபார, லாபம் நோக்கம் கருதி உலமா சபையிடம் வேண்டப்படுகிறது.
ஹராம் பத்வாவை கேட்பதற்கு யாருமேயில்லை. ஹலால் பத்வாவை வைத்து உலமா சபையும் வர்த்தக நிறுவனங்களும் சேர்ந்து பணம் சம்பாதிக்கின்றன.
ஹராம் பத்வாவினால் வர்த்தக நிறுவனங்களுக்கு நஷ்டத்தைத் தவிர வேறு ஒன்றும் வந்துவிடப்போவதில்லை. இதனால் யாருக்கும் ஹராம் பத்வா தேவையே இல்லை.
அதனால் சமுதாயத்தில் மலிந்துள்ள ஹராமான விடயங்கள் பற்றி பத்வா வெளியிட உலமா சபை முயற்சிப்பதுமில்லை. அதற்கு தேவையுமில்லை.
இவ்வளவு பிரச்சினைகளுக்குள்ளும் சமூகத்தில் தோன்றிவரும் மோசமான எதிர் விளைவு நிலையை இந்த உலமா சபை புத்திஜீவிகள்(?) புரியாமல் இருக்கின்றனர்.
அமெரிக்க, இஸ்ரேலிய பொருட்களை பாவிப்பது ஹராம் என்று பத்வா வழங்கிய யூசுப் அல் கர்ழாவி அவர்களை மதிக்கின்ற பலர் உலமா சபையில் அங்கத்துவம் பெற்றிருக்கின்றார்கள்.
உலமா சபையால் பள்ளிவாசல்களில் தொங்க விடப்பட்டுள்ள ஹலால் பிரசுரத்தில் பெண்களின் அழகுசாதனப் பொருட்களான பல வர்ண லிப்ஸ்டிக், கியூடெக்ஸ் கூட அச்சிடப்பட்டிருக்கிறது. உலமா சபையின் பார்வையில் லிப்ஸ்டிக், கியூடெகஸ் ஹலாலாக இருந்தால் உலமா சபையினர் தமது மனைவி மக்களுக்கு முதலில் அறிமுகப்படுத்த வேண்டும்.
இதன் மூலம் உலமா சபை என்ன சொல்ல வருகிறது? லிப்ஸ்டிக், கியூடெக்ஸ் படம் ஹலால் போர்வையில் ஏன் தொங்க விடப்பட வேண்டும்? இது முஸ்லிம்கள் மத்தியில் அமெரிக்க கலாசாரத்தை மறைமுகமாக திணிப்பதற்கு அந்த கலாசாரத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியாக ஏன் இதை எம்மால் கொள்ளமுடியாது?
அண்மையில் அல்கஹோல் அடங்கிய ஒரு பொருளுக்கு உலமா சபை ஹலால் பத்வாவை வழங்கியிருக்கிறது.
ஹராத்தை ஹலாலாக்கும் அமெரிக்க சதிக்கே இன்று உலமா சபை துணைபோகிறது. பணத்திற்கு அது விலைபோகிறது என்ற உண்மையை சமூகம் உணர்ந்து வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்திய சதிகளுக்கும், நாசகார சக்திகளுக்கும் உதவியளிப்போர் யாராக இருந்தாலும் அவர்களை முஸ்லிம் சமூகம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.
அல்லாஹ்வின் தீனை பாதுகாத்திட எல்லோரும் அணி திரள வேண்டும்.
அநியாயத்தைக் கண்டும் அமைதியாக, எடுத்துச் சொல்லாமல் இருப்பவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்...!

அல்லாஹ்வை மறந்து ஐநா படையின் உதவியைத் தேடும் அறிஞர்(?) கர்ளாவி.



சிரியா அரசை வீழ்த்துவதற்கு ஐநா படையின் உதவியை சிரிய மக்கள் நாட வேண்டுமென்று அண்மையில் கர்ளாவி அந்நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுததுள்ளார்.

 இணையத்தில் இந்தச் செய்தியைப் பார்த்த போது

சிங்கள மொழியில் இருக்கின்ற ஒரு பழமொழியே எனக்கு |ஞாபகத்திற்கு வந்தது.

யாருக்கும் தெரியாமல் பையில் மறைத்து வைத்திருந்த பூனை வெளியே பாய்ந்தது என்பதுதான் அந்த பழமொழி.

கர்ளாவியின் இஸ்லாமிய பிரசாரம் என்ற பையிலிருந்த மத்திய கிழக்கில் அமெரிக்க இஸ்ரேல் அரசியல் நலன் காக்கின்ற அரபு அரசியலை பாதுகாக்கும் பூனை வெளியே பாய்ந்து விட்டது.

சிரியாவின் மக்கள் போராட்டத்தை ஏகாதிபத்திய மாற்றுச் சக்திகளின் கைகளுக்கு மாற்றுவதற்கு கர்ளாவி கடும் முயற்சி எடுப்பது தெளிவாக தெரிகிறது.



கர்ளாவி கத்தார் நாட்டில் அந்த நாட்டு மன்னனின் அனுசரணையில் வாழும் ஒரு மகோன்னத சிந்தனையாளர். இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் மிகவும் விசுவாசமாகவும் நேசமாகவும் இருக்கும் கத்தார் நாட்டின் அரச குடும்பத்தோடு மிகவும் நெருக்கமாக ஒட்டி உறவாடுபவர்.



கத்தார் மன்னனுக்கும் கர்ளாவிக்கும் உள்ள உறவு

கத்தார் நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள கள்ள உறவை கண்டு கொள்ளாமல் நடிக்கும் இந்த கா்ளாவி , ஏனைய நாட்டு முஸ்லிம்களுக்கு ஸியோனிஸவாதிகளின்  கொகா கோலாவை பகிஸ்கரிக்க பாடம் நடத்துபவர்.

முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னர் எண்ணெய் கிடைக்காதா என்று கதிகலங்கி போயிருந்த இஸ்ரேலுக்கு ஆறுதல் கூறி, அனைத்து சலுகைகளையும் நான் தருவேன் என்று கூறியவர்தான் கத்தார் மன்னர். இந்தக் கத்தார் மன்னரும் கர்ளாவியும் இணைபிரியா நண்பர்கள்.

கத்தார் மன்னனுக்கும் இஸ்ரேலிய அமைச்சர் 
ஸிபி லிவினிக்ககும் உள்ள உறவு
இன்று கத்தார் நாடு இஸ்ரேலுக்கு பெற்றோலை மலிவு விலையில் அள்ளிக்கொட்டுகிறது. இது எகிப்தின் மக்கள் எழுச்சியின் போது கத்தார் மன்னர் இஸ்ரேலுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று.

இஸ்ரேலுக்கு எண்ணெய் வழங்கும் இந்த வாக்குறுதி வெளியான போது கூட கர்ளாவி இது தொடர்பாக எந்தக் கருத்தும் வெளியிடவில்லை. மௌனமாகவே இருந்து இதனை அங்கீகரித்தார்.

இப்படி ஸியோனிஸத்திற்கு துணை போகின்ற இந்த கர்ளாவிதான் அமெரிக்காவின் இஸ்ரேலின் எதிரிகளை இலக்கு வைத்து எதிரிகளை இலக்கு வைத்து பத்வா பள்ளிக்கூடம் நடத்துகிறார். நாடகம் ஆடுகிறார்.

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் பைதுல் முகத்திஸை தருசிப்பதைக் கூட ஹராம் என்று பத்வா வழங்கியவா்தான் இந்த கர்ளாவி. காரணம் இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்று அவர்களிடம் அனுமதி கேட்டு அந்த பூமிக்கு செல்வது கூடாது என்று எங்களுக்கு உபதேசிக்கும் கர்ளாவி அந்த நாட்டுக்கு கத்தார் மன்னர் நிபந்தனையற்ற முறையில் இன்று உதவி செய்து வருவதை ஏற்றுக்கொள்கிறார். அங்கீகரிக்கின்றார்.

அமெரிக்காவிற்கு எதிரியாய் இருப்பவர்ககளை எப்படியாவது இஸ்லாத்தின் எதிரியாக இருப்பவர்களாக சித்தரித்துக் காட்டி சேறு பூசி அவர்களை கொலை செய்யுங்கள் என்று கூறும் அளவிற்கு ஒரு தனிமனிதனான கர்ளாவிக்கு என்ன உரிமை இருக்கிறது?  அவருக்கு யார் அந்த உரிமையை வழங்கியது? ஒரு கைதியை கொலை செய்வதற்கு அவருக்கு பின்புலமாக இருக்கின்ற அமெரிக்கா வும் இஸ்ரேலும் அங்கீகாரம் வழங்கலாம்.  ஆனால் இஸ்லாம் ஒருபோதும் அந்த அங்கீகாரத்தை வழங்காது. ஓரு குற்றவியல் சார்ந்த கொலை செய்யுங்கள் என்ற ஆணைக்கு அமெரிக்காவே அவருக்கு ஓர் அதீத பலத்தைக் கொடுத்திருக்கிறது.

சட்டம், ஒழுங்கு, ஐனநாயகம், மனித உரிமை என்று கூக்குரல் இடுபவர்கள் கூட ஒரு தனிமனிதனான கர்ளாவி இன்னொருவரை பகிரங்கமாக கொலை செய்யுங்கள் என்று கோரிக்கை விடுவதை தவறு என்று  கண்டுகொள்ளவில்லை.

கர்ளாவி சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு வேதவாக்காக நினைத்து பின்பற்றும் அவரின் பக்தகோடிகள் இந்த '' அவனை கொலை செய்யுங்கள் '' கோரிக்கையை வீரவசனமாக ஏற்றுக்கொண்டார்கள்.

அமெரிக்காவோடு முரண்படும் எந்த நாட்டுத் தலைவருக்கும் எந்த பிரசைக்கும் இந்த கர்ளாவியின் கொலை பத்வா மீண்டும் பிரகடனப்படுத்தப்படலாம்.

(அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் மறைமுகமாக இஸ்லாத்தின் போர்வையில் ஊழியம் புரியும் இவர்களின் செயற்பாடுகளை கருத்து ரீதியாக நான் இங்கு முன் வைக்கும் போது , அதற்கு கருத்து ரீதியாக முகம்கொடுக்காமல் , பதிலளிக்காமல் எனக்கு கொலை அச்சுறுத்தல் மின்னஞ்சல்களையும், போலியான குற்றச்சாட்டுகளையும் இணையம் மூலம்  அனுப்பி வருகின்றனர்.


எனது கருத்தை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை இருக்கிறது. கருத்து சொல்வதற்கு எனக்கு இருக்கும் உரிமையை மறுப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்பதை இங்கு நான் கூறி வைக்க விரும்புகின்றேன்.


பெற்றோல் டொலர்களுக்காக இஸ்லாம் பேசும் இவர்கள் அதே பெற்றோல் டொலருக்காக என்னைக் கொலை செய்வது பெரிய காரியமுமல்ல. லிபியாவின் தலைவா் கடாபி கட்டிக்கொடுத்த கலாபீடத்தின்  மாநாட்டு மண்டபத்தில் பேச பயிற்சி பெற்று பெரும் மனிதராகி(?) பேச்சாளர்களாக மாறி அவரைக் கொலை செய்த நாளை அல்லாஹ்வின் நாள் என்று கொண்டாடும் நாயை விடக் கேவலமான நன்றிகெட்ட குள்ள நரிக் கூட்டம் எனக்கும் இந்த தண்டனையை வழங்க தயங்க மாட்டார்கள் என்பதை அவா்களின் ஒளிந்து விளையாடும் செயறபாடுகளிலிருந்து புரியக் கூடியதாய் இருக்கிறது.  


எது எப்படி இருப்பினும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்காக இஸ்லாம் பேசும் சமூகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்தக் கைக்கூலிகளின் செயற்பாடுகளை உலகறியச்செய்வது அல்லாஹ்வினதும், அவனது இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களினதும் மார்க்கத்திற்கு செய்யும் ஒரு பேறாகவே நான் கருதுகின்றேன்.)

அது மட்டுமல்ல இன்று இந்த கர்ளாவி
அமெரிக்காவின் எதிரியாய் இருக்கும் நாடுகளுக்கு பத்வா வழங்கும் ஒரு பெக்டரியாக அவர் மாறி வருகிறார்.

கடாபியை கொலை செய்ய பத்வா கொடுத்த அவர் பலஸ்தீன் காஸாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு கத்தார் மன்னன் குறைந்த விலையில் எரிபொருள் வழங்கி உதவி செய்வதை கண்டுகொள்வதில்லை. கண்டிப்பதில்லை.

மத்திய கிழக்கின் எண்ணெய்யைக் கொள்ளையிட அமெரிக்கா நடாத்தும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு ஏதுவாக அரபு மண்ணை தளங்களாக அமைத்துக் கொடுத்துள்ள அரபு மன்னர்களை இந்தக் கர்ளாவி கடிந்து கொள்வதில்லை.

அமெரிக்காவின் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் ஐ.நா வை சிரியாவில் தலையிட வேண்டும் என்று கோரும் கர்ளாவியின் போக்கை எந்த அறிவுள்ள முஸ்லிமும் அங்கீகரிக்கமாட்டான்.

கர்ளாவின் கருத்தின் படி சிரியா நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு அமெரிக்காவின் அடிவருடியாக செயற்படும் ஐநா வே நீதி செலுத்த வல்லது.  ஐநா சபை உலகை நீதியால் நிறைத்து வருகிறது. அதன் துணை கொண்டு சிரியாவைக் காப்பாற்ற அவர் கனவு காணுகிறார்.

இந்த ஐநா முஸ்லிம் உலகிற்கு மாத்திரமல்ல முழு உலகிற்கும்  இழைத்திருக்கும் கொடுமையை எண்ணிப்பார்க்கத்தான் முடியுமா?அமெரிக்காவின் மறைமுக ஏஐன்டாகசெயற்படும் கர்ளாவியின் பத்வா பூச்சாண்டி , பெற்றோல் டொலர்களுக்குள் புதையுண்டு கிடக்கிறது.

கர்ளாவியின் அமெரிக்க அரசியல் நலன்காக்கும் இஸ்லாமிய பிரசாரத்தை ஏற்று அவரை புகழ்பாடித் திரிவதற்கு இளிச்சவாயர்களான இலுப்பைப் பூக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

80களில் ஆப்கானிலிருந்து ரஸ்ய படையை விரட்டியடித்து விட்டு அமெரிக்க படைகளுக்கு அந்த பூமியை தானமாக கொடுத்த ஜிகாதுக்காக அயராது பாடுபட்ட கர்ளாவி, மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சியோடு மற்றுமொரு முறை விழித்துக் கொண்டிருக்கிறார்.

எகிப்தில் அரசுக்கு எதிராக எழுந்து உயிர் நீத்த இளைஞர்கள் எவ்வளவோ பேர் இருக்க, எழுச்சிக்கு வித்திட்டர்கள் நாங்கள்தான் என்று உறக்கத்திலிருந்து  விழித்து எகிப்துக்கு ஓட்டமெடுத்தர். வெள்ளிக்கிழமை குத்பாவில் வீர உரை நிகழ்த்தி விட்டு கத்தாருக்குள் ஓடி வந்து கண்ணயர்ந்த கர்ளாவி, இன்று சிரியாவைப் பார்த்து சீறிப்பாய்கிறார்.

ஆப்கானை, ஈராக்கை, லிபியாவை, அமெரிக்காவிற்கு தாரை வார்த்து விட்டு, இப்போது சிரியாவைப் பார்த்து  இந்தக் கன்றாவி கண் சிமிட்டுகின்றார்.

அமெரிக்காவிற்கு விசுவாசமாக இருந்து க்கொண்டு கடந்த 200 ஆண்டுகளாக பஹ்ரைன் மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக அந்நாட்டை ஆளும் கலீபா குடும்பத்தினரை பதவி விலக வேண்டும் என்று பஹ்ரைன் மக்கள் போராடி வருகின்றனர். அந்த மக்களின் போராட்டத்தை பிரிவினைவாதம் என்று பீற்றித்தள்ளிய கர்ளாவி, அமெரிக்க சார்பான கலீபா மன்னர் குடும்பத்தை காப்பாற்ற அப்பட்டமாக உதவி வருகிறார்.

பஹ்ரைனில் ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்பட்டால் அங்குள்ள அமெரிக்காவின் ஐந்தாவது பாரிய கடற்படைத்தளத்தை பாதுகாக்கின்ற பிரச்சினை அமெரிக்காவிற்கு ஏற்படும்.

எனவே பஹ்ரைன் நாட்டு எழுச்சியை பிரிவினைவாதம் என்ற போர்வையில் பிரசாரம் செய்த கர்ளாவி அந்நாட்டு மக்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு சவூதி இராணுவத்தை அனுப்பிவதற்கான நியாயத்தை தோற்றுவித்தார்.
இன்று பஹ்ரைனில் சவூதி இராணுவம் போராட்டக்காரர்கள் மீது பல கொடுமைகளை நிகழ்த்தி வருகிறது.

2009ம் ஆண்டு காஸாவில் இடம்பெற்ற சம்பவம் நிகழ்காலத்தில் மிக மோசமான கொலைகளாகக் கருதப்படுகின்றன. சுற்றி வர அரபு நாடுகளை வைத்துக்கொண்டு அவர்களைக்காப்பாற்ற யாருமேயில்லையா என்று கதறும் போது மௌனமாக பார்த்துக் கொண்டுருந்த சவூதி அரேபியா பஹ்ரைனில் போராட்டத்தை நசுக்கி அமெரிக்க கடற்படைத்தளத்தை பாதுகாக்க தனது இராணுவத்தை அனுப்பியது.

காஸா கொலைகளைப் பார்த்து முஸ்லிம்கள் பதறிய போது பார்வையற்ற குருடர்களாய் இருந்து அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த அரபு மன்னர்களைப்பற்றி இந்தக் கர்ளாவி எந்த பத்வாவையும் வெளியிடவில்லை.

பஹ்ரைனில் அமெரிக்க கடற்படைத்தளத்திற்கு ஆபத்து வருகிறது என்ற நிலையில் பதறிப்போய் பஹ்ரைன் போராட்டத்திற்கு எதிராக பத்வா வழங்குகின்ற கர்ளாவியும், அதனைப் பாதுகாக்க தனது இராணுவத்தை அனுப்பி அந்நாட்டு மக்கள் மீது அட்டகாசம் புரியும் சவூதியும் ஒரே நிகழ்ச்சி நிரலின் இரண்டு நிகழ்வுகளே.

காஸா தாக்குதலின் போது பலஸ்தீனத்திற்குசவூதி அரசு தனது இராணுவத்தை அனுப்பி இஸ்ரேலுக்கு பாடம் புகட்டி இருக்கலாமே!

இதிலிருந்து என்ன புரிகின்றது?

இஸ்ரேலை அடக்காத கர்ளாவியும் அவரது அரபு எஐமானர்களும்  அமெரிக்காவோடு இணைந்து இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்த இருக்கின்ற நாடுகளை துவம்சம் செய்ய தொடங்கியிருக்கின்றார்கள்.

லிபியா, சிரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு சிம்மசொப்பனமாக இருந்த இருக்கின்ற நாடுகள். லிபியாவும் ஈராக்கும் அந்த நாடுகளின் போராட்டத்தினால்  தலைவர்கள் கொலை செய்யப்படும் அளவிற்கு போராட்டத்திற்கு சீஐஏ உளவாளிகளின் சதிகளினாலும், கர்ளாவி போன்ற ஏகாதிபத்திய ஏஐன்ட்களின் பத்வாவினாலும்  புத்துயிர் அளிக்கப்பட்டது.

மத்திய கிழக்கில் மீதமிருக்கும் இஸ்ரேல் விரோத நாடுகளில் எஞ்சியிருப்பது சிரியாவும், ஈரானும், லெபனானும் கர்ளாவியின் பத்வா நாடகம் இப்போது சிரியாவிற்கு எதிராக அரங்கேறியிருக்கிறது.  படிப்படியாக அது ஏனைய நாடுகளுக்கு எதிராகவும் அரங்கேறும். மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் குறைந்துகொண்டு வருகிறார்கள்.

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஆதரவான நாடுகள் பாதுகாக்கப்படுகின்றன.

மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சியில் சிக்குண்ட நாடுகளில் எகிப்தும், ரியூனிசியாவும், யெமனும், பஹ்ரைனும் அமெரிக்க  ஆதரவு நாடுகள் அந்தப் போராட்டங்களை  தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்ட அமெரிக்கா அதன் தலைவர்களைப் பாதுகாத்துக்கொண்டு போராடடத்தையும் கர்ளாவி போன்ற அதன் அடிவருடுகளை வைத்து காத்துக்கொண்டது.

அமெரி்க்க நேச நாடுகளைப் பாதுகாக்கின்ற கள்ளத்தனத்தை முப்தியாக வேசமிட்டு பத்வாவாக கர்ளாவி வெளியிட்டு வருகிறார்.

பஹ்ரைன் மக்களின் போராட்டம் வெற்றிபெற்றால் அமெரிக்காவின் பாரிய கடற்படைத்தளத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலை தவிர்க்கவே இந்த கர்ளாவி பஹ்ரைன் போராட்டத்தை பிரிவினைப் போராட்டம் என்ற அமெரிக்க சார்பு பிதற்றல் பத்வாவை வெளியிட்டு மகிழ்ந்தார்.

எகிப்தின் போராட்டம் முழுக்க முழுக்க மக்கள் போராட்டமாகவே வெடித்தது.
முபாரக்கின் இராணுவம் கூட நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றே தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்தது.  அந்த நேரம் கடாபிக்கு கொடுத்த கொலை பத்வாவை கர்ளாவி முபாரக்கிற்கு வழங்கவில்லை.  காரணம் முபாரக் அமெரிக்காவின் கையாள், அரபு மன்னர்களின் நேசன்.

தன்னையே கொலை செய்ய காத்துக்கிடந்த முபாரக்கிற்கு வழங்காத பத்வாவை கடாபிக்கு வழங்கியது அவர் அமெரிக்காவின் விரோதி என்ற நிலைப்பாட்டை வைத்தே.

தூனீசியாவில் அட்டகாசம் புரிந்த பின் அலியை இன்று சவூதி அரசு பாதுகாக்கிறது. முபாரக்கை அமெரிக்கா பாதுகாக்கிறது. அவர்களுக்கு நீதி விசாரணை எதுவுமில்லை. பத்வாக்கள் எதுவுமில்லை. காரணம் அவர்கள் அமெரிக்காவின் ஆதரவாளர்கள்.

கடாபியின் மகன் சைபுல் இஸ்லாத்தை சர்வதேச குற்றவியல் மன்றில் நீதிக்காக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடும் இந்த கர்ளாவி கும்பல்கள் பின் அலீ பற்றியும், முபாரக் பற்றியும் மூச்சு விடுவதில்லை. அவர்களை பாதுகாக்கும் அரபுகள் பற்றி வாய் திறப்பதில்லை.

லிபியாவில் அமெரிக்க அரசினால் போசிக்கப்பட்ட போராட்டக்காரர்களால் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட கைதியான கடாபியை கொலை செய்த முறையை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?

கதறக்கதற ஒருவனை கொன்றொழிப்பதை றசூலுல்லாஹ்வின் சுன்னாஹ் அங்கீகரிக்க வில்லை.

அல்லாஹு அக்பர் என்று ஒரு கைதியின் கழுத்தை அறுப்பதை, அவனை அடித்துத் துன்புறுத்தி கொலை செய்வதை இஸ்லாத்தின் உன்னதச் செயல் என்று கர்ளாவியும் அவரின் கும்பல்களும் மார்தட்ட முடியும். ஆனால் அந்தச் செயல் இஸ்லாம் வெறுக்கின்ற இழிவான செயல் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு ஓர்  உண்மையான முஸ்லிமுக்கு இருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்திய நலன்காக்கும் மத்திய கிழக்கு அரபு அரசியலில் தனது வயிற்றுப்பசியை தீர்த்து வரும் கர்ளாவியும் அவரின் கும்பல்களும் அமெரிக்க நவ காலனித்துவத்தின் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்பட்டு வருகின்றனர்.

மேற்குலகோடு முரண்படும் நாடுகளுக்கு தண்டனையாக உள்நாட்டிலேயே பிரச்சினைகளை உருவாக்கும் , பிரச்சினைகளை உயிராக்கும் வேலைத்திட்டங்களை இந்தச் சக்திகள் செய்து வருகின்றன.

இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல, அண்மைக்காலமாக மேற்குலகோடு இலங்கை ஒரு முறுகல் நிலையில் இருக்கின்றது. கத்தாரை தளமாகக் கொண்டு இயங்கும் அரபு எஐமானர்களின் ஊடக நிறுவனமான அல்ஐஸீரா இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற செய்திகளை ஒளிபரப்பி செனல் 4 தொலைக்காட்சிக்கு அடுத்த நிலையில் செயல்பட்டதையும் நாங்கள் மறக்கக் கூடாது. அல்ஐஸீராவின் இந்த செயற்பாட்டில் ஒரு பாரிய அரசியல் பின்னணி இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக, காஸா படுகொலைகளுக்கு எதிராக கொடுக்காத பாரிய விளம்பரத்தை அல்ஐஸீரா இலங்கைக்கு எதிராக கொடுத்ததுவும் இந்த பின்னணியில்தான்.

80களில் ஆப்கானில் பெஷாவரில் அமெரிக்கா ஐிஹாத் பாடம் நடாத்திய போது அதில் படித்து பட்டம் பெற்று வெளியேறியவர்கள் இலங்கையிலும் இருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

கர்ளாவியின் சிஷ்யர்களாக இருக்கும் இவர்கள், முக்கிய கலாநிலையங்களில் பொறுப்பானவர்களாகவும், இலங்கை ஊடகங்களினால் ஊதிப்பெருப்பிக்கப்பட்டவர்களாகவும் இருப்பது அமெரிக்காவிற்கு இனமோதல் தொடர்பான எந்தக் காரியத்தையும் இலங்கையில் மேற்கொள்ள இலகுவானதான ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகி வருவதை உணர முடிகிறது.

அமெரிக்காவிற்கு தேவையான போது ஏதாவது ஒரு சிறிய இனமுறுகலை வைத்து ஐிஹாதிய தீயில் இலங்கையை பொசுக்கிவிட முடியும். அதற்கு ஏதுவாக அரபுகளின் அணுசரணையில் இலங்கையில் இடம் பெறும் நிகழ்ச்சிகளை நான் அவ்வப்போது பத்ர் களத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

அமெரிக்காவின் நவ காலனித்துவ சிந்தனையால் வடிவமைக்கப்பட்டுள்ள, பெற்றோல் டொலர்களால் போஷிக்கப்படுகின்ற இன்றைய இஸ்லாமிய (?) வாதிகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அல்லாமல் அதன் அழிவிற்கே துணை போகின்றனர்.
 
இது தவ்ஹீத் சாராத ஒருவரின் தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல் 

‘இஸ்லாம் தான் தீர்வு’ என்பது இனி வேண்டாம்!

கொள்கையை மாற்றிய இக்வான்கள்


எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் தான் உருவாக்கியுள்ள புதியகட்சியின் கொள்கையில் புதிய மாற்றங்களை அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே அதன் அரசியல் கொள்கையிலிருந்த ‘இஸ்லாம் தான் தீர்வு’ என்ற சுலோகத்தை நீக்கியுள்ளதாக அதன் உத்தியோகப+ர்வ இணையதளம் அறிவித்துள்ளது. 

இஸ்லாம்தான் தீர்வு என்ற அந்த வாசகத்திற்குப் பதிலாக ‘சுதந்திரம்தான் தீர்வு! நீதி அமுலுக்குரியது ’“Freedom is the solution and justice is the application” என்ற சுலோகத்தை மாற்றியிருப்பதாகவும் அது அறிவித்துள்ளது.
இக்வான்களின் இந்த திடீர் அரசியல் கொள்கை மாற்றத்தால் அந்த இயக்கத்தின் உள்ளே கருத்துமோதல்கள் உருவாக்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன். குறிப்பாக இளைஞர் அமைப்பினர் இக்கருத்தோடு முரண்படுவதாகவும் அறிய வருகிறது.
‘இஸ்லாம் தான் தீர்வு’ என்று காலாகாலமாய் குரல் எழுப்பி வந்த இக்வான்கள், இதற்கு மாற்றமான கருத்துக்களைக் கொண்டவர்களை காரசாரமாக விமர்சித்தும், 'தாகூத்துகள்' என்று  தூற்றியும் வந்தனர்.
இன்று இக்வான்களே ''இஸ்லாம் தீர்வு இல்லை'' என்ற முடிவுக்கு வந்திருப்பது, இஸ்லாமிய அரசியல் கருத்தியலிலிந்து நழுவி அவர்கள் அதழ பாதாளத்தை நோக்கிய வீழ்ச்சிப் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இது தவ்ஹீத் சாராத ஒருவரின் தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்

16.12.11

தர்வீஸ் ஹாஜியார் சொன்னதென்ன? தல்கஸ்பிடியில் நடப்பதென்ன?


அன்பிற்கினிய கொள்கை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
சத்தியத்தை சொல்வதற்கு அனைவருக்கும் பொதுவுடைமையான அல்லாஹ்வின் இல்லத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் சத்தியத்தை சொல்வதற்கான அல்லாஹ்வின் அருள்களில் ஒன்றான எழுத்து ஊடகத்தைப் பயன்படுத்தி இப்பிரசுரத்தின் மூலம் உங்களோடு உறவாடுகின்றோம். நிதானமாக வாசித்து உண்மையை உணருமாறும் அதற்கு உதவுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
 இலங்கை நாட்டில் தவ்ஹீத் எழுச்சி அப்துல் ஹமீத் அல்பக்ரி (ரஹ்) என்ற தர்வீஸ் ஹாஜியார் அவர்களினால் துவக்கப்பட்டபோது, அவரை ஆதரித்து, ஏகத்துவத்தை ஏற்ற பெருமைக்குரிய ஊர்களில் எமது தல்கஸ்பிடியும் ஒன்று என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றோம். தர்வீஸ் ஹாஜியார் அவர்கள் யாருக்கும் அஞ்சாமல் அல்குர்ஆன் சுன்னாவை மட்டும் பிரசாரம் செய்தார். அசத்தியவாதிகள் யாருடனும் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. துhய தவ்ஹீதை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. அதனால் அன்று ஏகத்துவம் வீரயமாகப் பரவியது. அவரது துணிவான பிரசாரத்தால் எமக்கு சரியான கொள்கை கிடைத்தது. எனினும், அவருக்குப் பின்னால் இந்த நாட்டில் துணிவாகப் பிரசாரம் அவர் அளவுக்குத் தியாகத்துடன் நடைபெறவில்லை. அவரது பெயரைப் பயன்படுத்தி இன்று பிழைப்பு நடத்துவோர், அவர் யாரை எதிர்த்தாரோ அவர்களோடு கூட்டிணைந்து, வழிகெட்ட கொள்கைகளை உயிர்ப்பிக்க உதவி செய்து, உண்மையான கொள்கைவாதிகளை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். 
அதனால், பல ஊர்களில் தவ்ஹீத் பள்ளிக்குக் கட்டுப்பட்டிருந்த பலர் கொள்யைற்ற இயக்கங்களில் இணைகின்ற ஒரு துர்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. வழிகெட்ட இயக்கங்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்குள் ஊடுருவதற்குக் காரணம் அவர்களுக்கு மத்தியில் தவ்ஹீத் பற்றிய தெளிவின்மையும் பள்ளியை நிர்வகித்த நிர்வாகிகளின் அறியாமையும் கொள்கைத் தெளிவற்ற கையாளாகாத தனமும்தான் என்பதை நீங்கள் நன்கு அறிவீh;கள். 
எனவே, நாம் எமது ஊரில் தவறான கொள்கையுள்ள ஒரு ஜமாஅத் உருவானபோது, அதன் தவறான கொள்கைகளைப் பற்றிய தெளிவை வழங்கி பல இளைஞர்களை அந்த வழிகேட்டிலிருந்து நாம் தடுத்துள்ளோம்.(அல்ஹம்துலில்லாஹ்) தவ்ஹீத் ஜமாஅத்தைக் காப்பாற்ற நாம் எடுத்த முயற்சிகளை மறைத்த பலர் மீண்டும் நாம் தூய்மையான தவ்ஹீதைப் போதிக்க முனையும் போது எம்மீது புதிய இயக்கம் என்ற ஒரு தவறான இருட்டுப் பிரசாரத்தை குருட்டுத் தனமாக மேற்கொள்கின்றனர். கொள்கைத் தெளிவில்லாத சிலரும் பதவி மோகம் கொண்டோரும் நாம் என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் அவதூறு பரப்புகின்றனர். சர்ச்சைக்குரியோர் என்று சகட்டுமேனிக்கு சலப்புகின்றனர். என்ன சர்ச்சை என்றால் எந்தப்பதிலும் இவர்களிடமில்லை. பொதுமேடையில் விவாதிக்கவும் இவர்கள் தயங்குகின்றனர். நியாயமும் உண்மையுமுள்ளோர் மக்கள் அனைவர் முன்னிலையிலும் பகிரங்க விசாரணைக்குத் தயாராக இருக்கவேண்டும். சவால் விட்டவர்கள் பின்வாங்கக் கூடாது. அதை நிரூபிக்க வேண்டும். முன்வரவில்லையானால் அது அவதுhறும் பொய்யுமாகும். சத்தியம் பின்வாங்கியதாக சரித்திர சான்றுகள் இல்லை. எனவே, நாம் உண்மையையும் சத்தியத்தையும் நேசிக்கும் கொள்கைச் சகோதரர்களான ஊர் மக்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கவே இதை உங்கள் முன்வைக்கின்றோம்.
“இஸ்லம் அந்நியமான நிலையில் தோன்றியது. அது மீண்டும் அந்நிய நிலைக்குச் செல்லும். அதை சீர் செய்வோர் மீது சுபசோபனம் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்று தவ்ஹீத் என்ற போர்வையில் சில போலி இயக்கங்கள் உள்ளன. இவர்கள் தவ்ஹீதை வளர்ப்பதை விட தவ்ஹீதை சிதைக்கும் பணிகளைச் செய்து வருகின்றனர். தவ்ஹீதுக்கு எதிரான அத்தனை அனாச்சாரமும் நடைபெறும் பள்ளிகளைக் கட்டி அசத்தியவாதிகளிடம் ஒப்படைக்கின்றனர். இதை நீங்கள் ஆய்வு செய்து காண வேண்டிய அவசியமில்லை. குருநாகல் - கண்டி வீதியிலுள்ள நாப்பைக்குச் சென்று பாருங்கள். தவ்ஹீத் ஜமாஅத் என்று பாமரமக்களால் நம்பப்படும் ஜேஏஎஸ்எம் என்ற நிதி நிறுவனம் கட்டிக் கொடுத்த பள்ளியில் தவ்ஹீத் வழிமுறையா? அதற்கு விரோதமான நடைமுறையா? நடைபெறுகிறது என்று அவதானித்துப் பாருங்கள். எமது ஊரில் அவர்கள் கட்டிய பள்ளியில் கூட்டு துஆ, சுபஹ் குனுhத், தப்லீக் ஜமாஅத் வருகை என்பன நடைபெறுவதில்லை. ஆனால் இவர்கள் கட்டிய நாப்பை பள்ளியில் இவை அத்தனையும் நடைபெறுகின்றன. ஒரு நிறுவனத்தினால் கட்டப்பட்ட இரண்டு பள்ளிகளில் இரண்டுவிதமான நடைமுறைகள் உள்ளன.  ஏன் இந்த இரட்டை வேடம்? பித்அத்திற்கு உதவினால் தவ்ஹீத் வளருமா? சிதையுமா? இந்த போலித்தனத்தை நாம் எதிர்க்கின்றோம். அவர்களின் இத்தகைய வழிகேட்டை சுயநலத்திற்காக ஆதரிப்போர் எம்மை வெறுக்கின்றனர்.தர்வீஸ் ஹாஜியாhpனால்  ஒழிக்கப்பட்ட பித்அத் இன்று அவரது பெயரைப் பயன்படுத்தி பிழைப்பு நடாத்துவோரால் அரங்கேற்றப்படுகிறது. 
இதனால், உண்மையான தவ்ஹீத்வாதிகள் புறக்கணிக்கப்பட்டு போலித் தவ்ஹீத்வாதிகள் உருவாக்கப்படுகின்றார்கள். பதவிக்காவும் பணத்திற்காகவும்; தவறானவர்கள் பின்னே செல்லும் கொள்கைத்தெளிவற்றவர்களை நேர்வழியின் பக்கம் அழைக்கவே நாம் முயற்சிக்கின்றோம். தர்வீஸ் ஹாஜியார் எந்த முறையில் தூய்மையாகப் பிரசாரம் செய்தாரோ அந்த வழிமுறையில் தவ்ஹீதைச் சொல்ல ஆசைப்படுகின்றோம். நீங்கள் உண்மையான கொள்கையையும் துhய்மையான தவ்ஹீதையும் விரும்புபவர்கள் என்றால் தர்வீஸ் ஹாஜியாரின் தஃவாவிற்கு உதவுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான்.
தவ்ஹீத்வாதிகளுக்குள் பிரிவினை வரக்கூடாது, சத்தியத்தை ஒழித்து மறைத்து சொல்லக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக நாம் பல முறை பள்ளி நிர்வாகிகளிடம் நாகரிகமான முறையில் அனுமதி கேட்டோம். அல்லாஹ்வின் பள்ளியில் அவனது மார்க்கத்தை சொல்வதற்கு எங்களுக்கு அனுமதி தரப்படவில்லை. 2009 ரமழானில் கேட்டோம். அனுமதி மறுக்கப்பட்டது. புதிய நிர்வாகம் வரும் அதன் பின்னர் செய்யுங்கள் என்று அன்று சொல்லிவிட்டு மீண்டும் பதவியை தக்க வைத்தவர்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எனினும் இந்த 2011 ரமழானிலும் நாம் அனுமதி வேண்டினோம். அப்போதும் நாம் வஞ்சிக்கப்பட்டோம். அத்தோடு பள்ளியில் அனுமதி தரமாட்டோம், வேறு எங்காவது Class ஐ நடத்திக் கொள்ளுங்கள் என்று கலைக்கப்பட்ட நிர்வாகிகளால் சொல்லப்பட்டது. அந்த அனுமதியோடு நாம் ஒரு வீட்டில் வாடகை கொடுத்து class செய்வதற்கான கலந்துரையாடலை நடாத்திக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த தற்போது கலைக்கப்பட்டுள்ள நிர்வாகிகளில் ஒருவர் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார். “இங்குள்ளவர்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளது. உங்களை விட எனக்கு மார்க்கம் தெரியும் என்று மார்க்க அறிவு அற்ற அவர் மமதையாகப் பேசியதோடு, மறுநாள் அவரும் இரட்டைப்பதவி வகித்த இன்னொரு நிர்வாகியும் சென்று அங்கு class நடாத்த அனுமதிக்க வேண்டாம் என்று வீட்டு உரிமையாளியை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்கள். இது ஓர் அடிப்படை உரிமை மீரல்? தவ்ஹீதை ஆரம்பத்தில் எதிர்த்த குராபிகள் கூட இப்படி அநாகரிகமாக நடந்திருக்கமாட்டார்கள். அதன் பின்னர் நாம் சகோ. முபாரக் அவர்களின் வீட்டில் Class நடத்தியதை புதிய ஜமாஅத் என்று சிலர் தவறான பிரசாரம் செய்துவருகின்றனர். நடந்தவை என்ன என்று தெரியாத சகோதரர்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்தவே இதை வெளியிடுகின்றோம். நாங்கள் எந்த வித பித்னாவையும் ஏற்படுத்தவில்லை. சத்தியத்தை நிலைநாட்ட சந்தர்ப்பம் தாருங்கள் என்றுதான் கேட்கின்றோம். இது எந்தவகையில் தவறு என்று நீங்கள் சொல்லுங்கள்.
 உண்மையை அறிய விரும்பும் அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! பல வருடங்கள் நாங்கள் அனுமதி கேட்டும் எமது தஃவா முயற்சிகளை முடக்கி, துhய்மையான ஏகத்துவப் பிரசாரத்தை நியாயமான எந்தக் காரணமுமின்றி சுயநலத்திற்காகத் தடைசெய்ததனால், மார்க்கத்தை சொல்வது அனைவரின் உரிமை என்ற இஸ்லாத்தின் கட்டளைக்கு ஏற்ப நாம் எமது தஃவாப் பணியை ஆரம்பித்துள்ளோம். ஏனெனில், மார்க்கத்தை அறிந்து அதை சொல்லாமல் மறைத்தால் மறுமையில் நெருப்பாலான கடிவாளமிடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். எனவே, நாங்கள் அல்குர்ஆன் - அஸ்ஸுன்னா மட்டுமே இஸ்லாத்தின் மூலாதாரம் என்று கூறுகின்றோம். தவ்ஹீதைப் புதைத்து குராபத், பித்அத்துகளை வளர்ப்போரை தாட்சண்யமின்றி விமர்சிக்கின்றோம். மாற்று மதத்தினரிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்கின்றோம். கொள்கைத் தெளிவில்லாமல் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் மோதும் விரோதிகளின் பள்ளிகளுக்குப் போகக்கூடாது என்கின்றோம். வட்டிக்கு விளம்பரம் செய்து, ஷிர்க்கான கவிதைகளுக்கு உதவி, குராபிகளுக்குப் பள்ளி கட்டிக்கொடுத்து தவ்ஹீதை மறைமுகமாகச் சிதைத்து, குராபத்தை வளர்க்கும் பணியைச் செய்வோரையும் கண்டிக்கின்றோம். இதேபோல் பல சமூக நலப்பணிகளைத் தன்னார்வத்துடன் செய்து வருகின்றோம். ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில் “நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்று தீமைக்கு உதவுபவர்களுக்கு எச்சரிக்கின்றான்.
பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியன. அல்லாஹுத்தஆலா அவனது இல்லங்களை நிர்வகிக்கக் கூடியவர்களிடம் ஐந்து பண்புகள் அவசியம் இருக்க வேண்டும் என தனது திருமறையில் கட்டளையிடுகின்றான். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும். (அத்தவ்பா : 18)
மேற்கூறப்பட்ட ஐந்து பண்புகளும் எவரிடம் ஒருங்கிணைந்து காணப்படுகிறதோ, அவர் மட்டுமே பள்ளிவாசல்களின் நிர்வாகத்தில் இருக்க அருகதையுடையவர் ஆவார். இப்பண்புகளில் ஒன்று குறைந்தாலும் அவர் நிர்வாகியாக இருக்க எவ்வகையிலும் தகுதியற்றவராக ஆகிவிடுகிறார். இது, அல்லாஹ்வின் பள்ளியை பரிபாலிக்கவும் நிர்வாகிக்கவும் அல்லாஹ் விதித்த கட்டளையாகும். இந்தப் பண்புகளை ஒருவரிடம் எதிர்பார்க்க வேண்டுமானால் அவரிடம் மார்க்க அறிவு இருக்க வேண்டும். பள்ளியை நிர்வகிக்கத் தகுதியானவர்கள் நியமிக்கப்படவேண்டும். மார்க்கத்தைப் பின்தள்ளி மனோ இச்சையை பின்பற்றுவோரையும் பதவி ஆசையுள்ளோரையும் தகுதியற்றோரையும் நியமிக்கக்கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. நபி (ஸல்) கூறினார்கள்: அமானிதம் துஷ்பிரயோகம் நடைபெற்றால் மறுமையை எதிர்பார் என்றார்கள். அப்போது, எது அமானிதத் துஷ்பிரயோகம் என்று ஒருவர; கேட்கும் போது, தகுதி இல்லாதவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுவது என்று கூறினார்கள். ஆகக் குறைந்தது ஒரு விடயத்தை விவரிக்கும் போது, அதை மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையிலான நாவன்மையாவது இருக்க வேண்டும். அல்குh;ஆன் சுன்னா இவை இரண்டிற்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும். இதையே நாமும் வலியுறுத்துகின்றோம். பதவி மோகம் உள்ளோர் அதனால் எங்களை வெறுக்கின்றனர், அவதூறு பரப்புகின்றனர். இது எந்த வகையில் நியாயம் என்று நீங்கள் சிந்தியுங்கள்.
இனிய கொள்கைச் சகோதரர்களே! பள்ளிவாசல் யாருடைய அப்பன் வீட்டுச் சொத்துமல்ல. அதைக் கட்டித் தந்தவனுக்குக் கூட உரிமையில்லை. கட்ட உதவிய நிதி நிறுவனங்களுக்கும் தற்காலிக நிர்வாகிகளுக்கும் கூட உரிமையில்லை என்று அல்லாஹ் தெளிவாகக் கூறியுள்ளான். அது அல்லாஹ்வின் வீடு. அது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான சொத்து (அல்குர்ஆன் 82:18) அதில் அனைவருக்கும் மார்க்க விடயங்களை நடைமுறைப்படுத்தவும் தெளிவுபடுத்தவும் முழு உரிமையுள்ள பொது உடமை. மார்க்க விடயங்களைப் போதிப்பதைத் தடுப்பது மிகப்பெரிய அநியாயம் என்றும் பள்ளியைப் பாழாக்கும் பயங்கரவாதம் என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து  அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும்  மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.(அல்குர்ஆன் 2:114)
 இவ்வாறு நாங்கள் சொல்வதில் ஏதாவது தவறு என்று நீங்கள் கண்டால், அதை சுட்டிக் கட்டுமாறு அன்புடன் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம். யாருடன் வேண்டுமானாலும் பகிரங்க கலந்துரையாடல் அல்லது விவாதம் எதற்கும் தயாராக இருக்கின்றோம். எங்களை தவறாக விமர்சிப்பவர்களை நீங்கள் பகிரங்க விவாதத்திற்கு அழைத்து உண்மையை அறியுமாறு உங்களை நாங்கள் அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். அல்லாஹ்வின் இல்லமான பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்கும் போது, சிந்தித்து தகுதிபார்த்துக் கொடுங்கள். இல்லை என்றால் மறுமையில் நீங்களும் அல்லாஹ்விடம் தண்டைனைக்கு உள்ளாகிவிடுவீர்கள். நீங்கள் அனைவரும் பொறுப்புதாரிகள். உங்கள் பொறுப்புகள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். எனவே பக்கசார்பற்று அல்லாஹ்வுக்கு முழுமையாக அஞ்சி நாம் சொல்கின்ற கருத்துக்களை சிந்தித்துப்பாருங்கள். அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! 

மனித வாழ்வும், பெருந்தன்மையின் முக்கியத்துவமும்.(தொடர் - 02)


அன்பின் சகோதரர்களே! மனித வாழ்வும் பெருந்தன்மையின் முக்கியத்துவமும். என்ற இந்தத் தொடர் ஆக்கம் எனது நண்பர் சகோதரர் மனாஸ் அவர்களினால் எழுதப்படுகிறது. பெருந்தன்மை தொடர்பாக இஸ்லாம் சொல்லும் செய்திகள் என்ன? பெருந்தன்மையினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றிய செய்திகளையெல்லாம் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் மூலம் கட்டுரையாளர் அழகாகத் தெளிவுபடுத்துகிறார். தொடர்ந்து படியுங்கள் உங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பதியுங்கள்.

இறைத்தூதர்களின் பெருந்தன்மை.

ஈஸா (அலை) அவர்களின் பெருந்தன்மை.

ஈஸா (அலை) அவர்களுக்கு அவர்களின் சமுதாயத்தவர்கள் அவர்களைக் கொலை செய்வதற்கு எண்ணினார்கள். அதுமாத்திரமல்லாமல் அவர்களுக்கு பல கொடுமைகளையும் செய்து, அவர்களை அல்லாஹ்வின் இடத்துக்கு கொண்டு சென்று, அவர்கள் மீது இட்டுக்கட்டி, அவருடைய தாயாரை விபச்சாரி என்று பட்டம் சூட்டியும் கூட அவர்கள் அந்த மக்களை மன்னித்து பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்கள் அவர்கள் அந்த மக்களுக்காக அல்லாஹ்விடம் மன்னித்து விடுமாறு வேண்டினார்கள். இதை அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் பின்வருமாறு கூறிக்காட்டுகிறான். 

"நீ எனக்குக் கட்டளையிட்ட படி "எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!' என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட் களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்.) (அல்குர்ஆன்; 5:117- 118)

மூஸா (அலை) அவர்களின் பெருந்தன்மை.

மூஸா (அலை) அவர்கள் சமுதாயத்தவர்கள் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்ததைப் போன்று உலகில் யாரும் மாறு செய்யவில்லை அதே போன்று அதிகமாக கருத்து முரண்பாடு கொண்டதும் இந்த பனூஇஸ்ரவேலர்கள் தான். மூஸா (அலை) அவர்களுக்கு சொல்லொனா துன்பத்தைக் அவர்கள் கொடுத்தும் கூட அவர்கள் அந்த மக்களை பெருந்தன்மையுடன் மன்னித்து  அல்லாஹ்விடம் பிராத்தனையும் செய்தார்கள் திருமறைக்குர்ஆனில் இவ்வாறு அல்லாஹ் கூறுகிறான். 

நாம் நிர்ணயித்த இடத்தில் மூஸா தமது சமுதாயத்தில் எழுபது ஆண்களைத் தேர்வு செய்தார். அவர்களைப் பூகம்பம் தாக்கிய போது "என் இறைவா! நீ நாடியிருந்தால் (இதற்கு) முன்பே அவர் களையும் என்னையும் அழித்திருப்பாய். எங்களில் மூடர்கள் செய்ததற்காக எங்களை அழிக்கிறாயா? இது உன் சோதனை தவிர வேறில்லை. இதன் மூலம் நீ நாடியோரை வழி கேட்டில் விட்டு விடுகிறாய். நீ நாடியோருக்கு வழி காட்டுகிறாய். நீயே எங்கள் பொறுப்பாளன். எனவே எங்களை மன்னித்து, எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே மன்னிப்போரில் சிறந்தவன்'' என்று (மூஸா) பிரார்த்தித்தார். (அல்குர்ஆன். 7:155)

இறைத்தூதர்களில் ஒருவரின் பெருந்தன்மை.

 (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத் துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. "அந்த இறைத் தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்து விட்டார்கள். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, "இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்துவிடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக் கிறார்கள்' என்று சொல்-க் கொண்டிருந் தார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ஆதாரம் புகாரி (3477)


 இறைத்தூதர் ஒருவர் அவருடைய சமுதாய மக்களால் தாக்கப்பட்டு இரத்தம் முகத்தில் வடிந்து கொண்டிருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் மனிதர்களாகி நாம் இருப்போமானால் மனதில் கங்கணம் கட்டிக் கொண்டு பழிவாங்கத் துடித்துக் கொண்டிடருப்போம். ஆனால் அந்த இறைத்தூதர் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் என்னுடைய சமுதாயத்தை மன்னித்துவிடு அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள். என்று அவர்களை அவரும் மன்னித்து அல்லாஹ்விடமும் மன்னிப்பை கேட்டார்கள். இந்த அளவுக்கு இறைத்தூதர்கள் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் கூட அவர்கள் அல்லாஹ்வுக்காக பெருந்தன்மையோடு நடந்துள்ளார்கள். 


பனூ இஸ்ரவேலர்களில் இருவரின் பெருந்தன்மை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பனூ இஸ்ராயீலில்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், "என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், "நிலத்தை, அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், "உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?'' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், "எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று சொன்னார். மற்றொருவர், "எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது'' என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், "அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள்;  தான தர்மம் செய்யுங்கள்'' என்று தீர்ப்பளித்தார். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஆதாரம் புகாரி (3472)

இன்று நிலத்துக்காக சண்டையிடக்கூடிய பலர்களைப் பார்க்கிறோம்.ஆனால் இந்த இரண்டு மனிதர்களின் பெருந்தன்மையைப் பார்க்கும் போது இப்படியும் அந்தக் காலத்தில் மனிதர்கள் வாழ்ந்துள்ளார்களா? என்று மூக்கின் மீது கையை வைத்து சிந்தனை செய்ய வேண்டியுள்ளது.

நிலத்தை வாங்கியவர் நான் நிலத்தைத்தான் வாங்கினேன் அதில் உள்ள இந்த தங்கம் நிரம்பிய ஜாடியை வாங்க வில்லை என்கிறார்.நிலத்தை விற்றவரோ நிலத்துடன் சேர்த்து அதில் உள்ளவைகள் அனைத்தையும் தான் விற்றேன். என்கிறார். இப்படி இன்று பார்க்க முடிகிறதா? இதுதான் கிடைத்த சந்தர்ப்பம் என்றெண்ணி எல்லாவற்றையும் வாங்கியது மாத்திரமல்லாம் இவன் இருந்தால் நமக்கு ஆபத்து என்று நினைத்து அந்த மனிதனையே கொலைசெய்து விடும் நிலையை இன்று நாளேடுகளிலும் தொலைக் காட்சிகளிலும் தினம்தினம் கண்டு வருகிறோம் இதோ அந்த நல்ல மனிதர்களின் சம்பவம் படிப்பினைக்கு மாத்திரமல்லாமல் மனிதநேயத்தையும் நமக்கு இந்த சத்திய மார்க்கம் கற்றுத் தருகிறது.


அஷ்அரி குலத்தாரின் பெருந்தன்மை.

இந்த உலகம் எத்தனையோ குலங்களையும் கோத்திரங்களையும் சமயங்களையும் சமுதாய அமைப்புக்களையும் இது நாள் வரையும் கண்டு வந்துள்ளது. ஆனால் இஸ்லாத்தைக் கண்டும் காணாதது போன்று இந்த உலகில் வாழும் பெரும்பான்மையான இனத்தவர்களும் மதத்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எவரிடமும் காணப்படாத அளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் விட்டுக் கொடுப்பும் பெருந்தன்மையும் ஏராளமாக காணப்படுகிறது. நபி மார்கள் முதல் அவர்களுடைய தொண்டர்கள் அவர்களை இது நாள் வரையும் பின்பற்றுபவர்களிடமும் காணப்படுகிறது. பெருந்தன்மை என்றால் இஸ்லாத்தில் தான் என்பதற்கு இப்போது மேலும் ஒரு சான்றுகளை நாம் பார்ப்போம். 

இதனால் தான் திருமறைக்குர்ஆன் நபிகளாரின் அருமைத் தோழர்கள் பெருந்தன்மையை சிலாகித்துக் இவ்வாறு கூறுகிறது. 

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக் கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர் களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்:59:09)

இப்படியும் பெருந்தன்மையா என்று நானும் நீங்களும் இந்த உலகமும் இன்று வரை கண்டுள்ளதா? என்பதை இந்த செய்தியைப் பாருங்கள்  .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய் விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்.
அறிவிப்பவர்: அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் , ஆதாரம் புகாரி:2486  

பெருந்தன்மைக்கு இஸ்லாத்தை விட எந்த ஒரு மார்க்கத்தையும் காணமுடியாது.  அந்த அளவுக்கு எந்த செயலை எடுத்துக் கொண்டாலும் அதில் பெருந்தன்மைக்கு இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அது ஒரு மனிதனுககு அத்தியவசியமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெருந்தன்மையோடு இஸ்லாம் அவர்களையும் அதில் ஒன்றினைத்து தேவையுடைவர்களுக்கு கொடுத்து அவர்களின் தேவைகளையும் நமது தேவையாக நினைத்து நடந்து கொள்ளும் படி கட்டளையிடுகிறது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமாகும். இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) அவர்கள் , ஆதாரம் புகாரி:5392 

இதனால் தான் இஸ்லாம் அடுத்தவர்களின் துன்பங்களிலும் கஷ்டங்களிலும் உன்னுடைய பங்களிப்பையும் அவர்களுக்கு கொடுத்து அவர்களின் கஷ்டங்களை நீக்க பாடுபட வேண்டும் என்று நமக்கு கட்டளையிடுகிறது. அது மாத்திரமல்லாமல் இப்படி யார் இவர்களின் கஷ்டங்களையும் சிரமங்களையும் போக்குவோருக்கு பல விதமான சிறப்புக்களை திருமறைக் குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் பென் மொழிகளும் நமக்கு கட்டளையிடுகின்றன.

கடன் கொடுத்து அதனை திருப்பி தரமுடியாதவர்களிடம் அதனை அல்லாஹ்வுக்காக அவனின் தருப்பதியை நாடி அந்தக் கடனை தள்ளுபடி செய்து விடுவதும் பெருந்தன்மைதான். 

கடன் பற்றி திருமறைக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. 

அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 2:245)

"அல்லாஹ்வுக்கு அழகிய கடன் வழங்குதல்'' என்றால் அல்லாஹ்வுக்கு கொடுப்பது அல்ல மாற்றமாக தேவையுடைய மனிதர்களுக்கு வழங்குவே இது குறிக்கிறது. அல்லாஹ்வுக்கு கடன் கொடுப்பது என்று கூறி அதனை ஏழை எளியோருக்கும் தேவையுடையோருக்கும் அல்லாஹ் கொடுக்கும் படி கட்டளையிடுகிறான். அழகிய கடன் கொடுத்தால் அது கூட ஒரு வகையில் பெருந்தன்மையாகும். 

இதற்கு சான்றாக நபி (ஸல்) அவர்கள் முன்னோரு காலத்து மனிதரைப் பற்றி கூறிப்பிடும் போது அவர் மனிதர்களுக்கு கடன் கொடுத்து அந்தக் கடனை அந்த மனிதரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லையென்றால். அவரைக் கஷ்டப்படுத்தாமல் அவருக்கு நோவினை செய்யாமல் கெட்ட வார்த்தையால் திட்டாமல் அல்லாஹ்வும் நம் விசயத்தில் பெருந்தன்மையாக நடப்பான் என்றெண்ணி அந்தக் கடனை தள்ளுபடி செய்தார் அதனால் அல்லாஹ்வும் அவருடன் பெருந்தன்மையாக நடந்து கொண்டான். இப்படிப் பட்டவர்களாக நாமும் மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும். கடனாளியிடம்  பெருந்தன்மையாக நடந்தார் அல்லாஹ்வும் அவருடன் பெருந்தன்மையாக நடந்து கொண்டான்.

 (முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தனது (அலுவலரான) வாலிபரிடம், "(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும்'' என்று சொல்-வந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்த போது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) , ஆதாரம் புகாரி:3480

வளரும் இன்ஷா அல்லாஹ்...............

செய்திகள்