29.7.12

அஸ்ஸலாமு அலைகும்
 
சமுதாய குழப்பிகளுக்கு மறுப்பு சொல்லும் குழப்பிகள் (www.kulappigal.tk) என்ற தனியான தளம் ஒன்று நடாத்தப்படுவதால் எமது சேவைகளை இத்துடன் நிறுத்திக் கொள்கின்றோம்.
தொடர்ந்தும் சமுதாய குழப்பிகளுக்கான மறுப்புகளை அறிந்து கொள்ள இங்கு க்லிக் செய்யவும்.

3.5.12

பள்ளிகளைக் குறிவைக்கும் சிங்களக் காவிக் கரசேவர்கள்

அபூ ஹம்னா ஸலபி

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய, தம்புள்ள அல் ஹைராத்; ஜும்ஆப் பள்ளி தகர்ப்புப் பின்னணி குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு. நாட்டின் அரசியல் சாசனம் மத  சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இந்த சுதந்திரம் ஒரு சாரால் மீரப்படும் போது பிரச்சினைகள் எழுவதைத் தடுக்க முடியாத நிலை ஏற்படும்.
இந்த நாட்டின் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்களவர்கள் தமிழ்மக்களின் உரிமைகளைப் பரித்ததால், சுமார் 30 ஆண்டுகள் அதன் ரணத்தை அனைத்து மக்களும் அனுபவிக்க நேரிட்டது. அந்த ரணத்தின் வடுக்கள் மாறமுன்னரே இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம் மக்களின் பள்ளி மீது கை வைத்து மதத்துவேசத்தை சிங்களத் தீவிரவாத தீய சக்திகள் துவங்கியுள்ளன. இது ஆரோக்கியமான அறிகுறியல்ல என்பதை சுட்டிநிற்கிறது.
உலகலாவிய முஸ்லிம் உம்மத்தின் ஓர் அங்கமாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் இலங்கையில் முஸ்லிம்கள் மற்ற இனத்தவர்களுடன் நல்லுரவோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கு பள்ளிவாசல்களை நிர்மாணித்துää தமது வணக்க வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

26.4.12

ஒரு கிறுக்கனின் கிறுக்கல்

அபூ கப்பாப்

எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி என்பவர் பலவேசத்தில் முஜ்தஹிதுகள் பற்றி ஒரு கட்டுரை என்று உளறிக் கொட்டியிருந்தார். பண்பற்ற பலவேசத்தினரும் பகுத்தறிவின்றி அதைப் பதிவேற்றியிருந்தனர். அனைத்து சாக்கடைகளின் களஞ்சியமாகப் பயன்பட்டு வரும் எந்தக் கொள்கையும் இல்லாத பலவேசம்டொட்கொம் எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனியின் இந்த உளரலையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளது.
மூளையற்ற மூர்க்கத்தனம்தான் மார்க்கம் என்று நினைக்கும் உளரல் உளநோயாளிகளுக்கு மறுப்பளிக்க முன்னர் இஜ்திஹாத் பற்றி வாய்திறக்கவாவது இவர்களுக்கு நாதியிருக்கிறதா? என்பதை முதலில் பார்த்துவிட்டு இவர் என்ன உளரியுள்ளார் என்பதை நோக்குவோம்.
“அவ்விரண்டிலும் காணப்படாத அம்சங்களுக்கான தீரர்வை அவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட பெரும்பாண்மை அறிஞர்களின் அங்கீககாரத்தைப் பெற்ற இஜ்மாவின் அடிப்படையிலும், கியாஸ் என்ற அணுமான விளக்கத்தின் அடிப்படையிலும் தமது கவனத்தைத் திருப்பினர். அவ்விரண்டையும் துணை மூலாதாரங்கள் என்று பிற்காலத்தில் அழைத்தனர்.”என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அசத்திய மூலாதாரங்களின் அடி அசைந்து போனது

தவ்ஹீத் கொள்கையை எதிர்ப்போரிடம் தஃவாவை முன்வைக்கும் மிகச் சிறந்த ஊடகமான விவாதக்களம், தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை வரலாற்று மாணவர்கள் நன்கு அறிவர். அந்தவகையில், இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற கருப்பொருளில் 2012 ஏப்ரல் சனி 21 ஞயிறு 22 ஆகிய இரண்டு தினங்களில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்குமிடையில் நடந்த இந்த விவாதமும் இலங்கை தஃவா வரலாற்றில் ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது.

செய்திகள்