11.4.11


இவர் தான் இஸ்லாமிய அறிஞராம் (?) 
ஜமாத்தே இஸ்லாமி சகோதரர்களே சிந்தியுங்கள்.
RASMIN M.I.Sc

அன்பின் சகோதரர்களே ! இஸ்லாமிய உலகின் தலை சிறந்த அறிஞர் என்று ஜமாத்தே இஸ்லாமியைச் சேர்ந்த பிரச்சாரகர்கள் அடிக்கடி மார் தட்டிக் கொள்ளும் ஒருவர் தான் யுசுப் அல் கா்ளாவி என்பவர்.

மார்க்கத்திற்கு விரோதமான பல கருத்துக்களை கூறி மக்களை வழி கெடுத்துவரும் குறிப்பிட்ட பிரச்சாரகரை அறிஞர் அல்லாமா என்றெல்லாம் மக்கள் மத்தியில் கதையளக்கும் ஜ.இஸ்லாமியினர் தங்கள் சிந்தனையை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கüன் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இந்த (60:10-12ஆவது) வசனங்களின் ஆணைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள். 

இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை இறைநம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக்கொண்டாரோ அவரிடம் "உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்'' என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை.

பெண்களிடம், "நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்'' என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிராமணம் வாங்கியதில்லை. (புகாரி - 4891)



மேற்கண்ட நபி மொழி நமக்குச் சொல்வது என்ன? நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் பெண்களிடம் பைஅத் (உறுதிப் பிரமானம்) எடுக்கும் போது கூட நபியின் கை அண்ணியப் பெண்ணின் கையில் கூடப் பட்டதில்லை.

ஆனால் இந்த அறிஞரோ(?) சர்வ சாதாரணமாக இன்னொரு பெண்ணின் கையைப் பிடித்து கைகுழுக்குகிறார்.

இதை நாம் சுட்டிக் காட்டும் போது இவரின் பக்தர்களுக்கு கோபம் தலைக்கு மேல் வருகிறது.

இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் அமீர்(?) என்று அழைக்கப்படுபவர் அந்த அமைப்பின் அதிகாரப்புர்வ இதழின் ஏப்ரல் மாத வெளியீட்டில் யுசுப் அல்கா்ளாவி ஒரு சிறந்த அறிஞர் அவரை மதிக்காமல் பேசுகிறார்கள் என்று தனது உளக் குமுரளை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதான் அறிஞரின் சிறப்போ, இதைச் செய்யத்தான் தாங்களும் அவருக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறீர்களோ?

உங்கள் முகத்திரை தொடர்ந்தும் கிழிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

செய்திகள்