3.5.12

பள்ளிகளைக் குறிவைக்கும் சிங்களக் காவிக் கரசேவர்கள்

அபூ ஹம்னா ஸலபி

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய, தம்புள்ள அல் ஹைராத்; ஜும்ஆப் பள்ளி தகர்ப்புப் பின்னணி குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு. நாட்டின் அரசியல் சாசனம் மத  சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இந்த சுதந்திரம் ஒரு சாரால் மீரப்படும் போது பிரச்சினைகள் எழுவதைத் தடுக்க முடியாத நிலை ஏற்படும்.
இந்த நாட்டின் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்களவர்கள் தமிழ்மக்களின் உரிமைகளைப் பரித்ததால், சுமார் 30 ஆண்டுகள் அதன் ரணத்தை அனைத்து மக்களும் அனுபவிக்க நேரிட்டது. அந்த ரணத்தின் வடுக்கள் மாறமுன்னரே இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம் மக்களின் பள்ளி மீது கை வைத்து மதத்துவேசத்தை சிங்களத் தீவிரவாத தீய சக்திகள் துவங்கியுள்ளன. இது ஆரோக்கியமான அறிகுறியல்ல என்பதை சுட்டிநிற்கிறது.
உலகலாவிய முஸ்லிம் உம்மத்தின் ஓர் அங்கமாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் இலங்கையில் முஸ்லிம்கள் மற்ற இனத்தவர்களுடன் நல்லுரவோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கு பள்ளிவாசல்களை நிர்மாணித்துää தமது வணக்க வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள்