29.7.12

அஸ்ஸலாமு அலைகும்
 
சமுதாய குழப்பிகளுக்கு மறுப்பு சொல்லும் குழப்பிகள் (www.kulappigal.tk) என்ற தனியான தளம் ஒன்று நடாத்தப்படுவதால் எமது சேவைகளை இத்துடன் நிறுத்திக் கொள்கின்றோம்.
தொடர்ந்தும் சமுதாய குழப்பிகளுக்கான மறுப்புகளை அறிந்து கொள்ள இங்கு க்லிக் செய்யவும்.

3.5.12

பள்ளிகளைக் குறிவைக்கும் சிங்களக் காவிக் கரசேவர்கள்

அபூ ஹம்னா ஸலபி

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய, தம்புள்ள அல் ஹைராத்; ஜும்ஆப் பள்ளி தகர்ப்புப் பின்னணி குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு. நாட்டின் அரசியல் சாசனம் மத  சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இந்த சுதந்திரம் ஒரு சாரால் மீரப்படும் போது பிரச்சினைகள் எழுவதைத் தடுக்க முடியாத நிலை ஏற்படும்.
இந்த நாட்டின் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்களவர்கள் தமிழ்மக்களின் உரிமைகளைப் பரித்ததால், சுமார் 30 ஆண்டுகள் அதன் ரணத்தை அனைத்து மக்களும் அனுபவிக்க நேரிட்டது. அந்த ரணத்தின் வடுக்கள் மாறமுன்னரே இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம் மக்களின் பள்ளி மீது கை வைத்து மதத்துவேசத்தை சிங்களத் தீவிரவாத தீய சக்திகள் துவங்கியுள்ளன. இது ஆரோக்கியமான அறிகுறியல்ல என்பதை சுட்டிநிற்கிறது.
உலகலாவிய முஸ்லிம் உம்மத்தின் ஓர் அங்கமாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் இலங்கையில் முஸ்லிம்கள் மற்ற இனத்தவர்களுடன் நல்லுரவோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கு பள்ளிவாசல்களை நிர்மாணித்துää தமது வணக்க வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

26.4.12

ஒரு கிறுக்கனின் கிறுக்கல்

அபூ கப்பாப்

எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி என்பவர் பலவேசத்தில் முஜ்தஹிதுகள் பற்றி ஒரு கட்டுரை என்று உளறிக் கொட்டியிருந்தார். பண்பற்ற பலவேசத்தினரும் பகுத்தறிவின்றி அதைப் பதிவேற்றியிருந்தனர். அனைத்து சாக்கடைகளின் களஞ்சியமாகப் பயன்பட்டு வரும் எந்தக் கொள்கையும் இல்லாத பலவேசம்டொட்கொம் எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனியின் இந்த உளரலையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளது.
மூளையற்ற மூர்க்கத்தனம்தான் மார்க்கம் என்று நினைக்கும் உளரல் உளநோயாளிகளுக்கு மறுப்பளிக்க முன்னர் இஜ்திஹாத் பற்றி வாய்திறக்கவாவது இவர்களுக்கு நாதியிருக்கிறதா? என்பதை முதலில் பார்த்துவிட்டு இவர் என்ன உளரியுள்ளார் என்பதை நோக்குவோம்.
“அவ்விரண்டிலும் காணப்படாத அம்சங்களுக்கான தீரர்வை அவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட பெரும்பாண்மை அறிஞர்களின் அங்கீககாரத்தைப் பெற்ற இஜ்மாவின் அடிப்படையிலும், கியாஸ் என்ற அணுமான விளக்கத்தின் அடிப்படையிலும் தமது கவனத்தைத் திருப்பினர். அவ்விரண்டையும் துணை மூலாதாரங்கள் என்று பிற்காலத்தில் அழைத்தனர்.”என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அசத்திய மூலாதாரங்களின் அடி அசைந்து போனது

தவ்ஹீத் கொள்கையை எதிர்ப்போரிடம் தஃவாவை முன்வைக்கும் மிகச் சிறந்த ஊடகமான விவாதக்களம், தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை வரலாற்று மாணவர்கள் நன்கு அறிவர். அந்தவகையில், இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற கருப்பொருளில் 2012 ஏப்ரல் சனி 21 ஞயிறு 22 ஆகிய இரண்டு தினங்களில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்குமிடையில் நடந்த இந்த விவாதமும் இலங்கை தஃவா வரலாற்றில் ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது.

தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பை கண்டித்து SLTJயின் மாபெரும் கண்டன ஆர்ப்பாரட்டம்


தம்புள்ள அல் ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் இடிப்பை கண்டித்து நாடு தழுவிய ஓர் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.


கோரிக்கைகள்

  • தம்புள்ள அல் ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

  • எக்காரணம் கொண்டும் பள்ளிவாசல் இடம் மாற்றம் செய்யப்படக் கூடாது.

காலம்:

27.04.2012 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் (2.00 மணி முதல் 4.00மணி வரை)

இடம்:

மாலிகாவத்தையில் அமைந்துள்ள SLTJ தலைமையகத்திற்கு முன்னிருந்து கொழும்பு கோட்டை வரை பேரணி தொடரும்.

அல்லாஹ்வின் ஆலயத்தை மீட்க (ஆண்கள் பெண்கள் உட்பட)அனைத்து முஸ்லிம்களையும் அணிதிரளுமாறு அழைக்கிறது

குறிப்பு:

இப்போராட்டம் அத்து மீறி செயல்பட்ட கடும்போக்கு சிங்களவர்களுக்கு எதிராகவே நடத்தப்படுகிறது. அனைத்து சிங்களவர்களுக்கும் எதிராக அல்ல. மற்றும் இப்போராட்டம் மிகவும் அமைதியான முறையயில் நடத்தப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)

தொடர்புக்கு: 0112677974, 0774781471, 0774781473,

19.4.12

ஹெம்மாதகமை விவாதம் நேரடி ஒளிபரப்பு

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் என்ன?

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் திருக்குர்ஆனும் நபிவழியும் மட்டுமா? அல்லது இத்துடன் இஜ்மா கியாசும் சேர்த்து நான்கு மூலாதாரங்களா?
இந்தத் தலைப்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் தப்லீக் சார்பு உலமாக்களுக்கும் மத்தியில் நேரடி விவாதம் நடக்க உள்ளது. இன்ஷா அல்லாஹ்
நாள் : 21-4-2012, 22-4-2012 சனி ஞாயிறு இரண்டு நாட்கள்
நேரம் : காலை 9 முதல் இரவு 9 மணிவரை
இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விவாதம் onlinepj.com, sltjweb.com ஆகிய இணையத் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்

இலங்கை முஸ்லிம்கள் கொல்லப்பட அவர்களின் துரோகம் காரணமா ?

இலங்கை முஸ்லிம்கள்,  கூடவே இருந்து தமிழர்களுக்கு துரோகம் செய்ததினால்தான் பிரபாகரன் அவர்களைக் கொன்றான். இலங்கை முஸ்லிம்கள் தமிழ் ஈழம் அமையக் கூடாது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார்கள்.

ஸ்ரீலங்கன் ஹோம் கார்ட் (srilankan home guard)  என்ற ஒன்றில் சேர்ந்தார்கள் (தமிழர்களுக்கு எதிராக...)
அதனால் தான் பிராபகரன் அவர்களைக் கொன்றான்; முஸ்லிம் விரோதப் போக்கு என்பதற்காக அல்லஎன்று எனது மாற்று மத நண்பர் கூறுகிறார். விளக்கம் தேவை. 
பி.ஏ.ஜாஹிர் அஹமது 
பதில்
மேற்கண்டவாறு சொல்லப்படும் செய்தி முஸ்லிம்களையும் நடுநிலையாளர்களையும் ஏமாற்றுவதற்காக புலி பயங்ரவாத அமைப்பினர் அவிழ்த்து விடும் பொய் மூட்டைகளில் ஒன்றாகும். 
இவர்கள் கூறுவது போல் தனி ஈழம் தேவை இல்லை என்று முஸ்லிம்கள் சொன்னதால் ஒரு சமுதாயத்தைக் கொன்று குவிக்கலாம் என்றால் அதே நியாயம் மற்றவர்களுக்கும் இருக்க வேண்டுமல்லவா?

இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை பீஜே பிரித்தாரா?

எம்.எம்.முர்ஷித்
 www.onlinepj.com வில் வெளியிடப்பட்ட இக்கட்டுரையை இங்கு மீள் இடுகையிடுகின்றோம்.
‘இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஒன்றாக இருந்தது. அதை பீஜே வந்து பிரித்து விட்டார் என்று இஸ்மாயீல் ஸலஃபி எழுதி இருந்தார். இலங்கை தவ்ஹீத் இயக்கங்கள் பற்றிய முழு விபரம் என்னிடம் இல்லாததால் நான் அதற்கு பதில் எழுதவில்லை. நான் இலங்கை செல்வதற்கு முன் அவர்கள் எத்தனை பிரிவுகளாக இருந்தனர் என்பதை இலங்கை முர்ஷித் அவர்கள் எழுதி அனுப்பியுள்ளார். அதை நன்றியுடன் இங்கே வெளியிடுகிறோம்.’
கொழும்புத் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கிய அமைப்பு 2005ல் பீஜேவுடைய இலங்கை வருகையோடு, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த உண்மைகைள் தெரியாத சிலர், அல்லது தெரிந்து கொண்டே பீஜே மீது சேறு பூச நினைப்பவர்கள், வரலாற்றை இருட்டடிப்புச் செய்து எழுதியும் பேசியும் வருகின்றனர். எனவே, இலங்கையில் தவ்ஹீத் சகோதரர்களுக்கு மத்தியில் பிரிவினைக்கு யார் காரணம் என்பதை வரலாற்று நிகழ்வுகளோடு இக்கட்டுரையில் தெளிவுபடுத்துகின்றோம்.

தப்லீக் ஜமாஅத்துடன் ஒரு விவாதம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் ஹெம்மாதகமை இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்க(தப்லீக் ஜமாஅத்)த்திற்கும் இடையிலான 
பகிரங்க விவாதம்.
விவாத நாள்:  
ஏப்ரல் 21,22 (சனி, ஞாயிறு)
விவாத தலைப்பு:
“இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் எவை?”

பொலணறுவையில் புதிய அவ்லியா ஹான் ஷாஹிபு வலியுல்லாஹ் நாயகம்

மரணித்தவர்களை வணங்கும் போலி முஸ்லிம்கள்
"பொலணறுவை, வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவசேனபுர, கட்டுவம்பில எனும் பகுதியில் இருந்து சுமார் 06km தூரத்தில் வனாந்தர பகுதியில் பல தசாப்தங்களுக்கு முன் அடங்கப்பட்ட ஹான் ஷாஹிபு வலியுல்லாஹ் நாயகம் என்ற புதிய அவ்லியாவின் கப்று உள்ளது. அதில் சென்ற வெள்ளிக்கிழமை (23.03.2012)அன்று கொடியேற்ற விழா நடைபெற்றது".
கப்ரை வணங்கும் ஒருவரை படத்தில் காணலாம்

இது பேஸ்புக்கிலிருந்து பெறப்பட்ட தகவல்

அன்பு வாசகர்களே!
ஆதாரமில்லாமல் மகான்கள் என்று நம்பப்படும் மையித்துகளிடம் பிரார்த்தணை செய்யக் கூடாது அவர்களுக்கு ஸஜ்தா செய்யக் கூடாது என்று ஆதாரங்களின் அடிப்படையில் நாம் கூறி வருகிறோம். அல்லாஹ்வின் அருளால் மக்கள் இன்று விழிப்படைந்து விட்டனர். மக்கள் தெளிவாக இருந்தாலும் மார்க்க அறிஞர்கள் போர்வையில் நடமாடுவோர் மூடத்தனமான வாதங்களை எடுத்து வைத்து செத்தவர்களைக் கடவுளாக்க முயற்சித்து வருகின்றனர். அது போன்ற ஒரு முயற்சியே இதுவும்.

11.3.12

மனாருத் தஃவா இணையத்தள குழுவுக்கு பகிரங்க விவாத அறைகூவல்

தவ்ஹீதின் பெயரால் இணைவைப்பின் பால் மக்களை அழைக்கும் இஸ்மாயில் ஸலஃபி உள்ளிட்ட சலஃபுக் கொள்கையுடையோரின் ஆக்கங்களையும் உரைகளையும் வெளியிட்டு லாபம் கானும் மனாருத் தஃவா இணையத்தள ஆசியர் மற்றும் பொருப்புதாரிகளே!
நீங்கள் வெளியிடும் இது போன்ற ஆக்கங்கள் அனைத்துமே முஸ்லிம்களை இணைவைப்பின் பாலே இட்டுச் செல்கின்றது.
லாபம் கிடைத்தால் சிர்க்ககையும் போதிக்கத் தயாராக உள்ளவர்களே! 
#சூனியம் உள்ளிட்ட குர்ஆனுக்கு முறன்படும் ஹதீஸ்கள் குறித்தும் 
#உங்கள் கட்டுரையாசிரியர்களான இஸ்மாயில் ஸலஃபி உள்ளிட்ட சலஃபுக் கொள்கையுடையோர் இணைவைப்பில் தான் இருக்கிறார்கள் 
என்பது குறித்தும் பகிரங்க விவாதத்திற்கு தாங்கள் தயாரா?
மறுக்கும் படசத்தில் உங்கள் ஒவ்வொரு ஆக்கத்தும் மறுப்பளிக்கு துண்டுப்பிரசுரங்கள் காலி, வெலிகமை உள்ளிட்ட சலபிகள் வாழும் எல்லா பிரதேசங்களிலும் வெளியடப் படும் என்பதையும் இத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
அன்புடன் மறுப்புகள் இணையத் தளம்

1.3.12

இஸ்மாயில் ஸலபியின் இரட்டை வேடம்

அறிஞர் பீஜே அவர்கள் அல்ஜன்னத் ஆசிரியராக இருக்கும் போது பன்றி பற்றியும் அதன் இறைச்சி பற்றியும் அல்குர்ஆன் ஹதீஸ் கூறும் சரியான கருத்து எது என்பதை ஆய்வு செய்து எழுதியிருந்தார்கள்.
அல்குர்ஆன் பன்றி என்று குறிப்பிடாமல் பன்றி இறைச்சி என்று குறிப்பிட்டுள்ளது.எனினும் ஹதீஸ் பன்றியை விற்கக் கூடாது என்கிறது. விற்கக் கூடாததை சாப்பிடவும் கூடாது என்று தெளிவாக விளக்கியிருந்தார்கள்.
அந்த ஆய்வை முழுமையாகப் படிக்காத சிலர் பன்றியை சாப்பிடலாம் என்று கூறியதாகவும் சூப்புப் போட்டுக் குடித்ததாகவும் அவதூறு பரப்பினர். அப்போது இஸமாயில் ஸலபி என்பவர் இதுபற்றி பீஜேவிற்கு அறிவித்து விளக்க மடல் பெற்று உண்மை உதயத்தில் பிரசுரித்தார். தற்போது இவர் வழிகெட்ட பின்னர் அந்த குராபிகளைவிடத் தரம் தாழ்ந்து எழுதினார்.
எனவே, இவரது இரட்டை வேடத்தை அடையாளப்படுத்துவதற்காக இதை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.


15.2.12

அல்தாபியின் உரையும் ஆடிப் போன அன்ஸார் தப்லீக்கியும்

ஆக்கம்: எம்.எம்.முன்திர்
 


அண்மையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் அறிஞர் அல்தாபி அவர்கள் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பில் இலங்கைக்கு வருகை தந்து,யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் மாற்றாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.
இந்த நிகழ்ச்சி இலங்கை தஃவா வரலாற்றில் ஒரு புதிய தஃவாப் பரிமாணத்திற்கான அத்திபாரமாக அமைந்தது. ஏனெனில் இத்தனை ஆண்டுகளில் தஃவா நிறுவனங்கள் அதன் பின்னே அலைமோதிய தாயிகள் எல்லாம் அறைக்குள் மட்டும்தான் ஆடிக் கொண்டிருந்தார்கள்.தனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு உப்புச் சப்பற்ற பயான்களை செய்துவிட்டு ஏதோ யுகப் புரட்சி செய்தவர்களைப் போல் ‘தக்ரீர்’ எழுதி தாகம் தனித்துக் கொண்டிருந்தார்கள்.
அதில் அக்கரைப்பற்று எனும் அக்கரைக்குள் மிகச் சிறு தக்லீத் கூட்டத்துடன் தான் மட்டுமே தனிக்காட்டு ராஜா என தப்பாக எண்ணி கறையான் புற்றுக்;குள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த  அன்ஸார் தப்லீக்கி முக்கியமானவர்.
புத்துணசர்ச்சியுடனும், புத்துயிர்ப்புடனும் நாடளாவிய ரீதியில் கிளை பரப்பி வரும் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து உரையாற்றிய அல்தாபி அவர்கள், முஸ்லிம்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்கள்.
அந்த வகையில் காத்தான்குடியில் எமது கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சூனியம் தொடர்பாக ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் அன்ஸார் தப்லீக்கியையும் அவர் முகல்லிதுகளையும் அடி அசையவைத்துள்ளது.
ஷபாபிலும் ஐஐஆர்ஓவிலும் மாறி மாறி தாகம் தனித்து வந்த இவர் தற்போது தனித்து நின்று தக்லீத் வளர்த்துக் கொண்டு, தன்னிலை அறியாமலேயே தட்டுத்தடமாறுகிறார். இவரது கிழக்கு மாகாண அக்கரை அன்ஸார் மத்ஹபுக் கனவுக் கோட்டை எமது தனித்தவ தஃவா நகர்வால் தகர்ந்து சுக்கு நூறாகி வருவது ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டுள்ளது.
அதனால், தவ்ஹீத் ஜமாஅத்தையும் அதன் பிரமுகர்களையும் தரக்குறைவாக விமர்சினம் செய்து வருகின்றார். நபி (ஸல்) அவர்களை மனநோயாளி எனக் கேவலப்படுத்தும் கட்டுக்கதைகளை நம்பும் இவர் அவற்றை மறுத்து மாற்று விளக்கம் சொல்லி நபியின் நாகரிகம், கண்ணியம் காக்கும் எம்மை நரித்தன நாடகம் ஆடி விமர்சித்து நழுவல் போக்கோடு நடமாடி வருகின்றார்.
இவரைவிடக் குறைந்த தரத்தில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள்.ஏனெனில் உமர் அலி விவாதிக்க வந்தார். நிமிடத்திற்குள் நூறு தடவை நிலை மாறும் அர்ஹம் மவ்லவி விவாதிக்க ஒப்பமிட்டுள்ளார். ஏன் ஜெபமணி, காதியானிகள், ஜெரி தோமஸ் போன்றோர் விவாதிக்க வந்தனர்.
தன்னைத் தக்லீத் பண்ணுவோருக்கு மத்தியில் மாவீரணாய் வேசம் காட்டும் இவர் தவ்ஹீத் ஜமாஅத் தாயிகளைக் கண்டு வெருண்டு ஓடுவது ஏன்? அவர்களின் விவாத அழைப்புக்கு அஞ்சுவது ஏன்?!
மாற்று மதத்தினரிடம் இருக்கும் மதப் பிடிப்பின் அளவு கூட இவருக்கும் இவர் மத்ஹபு முகல்லிதுகளுக்கும் இவர்களின் கொள்கையில் உறுதி இல்லை போல் தோன்றுகிறது.
இவர் வாதப்படி நாம் இருப்பது தவறான கொள்கை என்றால் அதைத் துணிவாக எமக்கு முன்னால் நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து விடை சொல்லி விவாதிக்க வரவேண்டும்.அதை விட்டுவிட்டு எதிர்க்கேள்வி கேட்கத் தெரியாத அப்பாவி அபலைகளுக்கு முன்னால் நீங்கள் எவ்வளவுதான் ஹீரோ (ர்நசழ) வேசம் போட்டாலும் நீங்கள் (0) ஸீரோதான்.
இவர் போன்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் இன்னும் சிலர் பதுங்கியிருந்து படம் எடுக்கப் பார்க்கின்றனர். அவர்களின் படத்தையும் படடவர்த்தனமாய் சமூகத்திற்குப் புட்டுபுட்டு வைப்போம். இன்னும் சிலர் மதம் பிடித்து மதியிழந்து கொண்டிருக்கின்றனர். அவர்களையும் அடுத்தடுத்து விரல் நீட்டி விமர்சித்து விரைவில் சமூகத்திற்கு அடையாளப்படுத்தவோம்.

2.2.12

தப்லீக் இயக்கத்தினர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டமை சரியானதே!


கடந்த சில நாட்களுக்கு முன் தப்லீக் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இலங்கையை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டார்கள். இது தொடர்பாக லங்கா நவ் என்ற இணையதளம் “தப்லீக் இயக்கத்தினர் வெளியேற்றப்பட்டமை சரியானதே!” என்ற தலைப்பில் தனது ஆசிரியர் தலையங்கத்தை அமைத்துள்ளது.  அந்த ஆக்கத்தை எவ்வித மாற்றமும் இன்றி நாமும் இங்கு வெளியிடுகிறோம்.

இலங்கை நாட்டின் சிறுபான்மை சமுதாயத்தில் இஸ்லாமியர்கள் முக்கியமானவர்கள். இவர்களில் தப்லீக், தவ்ஹீத், தரீக்கா, ஜமாத்தே இஸ்லாமி என்று பல பிரிவினர் இயக்க ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் ஜமாத்தே இஸ்லாமி, தரீக்கா, தப்லீக் போன்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் அமீர் என்றொருவரை ஏற்படுத்திக் கொண்டு அவர் சொல்படி கேட்டு நடப்பவர்களாக இருக்கிறார்கள்.


தவ்ஹீத் என்ற அமைப்பனரோ முஹம்மது நபிதான் எங்கள் தலைவர் அவர் பேச்சைத் தான் நாங்கள் கேட்போம் அதற்குப் பின்புதான் மற்றவர்களின் பேச்சுக்களுக்கெல்லாம் முன்னுரிமை தருவோம் என்று வாதிடுகிறார்கள்.

எது எப்படியோ இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபலமாக பேசப்படும் இரண்டு இயக்கத்தவர்களில் தப்லீக் மற்றும் தவ்ஹீத் ஆகிய இயக்கத்தவர்கள் முக்கியமானவர்கள்.

நாட்டின் இறையான்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

20.1.12

சித்தீக் மதனியின் சின்னத் தனங்கள்


ல்ஜன்னத்தில் எழுதப்பட்ட ஒரு செய்தி குறித்து இலங்கை ஜம்இய்யத்து அன்ஸாரிஸ் ஸுன்னத்தில் முஹம்மதிய்யாவிலிருந்து வந்த ஒரு கடிதத்தையும் அது பற்றிய நமது விளக்கத்தையும் கீழே தந்துள்ளோம்.

அஸ்ஸலாமு அலைக்கும். தஃவாப் பணியில் ஈடுபடுகின்ற தாங்கள் உடல், உள, ஆன்ம நலம் பெற்று வாழப் பிரார்த்தனைகள். தங்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகின்ற அல்ஜன்னத் இதழ் தமிழ்பேசும் முஸ்லிம்களில் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் அடிப்படையில் வாழவேண்டுமென்ற ஆர்வமுள்ளவர்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இருந்தும் சில விடயங்களில் உங்களது எழுத்தோட்டங்கள் சத்தியத்தை நேசிக்கின்றவர்களது மனதைப் புண்படுத்தும்படி அமைந்து விடுகின்றது. இவை கட்டாயம் தவிர்ந்து கொள்ளப்படல் வேண்டும் என்பதை சகோதர வாஞ்சையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
'1996
ஜுன், ஜுலை அல்ஜன்னத் இதழில் கேள்வி பதில் பிரிவில் 36ம் பக்கத்தில் முஹம்மது அலி சீனி, புகைரா, மு.ளு.யு. கேட்ட கேள்விக்கு அளித்திருக்கிற பதிலைக் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறோம்.'
குறிப்பிட்ட விடயம் ஆதாரமற்ற கட்டுக்கதை எனக் குறிப்பி;ட்டுள்ளீர்கள். அத்தோடு மதீனா  இஸ்லாமியப் பல்கலைக்கழகம், சவூதியிலுள்ள பல்கலைக்கழகங்கள் என்பவற்றைத் தரக்குறைவாக விமர்சித்துள்ளீர்கள். இது அந்தக் கேள்விக்குரிய பதிலில் வர வேண்டியதுமில்லை. அத்துடன் மவ்லவி முஹம்மத் தவ்பீக் உரையாற்றிய விடயம் - கேள்வி கேட்டவர் எழுதிய விதத்தில் அல்லாத கொஞ்சம் வித்தியாசமாக ஸஹீஹுல் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. விடயத்தைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
எந்த விடயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் நிதானமாகச் சிந்தித்து எழுதுவது அல்ஜன்னத்தின் வளர்ச்சிக்கும் இஸ்லமிய தஃவாவின் வெற்றிக்கும் பேருதவியாக அமையும் என்பதைக் கூறிக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
அபூபக்கர் சித்தீக் மதனீ,
அமீர்.
இதுதான் அந்த மடல். இந்த மடலுடன் ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றதாகக் கடிதத்தில் கூறப்படும் ஹதீஸின் ஜெராக்ஸ் (Phழவழ ஊழில) ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
தாங்கள் இரண்டு விடயங்களை உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்! நல்ல எண்ணத்தில் தாங்கள் சுட்டடிக்காட்டிய விடயங்களுக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதலாவது விடயம் : மதீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களைத் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது.
மிகப் பெரிய இமாம்கள், பெரியார்கள், தவறான கருத்தைக் கூறியதாகத் தெரிய வரும்போது, தாட்சண்யமின்றி கடந்த பத்து வருடங்களில் விமர்சித்துள்ளோம். அத்தகைய விமர்சனங்களை ஏகத்துவவாதிகள் அனைவரும் மறுப்பின்றி அங்கீகரித்துக் கொண்டோம். மதீனாப் பல்கலைக்கழகம் குறித்து சில தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது மட்டும், அதற்காக வேதனைப்படுவதை நாம் சரி என ஏற்க முடியாது.
மதீனாவில் உள்ள பல்கலைக்கழகம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையல்ல. நமக்கு நெருக்கமானவர்கள் என்பதற்காகத் தவறுகளைச் சுட்டிக்காட்டாமலும் இருக்க முடியாது.
இது, இன்று நேற்று எடுக்கப்பட்ட முடிவன்று. ஆரம்பம் முதலே அல்ஜன்னத்தின் நிலைப்பாடு இதுதான். 'தவறுகள் எவரிடமிருந்து வந்தாலும் அந்தத் தவறுகளை மட்டும் தாட்சண்யமின்றி விமர்சிப்போம். தவறிய மனிதார்களைத் தரக்குறைவாக விமர்சிக்கமாட்டோம்' எனபதை சபதம் ஏற்போம் என்ற தலைப்பில் அடிக்கடி வெளியிட்டு வருவதையும் தாங்கள் அறிவீர்கள்.
தராவிஹ் 20 ரக்ஆத்கள் என்று மதீனாவிலிருந்து பத்வா வந்தது உண்மை. மத்ஹபுகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக பத்வா கொடுத்ததும் உண்மை. நீங்களும் நாமும் பிரசாரம் செய்து வரும் கொள்கைக்கு இவை எதிரானவை என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
நீங்களும் அங்கே த.வாப் பணியில் ஈடுபட்டுள்ள மதனிகளும் அங்கே படித்த காலத்தில் மத்ஹபுகள் கூடாது என்றே உங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தது. எட்டு ரக்ஆத்கள் என்பதை அங்கிருந்துதான் தெளிவாகக் கற்று வந்தீர்கள். அந்த நிலை இன்று மாறிவிட்டது. வந்த வழியே திரும்பிச் செல்கிறது என்ற உண்மையைத்தான் நாம் எழுதினோம்.
இது போன்ற விமர்சனம் தரக்குறைவானது என்றால், மத்ஹபு வாதிகள், தர்காதிகள், தரீக்காவாதிகள் ஆகியோரின் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுவது எவ்வகையில் நியாயம்? நமக்கு வேண்டப்பட்டவர்களின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல் வேண்டப்படாதவர்களின் தவறுகளை மட்டும் விமர்சிப்பதில் நமக்கு உடன்பாடில்லை.
அந்தக் கேள்விக்குரிய பதிலில் அது வரவேண்டியதில்லை எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். கேள்வி கேட்டவர் ஓர் ஆலிம் இப்படிக் கூறுகிறார் என்று குறிப்பிட்டால், மதீனாப் பல்கலைக்கழகத்தைப் பற்றி நாம் குறிப்பிட்டிருக்க மாட்டோம். மதீனாவில் படித்த ஆலிம் என்று கேள்வி கேட்டவர் குறிப்பிட்டுள்ளார். மதீனாவில் படித்தவர் கூறுவதால் அது சரியாகத்தான் இருக்க முடியும் என்ற கருத்தை இது தருகிறது. ஆதை அகற்றுவது அந்த இடத்தில் அவசியமாகின்றது. அதனால்தான் மதீனா பல்கலைக்கழகத்தைப் பற்றி நாம் குறிப்பட வேண்டியதாயிற்று.
மதீனாப் பல்கலைக்கழகத்தில் படித்து, குர்ஆன் - ஹதீஸை நிலை நாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு, தியாகம் செய்பவர்களைக் குறித்து அந்த விமர்சனம் செய்யப்படவில்லை. அங்கே இன்று தரம் குறைந்து விட்டது என்றுதான் விமர்சனம் செய்யப்பட்டது. அதற்காக யாரும் புண்படவேண்டியததுமில்லை, புண்படவும் கூடாது.
இரண்டாவதாக நீங்கள் சுட்டிக்காட்டுவது பதிலில் கூறப்பட்ட விடயம் குறித்ததாகும்.
ஜின்கள் இருப்பதிலோ, அவை பல்வேறு வடிவங்களில் வீடுகளில் வரும் என்பதிலோ நமக்கு இரண்டாவது கருத்தில்லை. அதை நாம் என்றுமே மறுத்ததில்லை. ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்கள் இதுபற்றிக் கூறுவதால் யாரும் மறுக்க முடியாது.
ஜின் ஒன்று, ஒரு பெண்ணை விபச்சாரத்திற்கு வற்புறுத்தியதாகவும், அதனிடமிருந்து தப்பித்து அந்தப் பெண் நிர்வாணமாக ஓடி வந்ததாகவும், அந்த மவ்லவி பேசியதாகக் கேள்வியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், எந்த இடத்தில் அந்த ஜின்னை நபித்தோழர் கொன்றாரோ, அதே இடத்தில் மரணம் வரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அந்த மவ்லவி பேசியதாகக் கேள்வியில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றித்தான் கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.
நீங்கள் அனுப்பிய ஜெராக்ஸில் (Phழவழ ஊழில)  இந்த விபரம் அறவே இல்லை.
பாம்பு வடிவில் ஜின் வீட்டில் வந்ததும், பயந்து கொண்டு, அந்தப் பெண் வெளியே வந்ததாகவும், கணவர் உள்ளே சென்று பாம்பைக் கொல்வதற்காக ஈட்டியால் குத்தினார். அது அவரைத் தாக்கியது, இருவரும் இறந்து விட்டனர் என்றுதான் அந்த ஹதீஸ் கூறுகிறது.
'
அந்த மவ்லவி உரையாற்றிய விதத்திலல்லாது கொஞ்சம் வித்தியாசமாக ஹதீஸில் உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது கொஞ்சம் வித்தியாசமாகும் என்று யாரும் கருதமாட்டார்கள்.
ஜின் ஒன்று பாம்பு வடிவில் வந்தது என்பதற்கும், மனித வடிவில் வந்து பெண்ணை நிர்வானப்படுத்திப் பலவந்தம் செய்தது என்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் உள்ளது.
பாம்பை அவர் கொன்று, அவர் உயிருடன் இருந்ததாகக் கூறுவதும், அவர் இறந்துவிட்டார் என்று கூறுவதும் வித்தியாசம் அல்ல நேர் முரணானது.
'
எந்த இடத்தில் பாம்பைக் கொன்றாயோ, அதே இடத்தில் உனக்கு மரணம் வரும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறுவது கொஞ்சம் வித்தியாசம் அல்ல. நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்யாகும்.
இந்த விடயங்களைக் குறித்துத்தான் இட்டுக்கட்டப்பட்ட கற்பனை என நாம் விமர்சனம் செய்தோம். ஹதீஸில் உள்ளதைத்தான் பேசவேண்டுமே தவிர, அதில் இல்லாததை - கை, கால் வைத்துப் பேசக் கூடாது. அவ்வாறு பேசுவோர் யாராக இருந்தாலும் நாம் விமர்சனம் செய்துதான் ஆகவேண்டும்.இதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம். (அல்ஜன்னத் - ஆகஸ்ட் 1996)

இதை வாசிக்கும் போதே நீங்கள் ஓர் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள். இவர்கள் எந்தளவு ஆய்வறிவு இல்லாமல்,மேலோட்டமாக நுணிப்புல் மேய்ந்துள்ளார்கள்? இந்த,இவர்களின் அறியாமைக்கு பீ.ஜே. தக்க விளக்க பதில் அளித்தவுடன், அவரை தரக்குறைவாக விமர்சிக்க ஆரம்பித்தனர். அல் -ஜன்னத் வாங்குவதையும் உடன் நிறுத்தினர்.



6.1.12

சாக்கடைகளெல்லாம் சட்டப் பாரம்பரியமாகுமா?

மீள்பார்வை முரப்பியன் மூத்திர பை(வை)த்தியம்

இஸ்லாத்தின் அடிப்படைகளான அல்குர்ஆனையும் ஹதீஸையும் மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும். இவை, இரண்டிற்கும் மாற்றமான எந்த இயக்கத்தையோ, குழுவையோ, தனி நபரையோ பின்பற்றக்கூடாது. ஏனெனில், தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும், எதை விட்டும் உங்களை தடுக்கின்றாரோ அதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்.(59:07) என அல்லாஹ் கூறுகின்றான்.
  நபி (த )அவர்கள் இஸ்லாத்தை மிகத் தூய்மையான வடிவில் போதித்துள்ளார்கள். உலக முஸ்லிம்கள் அனைவரும் நபி வழிமுறைப்படியே வாழவேண்டும். ஒரு முஸ்லிம் நபி வழியைப் புறக்கணித்து விட்டு, ஏதாவது ஒரு மத்ஹபைப் பின்பற்றினால், அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான். ஏனென்றால், மத்ஹபுகளில் காணப்படும் சட்டங்களில் பெரும்பாலானவை நேரடியாகவே அல்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் முரண்படுகின்றன. இந்த முரண்பாடுகளை அறியாத சிலர், ஏதாவது ஒரு மதஹபைப் பின்பற்ற வேண்டும். நேரடியாக அல்குர்ஆனையும், ஹதீஸையும் விளங்க முடியாது. மத்ஹபு இமாம்களின் விளக்கத்திலிருந்துதான் பின்பற்ற வேண்டும் என்ற தவறான பிரசாரத்தைத் துவக்கியுள்ளனா;. மத்ஹபு பக்தர்களும் கி(இ)லாபத் இயக்க கனவுலகக் கற்பனைவாதிகளும் தற்போது, மூடத்தனத்திற்கான அழைப்பை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.

2.1.12

பிற மேடைகளில் பிரச்சாரம் - தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு - பகுதி02

ஆர். ரஹ்மத்துல்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர்கள் பிற அமைப்பினரோடு இணைந்து பிரச்சாரம் செய்யும் போது நமது பேச்சாளர்களுக்கு ஏற்படும் அவலங்களைப் பற்றிக் கடந்த இதழில் அறிந்தோம்.
அதே போல், பல்வேறு கொள்கையுடையோர் ஒன்றிணைந்து செய்யும் பிரச்சாரத்தைக் கேட்கும் மக்களுக்கு ஏற்படும் அவலங்களைப் பார்ப்போம்.
கொள்கைக் குழப்பம்
அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் வணங்கக்கூடாது என்ற ஏகத்துவக் கொள்கையை ஏற்ற மக்கள், தான் மட்டும் ஏற்றுக் கொண்டதோடு நிறுத்தி விடாமல் பிற மக்களுக்கும் இந்தக் கொள்கை சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சத்தியப் பிரச்சாரம் எந்தப் பகுதியில் நடந்தாலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வண்ணம் அங்கு சென்று சங்கமமாகி விடுவார்கள்.

1.1.12

இவர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

JASM திருச்சபையின் திருகுதாளங்கள்

அண்மையில் மஹகொடையில் உள்ள பள்ளிவாசல் தரீக்காவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டதோடு, கப்ர் வணங்கும் கயவர்களால் இரண்டு ஏகத்துவ வாதிகள் கொடூரமாகக் கொலையும் செய்யப்பட்டனர். இவ்வளவு பெரிய கொடூரம் நடைபெற்றதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் என்ற நிதி நிறுவனம், தாம் கட்டிய பள்ளி எரிக்கப்பட்ட நிலையில் பித்அத் வாதிகளுக்குக் கட்டிக்கொடுத்த பள்ளிகளில் அல்குர்ஆன் ஓதத் தெரியாத கோவைக் கோமாளியை வைத்து மார்க்க வியாபாரம் நடத்திக்கொண்டிருந்தனர்.மஹகொட பள்ளி எரிப்பும் நயவஞ்சகத் தனமும்சத்தியத்தை துணிந்து சொல்லும்போது, விளைவுகள் ஏற்படவே செய்யும்.

செய்திகள்