5.2.11

காதியானிகளின் கட்டிடம் சரிகின்றது.


இருளிருந்து ஒளியின் பக்கம் அழைப்பு

ஷேக் ரஹில் அஹ்மத்
மொளலவி ஜபருல்லாஹ் கான் மவ்லவி  (தமிழில்)


காதியானிஸத்தின் க­ஃபா மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் அவர்களுக்கும் ஏனைய சகோதரர்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள் ஆகியோருக்கும் அஸஙஸலாம்.
உங்களில் பலரைப் போன்றே நானும் அஹ்மதி தாய் தந்தையருக்கு புதல்வனாக  காதியானி குடும்பத்தில் பிறந்தவன்தான் ரப்வாஹ்வில் தான் சிறுவயது முதல் வளர்ந்தேன்.
சிறிது காலத்திற்கு முன் வரை குருட்டு நம்பிக்கை அஹ்மதி ஜமாத்தின் பிரச்சாரகர்களின் தவறான பிரச்சாரங்களினால் மிர்ஸா குலாம் அஹ்மது ஸாஹிபை மஹ்தி மவ்ஊத் என்று (வாக்களிக்கப்பட்ட மஹ்தி) மஸீஹ் மவ்ஊத் (வாக்களிக்கப்பட்ட மஸீஹ்) நபி என்று தவறாகத் தான் நம்பிக்கைக் கொண்டு இருந்ஆதன்.
ஆனால் ஒரு சம்பவம் என்னை திசைத் திருப்பியது. அதனால் மிர்ஸா குலாம் அஹ்மது ஸாஹிபின் நூல்கள் அவரது வரலாறு பற்றிய நூல்களை நடுநிலையாக எந்த சார்புமின்றி வாசிக்கத்துவங்கினேன் இந்த ஆழ்ந்த வாசிப்பினால் நான் மிர்ஸா ஸாஹிபின் அனைத்து பிரகடனங்களிலும் வெறும் முரண்பாடுகள் மட்டும் ம­வுற்று இருப்பதைக் கண்ணுற்றேன்.

மிர்ஸா ஸாஹீப் எழுதுகிறார்
பொய்யனின் கருத்துகளில் எங்கு பார்த்தாலும் முரண்பாடுகளே கண்டிப்பாகக் காணப்படும்   (பராஹீனே அஹ்மதியா பாகம் 5 ரூஹானின் கஸாயின் தொகுதி 21 பக்கம் 275) இந்த முரண்பாடான கருத்துகளி­ருந்தே மிர்ஸா ஸாஹிபின் கருத்துக்கள் அடிப்படையற்றவை மட்டுமல்லஅவை இறுதிதூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம்) அவர்களû இழிவு செய்வதாகவும் நபித்துவத்தின் தரத்தைக் குறைத்து தாழ்த்துவதாகவும் எதிர்த்துப் போர் தொடுப்பதாகவும் அமைந்துள்ளன.
எனது நாட்களின் பெரும் பகுதி ஈங்களிடையே கழிந்துள்ளது. இயல்பாகவே உங்கபளுடன் இதய பூர்வமாக நெருக்கம் உள்ளதை நான் உணர்கிறேன். ஆதலால் இந்த சில வழிகளை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ளஆவல் மிக கொண்டுள்ளேன். இவைகளை சுய சார்பின்றி ஆழ்ந்து வாசிக்குமாறு எனது சுய கருத்துகளை ஆண்வு செய்து தீர்க்கமான ஒரு முடிவை எடுக்குமாறும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஜனாப் மிர்ஸா ஸாஹிப் தனது நூல் பராஹினே அஹ்மதியாவில் இறைவன் அவரை நபி ரசூல் என்று பெயரிட்டான் என்று எழுதுகிறார். அல்லஹீத் நஆலாவின் பரிசுத்த வஹி என் மீது இறங்குகிறது. அதில் ரஸீல் முர்ஸல் நபி என்ற வார்த்தைகளால் அழைக்கப்படுகிறேன். இது வரை பராஹினே அஹ்மதிய என்ற நூல் பிரசுரமாஹி 22 இருபத்தி இரண்டு வருடங்கள் ஆகின்றன.
இதிலும் இந்த வார்ததைகள் பல முறை வருகின்றன. பார்க்கவும் (பராஹீனே அஹ்மதியா 498) இதி­ருந்து இந்த அடியேனை லசூல் என்றே அழைக்கப்பட வேண்டும் என தெரிகிறது எனக்கூறுகிறார்.   (ஏக்க­கா இஸாலா ருஹானி கஸாயின் தொகுதி  18 பக்கம் 27)
இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் இறுதி நபி (ஸல்) அவர்களின் மணிமொழிகள்  (ஹதீஸ்) ஒளியில் அவரது இடம். என்ன என்று பார்ப்போம். மற்றும் மிர்ஸா ஸாஹிபின் கட்டுரைகள் வாயிலாக அவரது தகுதி தரம் என்ன என்பதை ஆய்ந்து நோக்குவோம்.
தித்திக்கும் திருமறையில் கூறப்படுவதாவது.
முஹம்மது (ஸல்) உங்களில் எந்த ஆண் மகனின் தந்தையாகவும் இருந்தது இல்லை இப்போதும் இல்லை இனியும் இருக்கப் போவதும் இல்லை. ஆனால் அவர் அல்லாஹ்வின் ரசூல் மற்றும் காதமுன் நபிய்யீன் ஆவார். மேலும் அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்தவன் ஆவான் (அல் அஹ்ஸாப் 41 இந்த மொழி பெயர்ப்பு ஜமாத் அஹ்மதியா பிரசுரித்த தஃப்ஸீரே ஸகரியி­ருந்து எடுக்கப்பட்டது.
எவ்வாறு வல்ல அல்லாஹ் மிகத் தெளிவாகவும் உதாரணத்துடனும் எப்படி நபிகள் நாயகம் (ஸல்) எந்த ஆண் மகனின் தந்தையாக இல்லை.  எனக்கூறினானோ அதே போல் நபிமார்களில் இறுதியானவர் என்று தெளிவாக உதாரணங்களுடன் கூறிவிட்டான்.
இப்போது நபி úôழிகள் (ஹதீஸ்) இந்தக் கருத்தை எவ்வாறு பொருளஙபடுத்துகின்றன என்பதைப் பார்ப்போம்.
இது சம்பந்தமாக மூன்று சந்தர்பங்களில் நவிலப்பட்ட சில ஹதீஸ்கள் இங்கு தரப்படுகின்றன.

1)     நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அலங்காக அலங்கரித்து ஒரு மூலையில் ஒரு செங்கள் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதனின் நிலையாகும். மக்கள் அதை சுற்றிப்பார்த்து விட்டு ஆச்சரியமடைந்த இந்த செங்கல்  இங்கே வைக்கப்பட்டிருக்கக் கூடததா? என்று கேட்கலானார்கள் நான் தான் அந்த செங்கல் மேலும் நான் தான் இறைத்தூதர்களில் இறுதியானவர்.
இதை அபூஹீரைரா (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் விலக்கம் என்னவெனில் இறுதியாக பொருத்தப்பட்ட செங்கல்­ன் காரணமாக கட்டிம் பூரணமடைந்துவிட்டது.இதற்குப்பின் எந்த ஒரு செங்கல்லும் பொருத்தவும் முடியாது எடுக்கவும் முடியாது. (புஹாரி 3535 வெளியீடு ரஹ்மத் சென்னை )

2)    ஹஜ்ஜத்துல் விதாவில் இறுதி ஹஜ் அதி முக்கியமான காலத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது.
மக்களே உண்மை சத்தியம் என்னவெனில் எனக்கு பின்னர் எந்த நபியும் வர மாட்டார். உங்களுக்கு பின் எந்த உம்மத்தும் தோன்றாது.
அதாவது நீங்கள் உங்கள் ரப்பாகிய அல்லாஹ்வை வழிபடுங்கள் 5 வேளை தொழுகையை நிலை நாட்டுங்கள் ரமலானில் நோன்பை கடைபிடியுங்கள் உங்கள் பொருட்களுக்கு ஜகாத் கொடுத்து வாருங்கள். உங்களது தலமைப்பதவியில் உள்ளவர்களுக்கு கீழ் படியுங்கள். நீங்கள் உங்கள் எஜமானனின் சுவனத்தில் நுழைய முடியும்.  (கன்ஸீல் அஃமாஷ் அ­ ஹாமிஷ் முஸ்னத் அஹ்மத்)
சுவர்க்கத்தில் நுழைவதற்கு ரசூல் கரீம் (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் இல்லை என்று நம்பிக்கைக் கொள்வதற்கு முழு முதல் நிபந்தனையாக உள்ளது என்பது இந்தக் ஹதீஸ் மூலம் தெள்ளத் தெளிவாகிறது.
அதன் பின்னர்தான் இஸ்லாத்தில் வேறு கடமைகள் கூறப்படுகின்றன. இன்றைய கருத்து அந்தக் காலகட்டத்தில் முஸ்­ம்களின் மிகப் பெரிய மாநாட்டில் (ஹஜ்ஜத்துல் விதாவில்) வ­ளுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
3)    இப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் வஃபாத்தாகும் முன் நோய் வாய்பட்டு இருந்த போது என்ன கூறினார்கள் என்பதைப் பார்ப்போம்.
அப்துல்லாஹ் இப்னு உன்ர் (ர­) அவர்கள் ரிவாயத் செய்கின்றார்கள் . பெருமானார் (ஸல்) அவர்கள் நம்மிடம் வந்தார்கள் அவரது தோரணை நமக்கு இறுதி உரை நிகழ்த்தப்பட்டது என்பதைப் போன்று இருந்தது.
அண்ணலார் மூன்று முறை நவின்றார்கள் நாம் உம்மி நபியாக இருக்கிறேன். எது நாள் வரை நான் உங்களுடன் இருக்கின்றேனே எனது பேச்சைக் கேளுங்கள் பின் பற்றுங்கள் எனக்கு உலக வாழக்கையில் விடுதலைத் தரப்பட்ட பின்னர் நீங்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். அதில் ஹலாலாக்கப்பட்டவைகளை ஹலாலாக கருதுங்கள் ஹராமாக்கப்பட்டவைகளை ஹராம் என்று கருதுங்கள்   (அஹ்மதின் ரிவாய்த்)
அதாவது பிரிவன் காலம் வந்த போது பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பின் வேறு எந்த நபி இல்லை என்று வ­யுறுத்துகிறார்கள்.
மேலே கூறப்பட்ட இந்த ஆதாரங்களி­ருந்து ஒரு விஷயம் திண்ணமாக தெளிவாகி விட்டது. அது என்னவென்றால் (ரசுலே கரீம் (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி என்றும் அண்ணலாருக்குப் பின் வேறு எந்த விதத்திலும் நபி தோன்ற மாட்டார் என்பதுதான்.
ஆனால் இந்தக் கூற்றுக்கு ஆதாரப்பூர்வமான ஆயத் மற்றும் ஹதீஸ்களுக்கு வேறு ஏதேனும் வியாக்கியானம் விளக்கம் தர முடியுமா?
நான் கத்முன் நுபுவ்வத் (இறுதி நபித்துவம் பற்றி) மிர்ஸா ஸாஹிப் கூறியவைகளின் உங்கள் பார்வைக்கு சமர்பிக்கும் முன் அவர் தன்னைப் பற்றியும் தான் எவ்வாறு முஜத்திக் என்பதைப் பற்றியும் அவர் தனது நூல் பராஹீனே அஹ்மதியாவில் எழுதி இருப்பதை கூற விழைகிறேன்.
ஏனெனில் இந்தக் கருத்துக்கள் எனது உள்ளக் கிடக்கையை நீங்கள் புரிந்து கொள்வதில் உதவிகரமாக இருக்கும் என நினைக்கிறேன்.
பராஹீனே அஹ்மதியா மிர்ஸா ஸாஹிப் முதன் முத­ல் எழுதிய நூல் தான் இது. இந்த நூ­ன் முதல் நான்கு தொகுதிகள் கி பி 1884ல் பிரகாரமானது ஜந்தாம் பாகம் 23 வருடங்கள் கழித்து பிரசுரிக்கப்பட்டது.
இந்த நூ­ல் அவரது பிரகடனங்கள் இதோ (பிரகடனங்கள் ஏராளம் உள்ளன. அவற்றை சிலவற்றைக் காண்போம்.)

1)    இந்த சாமானியன் ஒரு நூலை எழுதியுள்ளான் இதைப் படித்தப்பின்னர் ஒரு சத்தியத் தேடலை மேற்கொண்டு இருப்பவர் இஸ்லாத்தை ஏற்பதைத் தவிர வேறு வழி எதுவும் அவருக்குப் புலப்படாது (இஷ்திஹார்) ஏப்ரல் 1879 தப்லீகோ ரிஸாலத் பாகம் 1 பக்கம் 8)
2)    மேலும் நூலாசிரியனுக்கு அவன் இந்தக் கால கட்டத்தில் மறுமலர்ச்சியாளன் (முஜத்திதே வக்த்) என்ற ஞானம் தரப்பட்டது . மேலும் ஆத் மரீதியாக அவளது அறிவுத்திறன் மஸீஹ் இப்னு மர்யம் (ஈஸா நபியன் அறிவுத்திறனை ஒத்ததாக இருக்கிறது. இந்த அறிவிப்பனை செவியுற்ற பின்னரும் எவன் ஒருவன் உண்மையான பக்தியை நாடுபவனாக மாறி தனது பிரச்சினைகளி­ருந்து விடுபட்டு முழுமனதுடன் வந்து இணையவில்லை என்றால் இதுவே அவனுக்கு இறுதியான வலுவான ஆதாரம் என புரிந்து கொள்ள வேண்டும்  இஷ்ததிகார் எண் 16 மஜ்மூயே இஷ்திகார் பாகம் 1 : பக்கம் 3
3)    இந்த குழப்பமான சூழ­ல் ஆழ்ந்த ஆய்வுகளில் அடிப்படையில் உண்மையான கருப்போருளின் மூல முத­ன் ஆழத்தை விடுவிக்கும் அடிப்டையில் அமைந்த ஒரு தத்துவார்த்தமான விவாத நூல் தான் ஆன்ம பலத்தை தரும் (இஷ்திகார் அறிவிப்பு 11 மஜ்மூயே இஷ்திகார் பாகம் 1: பக்கம் 23 25 வரை
4)    ஆக இந்த நூ­னை ஆக்கியோரின் யாரெனில் நிர்வகித்து வழி நடத்துபவன் வெளிப்பார்வைக்கும் உள்ளார்ந்த முறையிலும் இருலோக ரட்சகனாகிய ரப்புல்  ஆலமீன் தான் ஆவான் (இஷ்திஹார் என் 18 மஜ்மூயே இஷ்திஹாராபாத் பாகம் 1 பக்கம் 56 முஜஷத்திக் வரைவிலக்கணத்தை மிர்ஸா ஸாஹிப் இவ்வாறு தருகிறார்.
5)    அல்லாஹ்வினால் முஜத்திக் மறுமலர்ச்சி தன்மை கொண்ட சக்தியை பெறுகின்றவர்கள் செறும் எலும்புத் துண்டுகளை விற்கின்றனர். அல்லர் மாறாக அவர்கள் உண்மையிலே ரசூலுல்லாஹ் அவர்களின் இணை துணையாகவும் ஆத்ம ரீதியாக நபிகளார்ன் கலீஎபாவும் (பிரதிந்தியும்) ஆவார்கள் . அல்லாஹ்தஆலா அவர்களுக்கு நபிமார்களும் ரசூல்மார்களுக்கும் அறிவிக்கப்படும் அனைத்து அருட்கொடைகளுக்கும் வாரிசாக்க நியமிக்கப்படுகின்றனர்  (ஃபத்ஹே  இஸ்லாம்  அடிக்குறிப்பு ரூஹானி கஸாயின் பாகம 3)
மேலும் இறையருள் அவர்களது இதயத்தை ஒளிப் பெறக் செய்கிறது . எந்த ஒரு கஷ்டமான காலத்திலும் ரூஹீல் குத்ஸ் எனப்படும் வானவர்களால் பாதுகாக்கப்பட்டு அறிவூட்டப்படுகிறார்கள் அவர்களில் நடை, உடை பாவணைகளில் உலக வாழ்வின் வர்ண ஜாலங்கள் காணப்படுவதில்லை ஏனெனில் அவர்கள் பூரணமாக என்னை வார்க்கப்பட்டவர்களும் ஆவார்கள் தன்னைப் பற்றி தம் அனைத்துப் பாவங்கள் தவறுகளின்றி இறையருளால் பாதுகாக்கப்பட்டவர் என்று அறிவிக்கும் மிர்ஸா குலாம் அஹ்மத் ஸாஹிப் இவ்வாறு கூறுகிறார்.
6)    அல்லாஹ்தஆலா  என்னை  எந்த தவறிலும் நிலைத்து நிற்பவனாக வைப்பதில்லை மேலும் என்னை ஒவ்வொரூ தவறுகள் பாவங்களில் இருந்து முற்றிலும் பாதுகாக்கப்பட்டவனாகவோ வைக்கிறான் (நூருல் ஹத் பாகம் 2 ரூஹானி கஸாயின் பாகம் 8 பக்கம் 272)
7)    நான் செய்யும் பணிகள் அல்லாஹ்வின் கட்டளைப்படி தான் செய்கிறேன் எனது சுயவிருப்பத்தினால் எதுவும் செய்வதுமில்லை செயல்படுவதுமில்லை


செய்திகள்