www.onlinepj.comல்
இரண்டு நாள் விவாதமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இணையதளம் மூலம்
தமிழ்க்கூறும் நல்லுலகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த விவாதத்தைப்
பார்த்தனர். ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 30க்கும் மேற்பட்ட கிளைகளில்
இருந்து 200 பேரும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கம் சார்பாக 200 பேரும்
பார்வையாளர்களாக வந்திருந்தனர்.
இரண்டாம் நாள் இறுதி அமர்வு கேள்வி பதில்
அரங்கமாக இருந்தது. இரண்டு பக்கமும் 8 கேள்விகள் கேட்கப்பட்டன. இறுதித்
தருணம் வரை விவாதம் விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடந்து முடிவடைந்தது.
விவாதிக்க வந்திருந்த மார்க்க
அறிஞர்களுக்கும் விவாதத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக்
குழுவிற்கும், அரங்கை அமைதியாக வைத்துக் கொண்ட வாலண்டியசுக்கும், அமைதியாக
இருபக்க வாதப் பிரதிவாதங்களையும் செவிமடுத்த பார்வையாளர்களுக்கும், அல்
அஸ்ஹர் நவோதய பாடசாலை கேட்போர் கூடத்தை விவாதத்திற்காக அனுமதி வழங்கிய
பாடசாலை அதிபர் அவர்களுக்கும், இலங்கையில் நடந்த விவாத்ததை
சென்னையிலிருந்து ரேடி ஒளிபரப்புச் செய்த வெப் மாஸ்டர் அப்பாஸ்
அவாகளுக்கும் விவாதத்திற்கான பல்வகை உதவி புரிந்த தமிழ் நாடு தவ்ஹீத்
ஜமாஅத்திற்கும் மற்றும் எல்லா வகையிலும் இந்த விவாதத்திற்காக உதவிய
அனைவருக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தனது நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறது.
அசத்திய மூலாதாரங்களின் அடி அசைந்து போனது
தவ்ஹீத் ஜமாஅத்தின் இளம் உலமாக்களின்
சத்திய வாதங்களுக்கு முன்னால் அசத்திய மூலாதாரங்கள் (இஜ்மா, கியாஸ்)
தவிடுபொடியானது. அல்ஹம்துலில்லாஹ்.
விவாதம் பற்றிய விரிவான தகவல்களை இன்ஷா அல்லாஹ் எமது இணையதளத்தில் விரைவில் எதிர்பாருங்கள்.
No comments:
Post a Comment
இவ்வாக்கம் குறித்த உங்கள் கருத்தை பதியத் தவறாதீர்கள்