26.4.11

பலவேஷம் பந்திபோட்டதில் மந்தியாய்க் குந்தியெழுந்த கவிஞர்(?) இக்பால் அலிக்கான மறுப்பு இது.


கவிஞர்(?) இக்பால் அலி என்பவர் எழுதிய பொய்யான தகவல்களுக்காக இலங்கை சிலாபம் பகுதியைச் சேர்ந்த சகோதரர் ரஸ்மி அவர்கள் தெளிவான ஒரு பதிலை நமக்கு எழுதி அனுப்பியிருந்தார் அவர் எழுதிய அந்த பதிலை எவ்வித மாறுதலும் இன்றி வெளியிடுகிறோம்.



இக்பால் அலியின் வாதம்:–

இஸ்லாமியச் சூழலில் பல்வகையான விவாதங்களும்உரையாடல்களும் அவசியமாகும். இந்த விவாதத்தில் ஈடுபடுபவர்கள் நேர்த்தியான குணப் பண்புகளோடு குறித்த விடயம் தொடர்பான வாதங்களை முன் வைத்தலே சிறந்ததும்ஆரோக்கியமானதுமாகும். தரமான விடயதானங்களை உள்ளடக்கிய செறிவான தகவல்களுடன் சிந்திக்கத் துணை செய்யக் கூடிய ஆழமான கூறுகளை நிதானத்துடன் ஒப்புவிப்பதன் மூலமாகத்தான் சிறந்த ஆய்வாளனாக முடியும். ஆனால்,பீஜே என்பவர் சமீபத்தில் இஸ்மாயில் ஸலபி விடயம் தொடர்பாக அவர் வெளிக் கொணர்ந்த கருத்துக்களை நோக்குகின்ற பொழுது அவரைப் பற்றி மறு பரீசீலனைக்குட்படுத்த வேண்டியுள்ளது.

நமது பதில்:-

அவசியப்பட்ட தமிழ் இஸ்லாமியச் சூழல் விவாதங்களையும்,உரையாடல்களையும் பீஜேயொடு அடியொட்டி வார்த்தெடுக்கப்பட்ட அனுபவங்களாய் இன்றளவும் எம் உளப்பதிவேடுகளில் பிரதியெடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. பீஜே யினால் நிகழ்த்தப்பட்ட விவாதங்களாகட்டும்வினா விடைகளாகட்டும்,அத்தனையும்ஆரோக்கிய
அட்டையுடனும்அம்சமான குண நலத்துடனும்செறிந்த சிந்தனைத் தகவல் பெட்டகமாக உலகமெங்கும் வலம் வருவது நாசிச சிந்தனைகளுக்கு பட்டவர்த்தனமான குருட்டு. சிந்தனைத் தொய்வுகள் ஆய்வுகள் என்று விளங்கும் போலிக் கவிஞர்களுக்கு இது தகரடப்பா தட்டும் தாளமாகத்தான் இருக்கும்.
பதட்டம் முற்றி பாழாங்கிணற்றில் விழுந்த பாழாய்ப்போன பக்கவாத சிந்தனைகள் ஆழஞ்சென்று தேடினாலும் காலஞ்சென்ற கதையாய்த்தான் முடியும். சமீபத்துக்கு முந்தைய காலங்களில் இஸ்மாயில் ஸலபியின் அதீத(?) குணப்பண்புகளையும்நோயுற்ற விடயதானங்களையும்,சொறிபிடித்த தகவல்களையும்;, சிரிக்கத் தோனும் நுனிப்புல் மேயும் கூறுகளையும்அவசரப்பட்டுப் பார்த்ததால்தான் கவிஞர் இங்கு அவசியப்பட்டு வெளிக்கொணர்ந்துள்ளார். ஓட்டைக் கலசத்தில் வார்க்கப்பட்ட பரிசீலிக்கவே முடியாத் தரிசுக்கவிதைகளைத் தாங்கிய புள்ளிக் கவிஞர் துள்ளிக் குதிப்பதன் காரணம் பின்னர் வரும்.

இக்பால் அலியின் வாதம்:-

அவர் என்னுடைய புள்ளிகளில் சில புள்ளிகள்’ எனும் கவிதை நூல் பற்றி எழுதிய குறிப்புக்கள் அனைத்தும் முற்றிலும் பொய் மூட்டை கலந்த தகவல்களாகும். இந்நூல் நான் பணி புரியும் நிறுவனத்தினர் வெளியிட்டதாகவும்இஸ்மாயில் (ஸலபி) இந்நூலை மேற்பார்வை செய்துள்ளதாகவும்நானொரு கம்யூனிஸ வாதி எனவும் பாரியதொரு அபாண்டத்தைச் சுமத்தினார். இவை யாவும் இஸ்மாயிலை மட்டந்தட்ட வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியும்நான் பணி புரியும் நிறுவனத்தின் மீது கொண்டுள்ள கோப-தாபத்தினால் ஏற்பட்ட கருத்துச் சோடிப்பே தவிர உண்மையல்ல.
இந்நிறுவனத்தில் நான் நீண்ட காலமாய்ப் பணி புரிகின்றேன். இந்நிறுவனத்திலிருந்து சம்பளத்தைத் தவிர வேறு எந்த விதமான பயனை இது வரை பெற்றதில்லை. இவ்வாறானதொரு நிலையில் என் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கோபுத்தகத்தை வெளியிடுவதற்கோ எந்த விதமான உதவியும் எனக்கு வழங்கப்படவில்லை என்பது உறுதி.

நமது பதில்:-

கற்பனை உலக சஞ்சாரம் கவிஞர்களுக்கு ஒன்றும் ஆச்சரியமில்லையென்றாலும், “அனைத்தும் முற்றிலும்” என்ற கவிஞரின் பதப்பிரயோகம் அவர் தன்னையும் கவிஞர் என நினைத்து சஞ்சார நாடகமாடுகிறார் என்றே கருதவேண்டியுள்ளது. பீஜே எடுத்தியம்பிய சொல்லாடல்களைக் கருத்துப் பிசகாமல் மீண்டும் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன். சர்வ அதிகாரம் படைத்த கலீலுர் ரஹ்மான்கணினித் தட்டெழுத்தாளர் றிள்வான் ஆகியோருக்கு நீங்கள் நன்றிக் கடன் பட்டது பற்றியும்இவர்கள் செய்த பேருதவிகள் பற்றியும் சற்றுச் சரளமாகக் கூறுங்கள். எந்த உதவி செய்தாலும் அந்த உதவி செய்யலாமா என்பதும் இதைத் தடுக்காமல் இஸ்மாயில் என்ன மேலே பார்த்துக்கொண்டு (மேற்பார்வை என்றுகூட சொல்லலாம்) இருந்தாரா என்பதும்தான் பீஜே யின் அகர வினா.
பீஜேக்கு காழ்ப்புணர்ச்சியாம் ஸலபி இஸ்மாயீல் மீது. உங்கள் தலைகள் காலுடன் புணர்ந்து மையிட்ட மடமைகள் வெளிச்சத்துக்கு வரும்போது,மட்டந்தட்டப்பட்ட மனமறியும் காழ்ப்புணர்ச்சி யாருக்கென்று. காசு கைது செய்த காசுதாஸான ஜமாத்துஸ் ஸ_ன்னா மார்;க்ஸியா காசளக்கும் ஸலபியை காழ்ப்புணர்வு கொண்டு விமர்சிக்கிறார் என்று கூற உங்களுக்கு வெட்கம் வரா!. காசுக்கு மாரடிக்கும் இயல்பூக்கம் தங்கள் நிறமூர்த்த அலகுகளில் ஊறிப்போனதால்தான் வெட்கமே வரா.
உங்கள் நீண்டகாலப் பணியில் வேதனம் தவிர ஏதெனும் பயன் எடுத்ததுண்டாஎனக் கேட்பதுஎடுக்கவும் வாய்ப்புள்ளது தவிர்த்துத்தான் உள்ளேன் என்று கூறுவது போல உள்ளது. சம்பளம் தவிர கிம்பளம் கொடுத்தா ஆசிரியர் விடுதிவீட்டில் அரை ஆயுளை (சும்மா) கழித்தீர்கள்?

இக்பால் அலியின் வாதம்:-

பிரபலமான எழுத்தாளர் டொக்டர். தி. ஞானசேகரனின் ஞானம்பதிப்பகத்தின் ஏழாவது நூலாக இது வெளிக் கொணரப்பட்டுள்ளது. இந்நூலுக்குரித்தான ஐ.எஸ்.பி.என் இலக்கம் 955-8354-03-1 இதுவாகும். நான் பணி புரியும் நிறுவனத்தினரின் வெளியீடு எனப் பெயர் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானதாகும். அக்கவிதைகள் யாவும் எந்தெந்தக் காலப் பகுதிகளில் வெளியாகியுள்ளன என்றும்,எந்தெந்த சஞ்சிகைகளில் மற்றும் தேசியப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்பதையும் தெட்டத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அந்நூலில் தகவல்கள் உள்ளன. இலங்கையின் தேசிய பத்திரிகைகளான தினகரன்’, ‘வீரகேசரிஎன்பவற்றிலேயே என்னுடைய கூடுதலான கவிதைஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதே வேளை சர்வதேச ரீதியிலாகப் புகழ் பெற்றஞானம்’ கலை இலக்கிய சஞ்சிகை மற்றும் இன்னோரன்ன கலை இலக்கிய சஞ்சிகைகளிலும் பிரசுரமான கவிதைகளே அந்நூலில் உள்ளன. கவிதைக்குப் பொய் அழகு சேர்ப்பது போல அவரும் கேள்விப்படாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றை அதில் எழுதியுள்ளார்.

நமது பதில்:-

ஞானம் பதிப்பகமும்ஐ.எஸ்.பி.என் இலக்கமும் கலீலுர் ரஹ்மானும்,றிள்வானும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் அல்லர் என்று நிறுவ தகுந்த ஆதாரங்கள்(?);. விட்டால் வாங்கிய வாசகர் பட்டியலையும் ஆதாரமாகத் தர மறுக்கமாட்டீர்கள்.
உங்கள் கவிதை(?) வெளியாகிய சஞ்சிகைகளுக்கும்தினகரனுக்கும்,வீரகேசரிக்கும் இல்லாத பாராட்டு மாலை பாவம் அந்த அ(ட)ப்பாவி கலீலுர் ரஹ்மானுக்கும்றிள்வானுக்கும். கவிதையுடன் சேர்த்து கவிஞர் இக்பால் அலிக்கும் பொய்தான் அழகு. 
கவிதையைச் சுமப்பதை விட சீழைச் சுமப்பது மேலானது என்ற பொய்யா நபிமொழி உங்களுக்குப் பொய்தான்.

இக்பால் அலியின் வாதம்:-

அடுத்துஇஸ்மாயில் ஸலபி என் நூலுக்கு மேற்பார்வை செய்ததாக சுட்டிக் காட்டியுள்ளார். இஸ்மாயில் ஸலபியின் துறை வேறு;என்னுடைய துறை வேறு. இலக்கியத்தில் ஊடுபாயும் உள்ளார்ந்த விடயங்களை இன்னுமொருவர் என் நூலை மேற்பார்வை செய்ய வேண்டிய தேவையில்லை. இது ஒரு ஆய்வு நூலல்ல. ஆராய்ச்சி நூலுக்குத்தான் மேற்பார்வையாளர்செயலமர்வுகருத்துப் பரிமாறல் என்பவை தேவை. இஸ்மாயில் ஸலபியின் விடயம் தொடர்பான எண்ணக் கருவிலிருந்து கருத்துப் பரிமாறலை அவர் தொடாமல் சம்பந்தமில்லாத விடயங்களுக்கு அப்பால் விலகிப் போய்ச் சென்று ஏதோ ஏதோ எல்லாம் எழுதுவது சிறந்த ஆய்வாளனுக்கு உவப்பானதல்ல.

நமது பதில்:-

மேலே பார்த்துத் த(து)ப்பும் இல்மாயீல் ஸலபிநன்றி சொல்லி நீங்கள் கலீலுர் ரஹ்மானைக் காட்டிக் கொடுத்த போதும்கவிதை வெளியிட்ட போதும் மேலே பார்த்துக்கொண்டுதானே இருந்தார் என்பதுதான் பீஜே யின் கேள்வி. மேற்பார்வையிலேயே இன்னும் இருக்கும் இஸ்மாயீல் ஸலபியின் கண்கள் எப்போது தரையிறங்கும்இஸ்மாயீல் துரைக்கும்,இக்பாலலி துரைக்கும் குரைக்கும் துறை தவிர என்ன பெரிய துறை இருக்கிறதுஎன் இணைவைப்புக் கவிதைக்கு இணையாய் எந்தக் கவிதை இருக்கப்போகிறது என்ற நினைப்புத்தான் உங்கள் பிழைப்பைக் கெடுத்தது. அதனால்தான் மேற்பார்வையற்று மொழுகிய முஸ்லிம் முலாம் கவிக்குள் இணைத்துரு எட்டிப்பார்த்தது. ஆய்வில் தோயாத படைப்புகள் மார்க்கம் தொடர்பான எண்ணக்கருவில் அனைத்துக் கழிசடைகளையும் தாங்கிவருதல் அனுமதிக்கத்தக்கது என்ற உங்கள் வாதம் நகைப்புக்குரியது.


இக்பால் அலியின் வாதம்:-

அவர் இது வரை கடந்த கால இஸ்லாமியப் பிரச்சாரப் பயணத்தில் முன்வைத்த ஆய்வு ரீதியான ஒப்புவிப்புக்கள் அவரிடம் நேர்மைத் தன்மையைக் கொண்டிருக்கின்றதாஎன்கின்ற சந்தேகம் தற்பொழுது எழுகின்றது. ஏனென்றால்நான் பணி புரியும் நிறுவனம் தொடர்பாகப் பல குற்றச் சாட்டுக்களை விலாசித் தள்ளியிருக்கின்றார். இது கூட நம்பகத் தன்மை அற்றவையே! இந்நிறுவனத்தில் 14 வருடங்களுக்கு மேலாகச் சேவை புரிகின்றேன். அவரின் கூற்று தூர நின்று பொய்யான அதிக கற்பனையோடு மிதப்பதாகப் புலப்படுகின்றது.

நமது பதில்:-

புலப்படும் பொய்கள் அம்பலப்படும் நிலைக்கு வரும்போதுதான் பொய்,மெய்யாகப் பொய்யென்று நிரூபணமாகும். பீஜேயின் ஆய்வுகள் உங்களால் சுட்டிக்காட்டி தட்டிக்கேட்கப் பட்டாலோஏலவே சுட்டிக்காட்டப்பட்ட பொய்கள் உங்களால் தூசு தட்டிக்காட்டப்பட்டாலோ தவிர மொட்டைச் சந்தேகங்களில் நேர்மை ஏதுமில்லை.

இக்பால் அலியின் வாதம்:-

அடுத்துநானொரு கம்யூனிஸ்டாக சித்தரிக்கப்பட்டிருந்தேன். உண்மையிலே நான் ஒரு கம்யூனிஸ்ட்டல்ல. உள்ளத்தின் வார்ப்புத்தான் கவிதை. இலட்சியார்த்த எதிர்பார்ப்புடனான நோக்கில் புனையப்பட்ட கவிதையல்ல அது. பொலிவு மிக்க சொற் பதத்தின் கூட்டமான கவிதை நயத்துக்குரிய பண்பாட்டுத் தளத்துக்குரிய குறியீடாக அது உள்ளது. கவிதைக்கு உள்ளுறைஇருண்மைஉருவகம்இன்ன பிற வகையான இலக்கிய அம்சங்கள் உள்ளன. இவற்றின் நுட்பங்களை எல்லாம் விளங்காக் கூட்டம் ஒற்றைப் படப் புரிதலை வைத்துக் கொண்டு சரியான தளத்தில் சரியான கோணங்களை வைத்துப் பார்க்கின்ற அறிதிறன் அற்ற மந்தைகளால் சூட்டப்பட்டத்தை அவர் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

நமது பதில்:-

மந்தைக்கு அறிதிறன் அற்றது விந்தையல்ல. சிந்தைக்குத் தெளிவிலா நிந்தனை உங்கள் கவிதை. உங்களை நீங்கள் கம்யூனிஸ்ட்டல்ல என்று சொல்லிக் கொள்வதால் எழுதிய கவிதை சிதையுமா என்ன? “உள்ளத்தின் வார்ப்புத்தான் கவிதை” என்று கவிதைக்கு விதியமைத்த நீங்கள்இலட்சியார்த்த எதிர்பார்ப்புடனான நோக்கில் புனையப்பட்ட கவிதையல்ல அது” என்று முரண்பட்டிருப்பது நீங்களும் கவிஞர் என்பதாலா?நோக்கமென்பது உங்கள் உள்ளத்தின் வார்ப்பாபீரிட்டுப் பாயும் மடமை வெள்ளத்தின் வார்ப்பாபொலிவுமிக்கச் சொற்பதங்களும்தெளிவுமிக்க வார்த்தைப் பிரயோகங்களும்கவி நயத்துடன் கைகோர்த்து இணைவைப்பைக் குறியீடாகக் காட்டும் போது உள்ளுறைஇருண்மை,உருவகம்இன்னும் பல இலக்கிய அம்ச நுட்பங்கள் அதை மாற்றித்தான் காட்டுமா என்ன?

இக்பால் அலியின் வாதம்:-

உண்மையிலேயே 1988 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கவிதைதான் அது. அப்புத்தகத்தில் 1998 ஆம் ஆண்டு என்று அச்சுப் பிழையாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளனின் முற்பட்ட காலம்,நடுத்தரக் காலம்பிற்பட்ட காலம் என்று பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். நான் வாழ்ந்த சுற்றுச் சூழல்நெருங்கிப் பழகின நண்பர்களின் மூலமாக கார்ல் மாக்ஸ்’ என்பவரின் சொற் பதம் கவிதையில் பொலிவு பெற்றுள்ளது. கொள்கைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு செயற்பட்டதொன்றல்ல. எனினும்இது பற்றி என் சுற்று வட்டத்தில் உலமாக்கள் அடிக்கடி எடுத்துக் கூறியதன் பயனாக என் மனதுக்கு அச்சம் ஏற்பட்டது. மீளவும் அல்லாஹ்விடம் பிழை பொறுத்து,பிரார்த்தனை செய்து கொண்டேன்.

நமது பதில்:

இதுவன்றோ சமாளிப்பு. நல்ல பல்லிளிப்பு! மு(மூ)க்கால முனங்கல் என்பது இதுதானோ?! 2001 என்பது தௌ.மு வாதௌ.பி யாஉங்களுக்கும் அல்லாஹ் மீது அச்சமாதுச்சமாய் மதித்த அசட்டு தைரியம்தான் இன்றளவும் இறுமாப்பாய் கவிதைகளில். பிழை பொறுத்தலும் பிரார்த்தனையும் திருந்திய பின்னர்தான். பதிப்பில் திருத்திய பின்னர்தான். 88, 98 ஆய் பிழைத்ததால் நீங்களும் பிழைத்துவிட்டீர்களா?அந்தப்பிழைக்கும் கேடுகெட்ட உங்கள் பிழைப்புக்கும் என்ன சம்பந்தம்?யார் கேட்டார் அந்தப் பிழையைமன்னிக்கனும் என்னை. 88 இலேயே தினகரனில் வந்துவிட்டதால் உங்கள் இணைவைப்புக் கவிதை இன்று பணவைப்புக் கவிதை என்பதை மறந்தேவிட்டேன்.

இக்பால் அலியின் வாதம்:

இஸ்லாம் மார்க்க விடயம் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் இருப்பது கட்டாயம். அதில் அபத்தப் போக்கும்அராஜகப் போக்கும் இருத்தல் கூடாது. இப்படி எழுதுபவர்களிடம் அறிவின் அழகும் இல்லை;நிதானமுமில்லைஅர்த்தமுமில்லை. வெறுமனே போதைப் பிதற்றல்களுக்கு உள்ளானவர்களாக கணிப்பீடு செய்யப்படுவார்கள்.

நமது பதில்:

யாரால்யாருக்குஎச்சந்தர்ப்பத்தில்சந்தர்ப்பம்தான் கூறி விடுங்களேன்! செயப்பாட்டு விணையில் உங்கள் வசனம் முற்றுப்பெற்றதால்வந்த பொல்லாச் சந்தர்ப்பவாதக் கேள்வியது. உங்கள் கட்டாய வேண்டுகோள் ஏவலாக மாறி எதிர்மறையில் முற்றுப்பெற்று கணிப்பீடில் தொக்குநிற்கிறது. ஏவல்களே விலக்கல்களானால் இங்கு பரிந்துரைகள் எதற்காககவிக்கோவின் வரிகள் அல்ல இவை. கவிசைக்கோ இக்பாலின் சார வரிகள்.

இக்பால் அலியின் வாதம்:

தன் அறிவின் ஆற்றலாலும்பேச்சுத் திறனாலும் தவ்ஹித் வட்டாரத்துக்கு மத்தியிலும் மற்றும் மாற்று சமூகத்தினர் மத்தியிலும் தன் நாமத்தின் அடையாளத்தைப் பதித்திய ஒரு நல்ல மார்க்க அறிஞர் என்ற வகையில் கடைசிக் கால கட்டத்தில் ஆழ-அகலமாக பரந்த மனப் பான்மையுடன் ஒரு குறித்த விடயம் தொடர்பாக மாத்திரம் நின்று கொண்டு விவாதத்தில் ஈடுபடுவது சதா சிறப்பானது.
அதே வேளைமற்றவரைக் குறை கூறிக் கேடு கெட்ட மனிதக் குணமுடையவராக இருப்பதை விடுத்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி மேலும் உங்களது இஸ்லாமியப் பணியை முன்னெடுத்துச் செல்லுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அன்புடன்,
கவிஞர் இக்பால் அலி.


நமது பதில்:

தவ்ஹீத் வட்டாரம் புரிந்திராத புதிரை புரியவைத்த மகா கவி இக்பால் அலியே. நாம அடையாளத்தைத் தேடித்தான் இந்த ஸலபிக் கூட்ட சண்ணியாச முனிகள் தமது கடைசிக் காலத்தில் பீஜேயை வசைபாடுகின்றது. ஆழ-அகலமான பரந்த மனப் பான்மை ஒரு குறித்த விடயத்திலல்லாது விரித்த இடத்திலெல்லாம் பீஜேயிடம் தொன்றுதொட்டுத் தொடருவதுசதா ஊளையிடும் பனங்காட்டு நரிகளுக்கு எங்கே தெரியும்விரக்தியின் விளிம்பில் நின்று குரைக்கும் குறைபாடுகள்தான் மன்னிப்புக் கேட்டுத் திருந்த வேண்டும். 

குறிப்பு 1.– “இக்பால் அலியின் வாதம்” என்ற எனது பதம் ஒற்றைப் படப் புரிதலை வைத்துக் கொண்டு புரியும் சொல்லாடல் அல்ல என்பதைப் பதியவைக்க விரும்புகிறேன். வாதம் என்ற சொல்லுக்கு வாத நோய் என்ற இன்னொரு அர்த்தமும் உண்டு என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு 2 – குர்ஆன் கூறுவதைப் போன்று வீணர்கள் பின்பற்றும் கவிஞனல்ல நான். கவிஞர்களுக்குக் கவிதையாய்ப் பதிலடி கொடுத்த ஹஸ்ஸான் இப்னு ஸாபித்தின் வழிமுறையில் வந்த பதிலடியிது.

செய்திகள்