15.4.11


இலங்கை மத்ரஸாக்களின் இன்றைய நிலை(?)
RASMIN M.I.Sc

(ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பு மாத இதழில் வெளிவந்த கட்டுரை.)

இஸ்லாமிய மார்க்கத்தை மக்களிடம் எத்தி வைக்க வேண்டும் என்பதற்காக பண்னெடுங் காலமாக நம் மத்தியில் பல அரபிக் கல்லூரிகள் தோற்றம் பெற்று பல்லாயிரக் கணக்கான ஆலிம்களை உருவாக்கியிருக்கிறது, உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கல்லூரிகளின் நிலைமைகள், கொள்கைகளை மிகவும் ஆழமாகவும், தெளிவாகவும் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

ஏன் என்றால் இன்று நமக்கு மத்தியில் மார்க்கப் பிரச்சாரத்திற்கு பாடுபடுவதாக பிதற்றிக் கொள்ளும் பல கல்லூரிகள் ஆலிம்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகத் தான் இருக்கின்றன என்பதே உண்மை.

வருடத்திற்கு இத்தனை பேரை உருவாக்கினோம், இந்த வருடம் இத்தனை பேர் பட்டம் பெற்றார்கள், இந்தனை பேர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவானார்கள் என்ற வரி விளப்பரத்திற்காக போராடும் பல கல்லூரிகள் நமக்கு மத்தியில் இருப்பதைப் பார்க்கிறோம். 

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.அல்லாஹ் மிகைத்தவன் மன்னிப்பவன்.(35:28)

அல்லாஹ் உலகில் படைத்தவர்களில் மிகவும் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான் என்று இறைவன் மேற்கண்ட வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.ஆனால் இன்றைய நிலையோ இதற்கு நேர் மாற்றமாக இருப்பதைப் பார்க்கிறோம். 

தங்களை அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் இறையச்சத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்று சந்தேகப்படவேண்டியுள்ளது. தனது இளமைக் கல்வியை சிறந்த முறையில் மார்க்கத்தின் நிழலில்  அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அரபிக் கல்லூரிகளைத் தேடி வரும் சிறார்கள் மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றுக் கல்வி புகட்டப்படுகிறார்கள். 

மட்டுமன்றி ஏமாற்றுக் கல்விக்கு வேட்டு வைக்கிறோம் என்று கிளம்மி ஏகத்துவக் கல்லூரிகள் நடத்துவதற்கு தயாரான எத்தனையோ பேர் அவற்றை தமது பிழைப்புக்குறிய வழியாக மாற்றியிருப்பதைக் காண முடிகிறது.

ஏழு வருடங்கள், ஐந்து வருடங்கள் என்று பாடத்திட்டத்தை அமைத்துள்ள எத்தனையோ மத்ரஸாக்கள் தனது கல்லூரி மாணவர்களுக்கு இஸ்லாத்தின் சரியான அடிப்படையைக் சொல்லிக் கொடுப்பதில்லை.

ஷாபி என்றும் ஹனபி என்றும் மத்ஹபுகளுக்கு வக்காளத்து வாங்கும் இவர்கள் மத்ஹபு தொடர்புடைய நூல்களைத் தான் பாடத்திட்டத்தில் கூட சேர்திருப்பார்கள்.இவர்களினால் உருவாக்கப்பட்டு வரும் இந்த மாணவர்களின் எதிர்காலம் என்னவாகிறது? 

மரண வீட்டில் யாசீன் ஓதுவதும், காலத்திற்குக் காலம் மவ்லிது ஓதுவதும் தான் இவர்களின் பிழைப்பாக மாறுகிறது.

தவ்ஹீத் போர்வையில் உருவான அரபிக் கல்லூரிகளின் இன்றைய அவல நிலை (?)

மார்க்கத்தை அதன் தூய வடிவில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இலங்கைத் திரு நாட்டில் பல ஏகத்துவக் கல்லூரிகள் கால் பதித்தன. அவற்றில் பல தற்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன என்பது தனிக்கதை.

சில கல்லூரிகள் இன்றிருந்தாலும் அவற்றின் சமூகப்பணி (?) பெரும் கவலையளிப்பதாகத் தான் இருக்கிறது.

தெளிவான மார்க்க அறிஞர்களாக மாணவர்களை உருவாக்குகிறோமோ இல்லையோ பி.ஏ பட்டதாரிகளாக மாற்றிவிட வேண்டும் என்பதே இந்தக் கல்லூரிகளின் நவீன பாடத்திட்டமாக இருக்கிறது.

பட்டதாரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அது தான் முழு நேரப்பணியாக மாறி மார்க்கக் கல்வி பகுதி நேரமாக இந்த கல்லூரிகளில் மாறிவிட்டதே கவலையளிக்கிறது.

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.(58:11)

அல்லாஹ்விடத்தில் உயரிய தகுதியை நாம் அடைய வேண்டுமென்றால் அவனை நம்புவதைப் போல் அவனுடைய மார்க்கத்தையும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனம் நமக்கு எடுத்தியம்புகிறது.

ஆனால் இந்த மார்க்கக் கல்வியின் தேவை இன்று குழி தோண்டிப் புதைக்கப்படுவதை கண்முன் காணக்கூடியதாக இருக்கிறது.

அரபு நாட்டுப் பணத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட பல கல்லூரிகளை இன்று காணக்கிடைப்பதில்லை.ஒன்றிரண்டு ஆங்காங்கே இருந்தாலும் அவற்றிற்கும் மார்க்கப்பிரச்சாரத்திற்கும், கொள்கை உறுதிக்கும் தொடர்பில்லை.

பரகஹதெனிய அஸ்ஸலபிய்யா, மஹரகம கபூரிய்யா, காலியில் இருக்கும் இப்னு அப்பாஸ், பாலமுனை ஸஹ்வா போன்ற எத்தனையோ அரபிக் கல்லூரிகளை தவ்ஹீத் பேர் தாங்கி கல்லூரிகளாகவே எண்ணத் தோன்றுகிறது.

குர்ஆனையும்,ஹதீஸையும் மாத்திரம் போதிப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலான பாடத்திட்டங்களில் மத்ஹபு நூல்களே குடி கொண்டுள்ளன.

இன்று வரைக்கும் பிக்கு, தப்ஸீர் என்று இவர்கள் எதைப் படித்துக் கொடுத்தாலும் அந்தப் பாடத்திட்டம் மத்ஹபு சார்ந்ததாகத் தான் இருக்கிறது.

பெயருக்கு குர்ஆன், ஹதீஸ் என்று பேனர் போட்டுக் கொள்வதுதான் இவர்களின் வேலையாக இருக்கிறது.

இஸ்லாமிய அகீதாவை சரியாக மக்கள் மத்தியில் எத்தி வைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தக் கல்லூரிகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மத்தியில் உள்ள தொடர்பைப் பார்த்தாலே இந்தக் கல்லூரிகளில் ஏகத்துவத்தின் நிலையை அடையாளம் காண முடியும்.

ஆசிரியர்களைக் கண்டால் ஆறுக்கு மடியும் மாணவர்கள், வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழையும் போது எழுந்து நிற்கப் பழக்கப்பட்டிருப்பதும் இவர்களின் தவ்ஹீதின்(?) உச்ச கட்டம் எனலாம்.

நபியவர்கள் வரும் போதே நபித் தோழர்கள் அமர்ந்த வண்ணம் தான் இருந்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன ஆனால் இவர்கள் வரும் போது மாணவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று இந்தக் கல்லூரிகளின் சட்டம் சொல்கிறது.

ஸலபிகள் என்ற பெயரால் மூலைச் சலவை செய்யப்படும் இந்த அப்பாவி மாணவர்கள் இவர்களைப் போலவே குர்ஆன்,ஹதீஸ{டன் மூன்றாவதாக ஸலபிகளையும் ஆதாரங்களாக எடுக்கும் ஆத்மீகக் கொள்கையிலேயே வளர்க்கப்படுகிறார்கள்.

கொள்கையில்லை, கோட்பாடு இல்லை, கொண்ட கொள்கையில் தெளிவில்லை மக்கள் மத்தியில் சத்தியக் கொள்கையை உடைத்துச் சொல்ல தைரியமில்லை ஆனால் இவர்கள் கொள்கை பேசுவதில் வள்ளவர்களாம்.

இந்த தவ்ஹீத் பெயர் தாங்கி கல்லூரிகளின் அதிபர், ஆசான்கள் தங்கள் மத்ரஸா வளாகத்திற்குள் பள்ளியைக் கட்டி வைத்துக் கொண்டு பித்அத் வாதியின் பள்ளிக்கு ஜும்மாவிற்கு தாங்களும் சென்று தங்கள் மாணவர்களையும் அழைத்துச் செல்கிறார்கள். தங்கள் மத்ரஸாவில் இருக்கும் பள்ளியில் ஒரு ஜும்ஆ நடத்துவதற்கு இவர்களுக்கு திராணியில்லாமல் போய்விட்டது தான் கவலை.

என்று நீங்குமோ இந்த அவல நிலை.

நாம் அறிந்தவரை காலி இப்னு அப்பாஸ் போன்ற மத்ரஸாக்களில் இன்னும் மத்ரஸா வளாகத்தில் ஜும்மா தொழுகை கிடையாது. மார்க்கத்திற்கு முரனான, பித்அத் நடக்கும் பள்ளியில் தான் இது வரைக்கும் அவர்கள் ஜும்மா தொழுகிறார்கள் என்பதே உண்மை.

தவ்ஹீத் வாதிகளாக தம்மை காட்டிக்கொள்ள முயலும் இந்த மத்ரஸாவின் ஆசிரியர் குழாமும், நிர்வாகமும் உண்மையில் ஜமாத்தே இஸ்லாமியை ஆதரிக்கும் போலி தவ்ஹீத் வாதிகள் என்பதே உண்மை.

தங்கள் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்களுக்கு விஷேட அதிதிகளாக ஜமாத்தே இஸ்லாமியின் அமீரை அழைத்து விருந்து வைப்பதும், தங்கள் இணையதளங்களில் அவர்களின் ஆசிச் செய்திகளை வெளியிடுவதும், அவர்களின் கல்லூரிகளில் இவர்களும் சென்று பகுதி நேர பாடம் நடத்துவதும் தற்போது வழமையாகிவிட்ட கதைதான்.

தங்கள் பிழைப்புக்காக ஒரு காலத்தில் கத்தம், பாத்திஹா ஓதிய மவ்லவிமார்களைப் பார்த்தோம்.

தங்கள் பிழைப்பிற்காக கொண்ட கொள்கையையே அடகு வைப்பவர்களை தற்காலத்தில் பார்க்கிறோம். இவர்களின் இந்த செயல்பாட்டால் மீண்டும் மத்ஹபு கொள்கைக்கு வக்காலத்து வாங்கும் மவ்லவிமார்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்களே தவிர குர்ஆன் சுன்னாவை பேசுபவர்கள் களத்தில் இருப்பது அரிதாகவே உள்ளது.

இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் தொடரும்…… 

செய்திகள்